Thursday, September 8, 2011

பணம் புத்திசாலிக்கு அடிமை மார்லோ 
மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆ னால் அங்கேயே தங்க முடியாது. பெர்னார்ட்ஷா 
பெண்கள் ஆண்களின் மானத்தை காக்கும் ஆடை. அவள் மடியில் வளர்க்கப்படுவது இறையன்பு, சாரதா அம்மையார்.
மிக இருண்ட நாட்களிலும் வழிகாட்டியாக இருக்ககூடியது நம்பிக்கையே. ஸ்ரீ அன்னை.


ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை. அவன் வாழும் முறையில்தான் உள்ளது. வாரியார்.
ஆர்வமே எதிகாலத்தை உருவாக்குகிறது. ஆர்னால்டு.
பிறரை பாராட்டவும் அங்கீகரிக்கவும் சிக்கனம் காட்டாதீர்கள்.ஸ்டீபன்.
பத்து வெற்றிகளைவிட ஒரு சமாதானம் மேலானது. மாண்டேகு.
எந்த ஒரூ செயலிலும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் நிதானமும் சிறப்புக்குரியவை..
நெருப்பு தங்கத்தை புடமிடுகிறது. துன்பம் மனிதனை புடமிடுகிறது. செனேகா.
கல்வியின் பரந்த நோக்கம் மனிதனை சிந்திக்க தூண்டுவதே.

Tuesday, September 6, 2011

திறந்து காட்டுங்கள். இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் பழகுங்கள். ஏமாற்றுவதை விடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேல் என அறிவுறுத்துங்கள். மென்மையான மனிதர்களிடம் மேன்மையாகவ் உம முரட்டு குணம் உடையவர்களிடம் கடினமாகவும் அவனுக்கு பயிர்ச்சி அளியுங்கள். காஆஆஆஆஆஅழ்தமாந சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்றும் கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் சொல்லுங்கள். போலியான நடிப்பைக்கண்டால் எள்ளி நகையாடவும் புகழ்ச்சியை கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிர்ச்சி அளியுங்கள் இது மிக நீண்ட பட்டியல் தான். இதில் உங்கள்ளுக்கு சாத்தியமாநதி எல்லாம் அவனுக்கு கற்று கொடுங்கள் . அவன் மிகநல்லவன் என் அன்புமகன்.
தன மகனின் பள்ளித் தலைமை  ஆசிரியருக்கு ஆபிரஹாம் லின்கன் எழுதிய கடிதம் இது. 
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு , என் மகன் அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல : அனைத்து மனிதர்களும் உண்மையானவர்களும் அல்ல என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு தன்நல அரசியல் வாதி இருப்பதுபோல் அர்பணிப்புமிக்க தலைவரும் இருக்கிறார் என்பதை யும் ஒரு பகைவனைப்போல் ஒரு நண்பனும் இருக்கிராழ்ர் என்பதையும் அவனுக்கு கற்று கொடுங்கள்.
                தோல்வியை எ ற்றுக்கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கதற்று கொடுங்கள். பொறாமைக்குணம் வந்துவிடாமல் கவனமாக பார்துக்கொள்ளும்கள்  ம வுனமாக ரசித்து சிரிப்பதன் ரகசியத்தை கற்று கொடுங்கள் புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு

Saturday, April 30, 2011

some important ideas from dhanvanthri vaidhyam , dhanvantyhri peedam panruti.

தேவர்களும் அசுரர்களும் பார்கடை கடைந்ப்தபோது கடைசியாக அமிர்த கலசத்தை என்திதன்வந்திரி தோன்றினார். அவருக்கு காஞ்சிபுரம் ஸ்ரீரங்கம் இரண்டு இடங்களிலும் தனி சன்னதிகள் உள்ளன. தனிய கோவில் என்பது பண்ருட்டி கும்பகோணம் நெடுனசாலையில் சாலையோரமாகவே கோவில் அமைந்துள்ளது. ஆரிய வைஸ்ய சமூகத்தினரால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ தன்வந்தரி ஆன்மீக மலர் என்னும் அரிய நூலி ன் மூன்றாம் பதிப்பிளிருன்ர்து சில துளிகள். 

இரண்டு டீஸ்பூன் தனியா ஒரு தம்ளர் தண்ணீரில் போட்டு அரை தம்ளர் ஆகும்வரை கொதிக்க வைத்து பாலுடன் சர்க்கரை சேர்த்து அருந்த கொழுப்பு சத்து குறையும் இதயம் வலுப்பெறும்.

ஒரு பிடி கடுகை சுத்தமான தண்ணீரில் அரைத்து மூன்று லிட்டர் நீரில் கொதிக்க வைத்து ஒரு பேசினில் ஊற்றி பொறுக்கும் சூட்டில் இரு கால் பாத்  அம்களையும் படும்படி பத்து நிமிடம் வைத்திருந்தால் இரவு தூக்கமின்மை, மனச்சோர்வு பயம் படபடப்பு  சிதப்ரம்மை அரட்டல் புரட்டல் மனக்குழப்பம் முதலியவை நீங்கும் 
அயிந்து புதினா இலைகளுடன் இரண்டு இலக்க்காயகளை போட்டு கொதிக்க வைத்து ஆறவிட்டு அருந்தினால் விக்கல் நிற்கும். 
சோம்பு சைனஸ் என்னும் பீனிச நோய் உள்ளவர்களுக்கு சிறந்தது. உணவு உண்ட பிறகு சிறிது வாயில் போட்டு மெல்ல நல்ல ஜீரணசக்தி அளிக்கும். 
வசம்பு விழுதி இலை குப்பைமேனி சமஎடை எடுத்து போடி செய்யவும். ஒரு ஸ்பூன் வீதம இரண்டு வேலை இருவத்தி நான்கு நாட்கள் சாப்பிட கருப்பை கிருமிகள் அழியும். கருமுட்டை உருவாகும். 
பெருங்கயத்தை சந்தனக்கல்லில் அரைத்து வயிற்றின்மேல் பற்று போடவயிறு உப்புசம் குறையும்.

Sunday, April 24, 2011

உங்கள் கருத்துக்களில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள் 
மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும் இனிய இதமான வார்த்தைகள் பயன்படுத்தவும் தவறாதீர்கள். 
அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். 
பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள். 
                                                                   தத்துவ ஞானி வேதாத்ரி மகரிஷி. l

from ramraj calendar

உறவுகள் மேம்பட  குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்ட விரிசல்கள் மேலு பெரிதாகாமல் இருக்க 

நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பெசிக்க்போண்டே இருப்பதை விடுங்கள். 
எந்த விஷயத்தையும் பிரச்சனையும் நாசுக்காக கையாளுங்கள். 
விட்டுகொடுங்கள்.
சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகா வேண்டும் என்று உணருங்கள்.
நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். 
உண்மை எது பொய் எது என்று தெரியாமல் விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வ்பதையும் விடுங்கள்.
மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். 
அளவுக்கத்கிகமாக தேவைக்கதிகமாக ஆசை படாதீர்கள்.
எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.  நம்பிவிடாதீர்கள். 


  கேள்விப்படுகிற எல்லா ம்விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
ஒரு மனிதன் தோற்கலாம். அனால் தன தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் 
இன்னொருவனை காரணம் காட்டதுவங்கும்போது அவன் வெற்றி வாய்ப்பை இழக்கிறான். பபல்லேரி. 
மன்னித்தல் தண்டித்தலை விட சிறந்தது.தண்டித்தல் மிருக குணம். மன்னித்தல் மனித குணம். நெப்போலியன். எளிதாக கிடைத்த பொருளுக்கு சரியான மதிப்பு இருக்காது. கார்லய்ல் 
தான் இன்பமாக இருப்பதாக எண்ணுபவனே மகிழ் ச்சியுள்ளவன் மாண்டின். 

அதிகம் அறிந்தவன் குறைவாக பேசுவான். பால்சாக். 
பொறுமை உடையவனின் கோபம் மிகவும் பொல்லாதது., லார்ட் டிவார். உப்பும் புத்திமதியும் கேட்டாலன்றி கொடுக்கவேண்டாம். ஸ்பினோசா 
சிங்கமாக இருந்தாலும் தன குகையில் இருந்தால்தான் மரியாதை. நீட்சே.
பயன் கருதி அன்பு காட்டுவதைவிட காட்டாமல் இருப்பது மேல்.சிறில் காணலி.

Saturday, April 23, 2011

engeyo paditthavai

உதவாத தேவதையை விட உதவிசெய்யும் பேயே மேலானது. சாணக்யன். 
மனம் சொர்கத்தை நரகமாக்கும் நரகத்தை சொர்கமாக்கும். மில்டன் 
உயர்ந்த விஷயங்களை எளிமையாக கூறுவதே சான்றாண்மை. எமர்சன். 
தன வலிமையை கணித்த பிறகே செயலில் இறங்கபெம்டும். சாணக்யன்.
வாழ்க்கையில் வெற்றி அடைய கஷ்டங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்.நெப்போலியன்.
உலகில்  வெற்றி பெற வேண்டுமானால் ஏற்கனவே நீங்கள் வெற்றி பெற்ற 
மாதிரி தோற்றம் தரவேண்டும்.  நெப்போலியன்.
ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் அதற்க்கு உரிய மதிப்பு அளிக்கப்படும். ரஸ்கின்.
உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரியதாக உங்கள் இதயங்களை விரிவாக்குங்கள்.விவேகானந்தர்.
வேலைக்காரனாக இருக்க கற்றுக்கொள் பிறகு எஜமானனாகும் தகுதி தானாக வரும். விவேகந்தார்.

Saturday, March 26, 2011

holywood trip

பாண்டியன் வீட்டிலிருந்து ஹாலிவுட் அரை மணி நேர பயணம் தான். சரியாக இடம் பார்த்து காரை நிறுத்த ஒருமணி நேரம் ஆகிவிட்டது அவ்வளவு கூட்டம். ஹாலிவுட் என்பது ஊரின் பெயர். அதில் முழுக்க முழுக்க யுநிவேர்சல் ஸ்டுடியோவின் அமைப்புதான். உள்ளே நுழைவதற்கு முன் உள்ள கடைத்தெருவே எதோ சினிமா செட்டிங் போல் ஒரு அழகு. ஏற்கனவே டிக்கட் கையில் இருந்ததால் மிக நீண்ட கியூ தவிர்க்கப்பட்டது. எல்லா ஏற்பாடுகளையும் நிஷா கனகச்சிதமாக முடித்துவைத்திருந்தது பாராட்டப்படவேண்டிய விஷயம்.  எத்தனை மணிக்கு எது திறம்திருக்கும் எதை முக்கியமாக பார்க்கவேண்டும். என்ட்டிறு திட்டமிட்டு வைத்திருந்தாள்
              மிக பிரபலமான படங்களை எப்படி எடுத்தார்கள் என்பதை ஒவ்வொரு இடத்திலும் வர்ணனையோடு காட்டுகிறார்கள். ஆங்கிலப்படங்கள் பார்த்து பழகிய நிஷாவும் பாண்டியனும் மிகவும் ரசித்தார்கள். சில ரைடுகளில் நான் ஏறவில்லை. ரிஸ்க் இல்லாத ரைடுகளுக்கு என்னை அழய்த்துப்போனார்கள். அடுத்து இன்ன காட்சிவரும் பயப்படாதீர்கள் என எனக்கு முன்பாகவே சொல்லிவிடுவார்கள். 
   ஒரு கதாநாயகியை வில்லன் க டத்தி போய்விடுவான். அவளை கதாநாயகன் எப்படி தண்ணீரில் நீந்தி நெருப்பில் குதித்து பெரிய கயிற்று ஊஞ்சல்களில் ஊசலாடி மீட்டு வருகிறான் என்பதை நடித்து காட்டுகிறார்கள். 

Monday, February 28, 2011

elango birthday

காலையில் குளித்துவிட்டு வந்ததும் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டான். இன்று இரவு லாஸ் ஏஞ்சலசுக்கு கிளம்புகிறோம். இத்தனை நாளும் பிள்ளையும் மருமகளும் எல்லா இடங்களையும் சு ற்றிகாட்டினார்கள். பேரபிள்ளைகள்பேசி  மகிழ்ந்த்தார்கள் இதெல்லாம் மறுபடி எப்போது கிடைக்குமோ என மனம் வருந்துகிறது. இளங்கோ ஒவ்வொரு இடத்திலும்  எங்களுக்கு புரியும்படி விளக்கி சொல்வான் நிதானமாக சுற்றி காட்டினான். லதா சலிக்காமல் எல்லா இடங்களை வீடியோ எடுத்து  கொடுத்தாள் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தோம் இந்தியாவில் இருந்தபோதுகூட இவ்வளவு பிள்ளைகளுடன் சந்தோஷமாகஇருந்ததில்லை.aeir

Sunday, February 27, 2011

independenceday

அன்று மாலை ஆறுமணிக்கு மழை வரக்கூடும் என்று வானிலை அறிவிப்பு செய்திருந்தது என் கடவுள் பிரார்த்தனைக்கு முன் வானிலை அறிவிப்பாவது ஒன்றாவது நீ உள்ளன்போடு எங்களை அழைத்துவந்து இருக்கிறாய் கடவு ள் மழையை கொண்டு பொய் விடுவார் என்றேன். அதுபோலவே திரண்டுவந்த மேகம் களைந்து   போய்விட்டது மகிழ்ச்சியில் எங்கள் மனம் துள்ளி குதித்தத் 
பத்தடிக்க க  பத்து நிமிடங்கள் இருந்தபோது  டிரையல் வானவ்டிக்கை ஐந்து நிமிடங்கள். சரியாக பத்துமணிக்கு நான்கு போர்விமானங்கள் விர்ரென்று வானில் பறந்து சென்றன உடனே வானவேடிக்கை தொடங்கிவிட்டது. ஐம்பது மாடி கட்டிடங்கள் எல்லாம் நாளில் ஒரு பங்கு உயரம் கூட இல்லாத உயரத்தில் வண்ணமயமான அற்புதம் ஆற்றின் நடுவே அமைந்துள்ள தீவு போன்ற இடத்தில் பொருத்தியுள்ள வெடிகளை கரையிளிருந்துகொண்டே ரொமோட் மூலம் வ்டிக்கசெய்கிரார்கள். ஒரு பிலியன் டாலர் அதாவது நம் பணத்தில் நாலு கோடி ரூபாயாம் முன்னொரு கான்செப்டுகள். அதாவது நிமிடத்துக்கு பத்து ரக வானங்கள். ஒவ்வொருமுறையும் மக்கள் குழந்தைகள் போல் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் வருடாவரோம் ஒருபுது வானத்தை அறிமுகப்படுத்துவார்கலாம். 
இந்த வரட்டும் சங்கிலிகள் ஒன்றோடொன்று கொர்த்தாற்போல் ஒன்றும் வானில் உயரப்போய் சந்தடியின்றி வெடித்து குடை போல் விரிந்து பொன் மாறி பொழிவது போல் தங்கத்துளிகள கொட்டியது. அதைகண்டு ஏற்பட்ட ஆரவாரம் சொல்லில் அடங்காது, அதோடு முடிந்தது. ஐந்து லட்சும் மக்களும் ரயில் மூலம் அவரவர்கள் காரை விட்டுவந்த இடத்துக்கு திரும்ப வேண்டும் ஒரு தள்ளு முள்ளு பரபப்பு இன்றி ஒழுங்கு வரிசையில் ரயிலில் இடம் பிடித்து ஏறுகிற அழகே அழகு ஒரு மணி நேரம் பிளாட்பாரத்திலேயே உட்கார்ந்திருந்துவிட்டு நிதானமாக ரயில் ஏறி காரை எடுத்துகொண்டு மண் நிரந்த மகிழ்வோடு வீடு திரும்பினோம் மழைவராமல் காத்த கடவுளுக்குநன்றி. 
ஒரு ஜென் கதை படித்திருப்பீர்கள். மழைவேண்டி ஒரு யாகம் சொற்பொழிவு நடந்ததாம். முடிவில் மழை ஜோவென கொட்டியதாம். எல்லோரும் அந்த பெரியவரை பாராட்டினார்கலம். அவர் சொன்னாராம். அதோ கடசிவரிசையில் ஒரு சிறுவன் குடையுடன் வந்து நிற்கின்றானே அவன் நம்பிக்கைக்கு மதிப்பளித்து கடுவுள் மழை போழியவைத்துள்ளார் என்றாராம். நம்பிக்கையுடன் செய்யும் ப்வேண்டுதல் கட்டாயம் பலனளிக்கும் என்பதை என் வாழ்நாளில் பலமுறை  அநுபவித்துல்லெந் நீங்களும் இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்.  ui
வானவேடிக்கைக்கென்ன எங்கள் வீடு மாடியில் இருந்து பார்த்தாலே அருமையாக தெரியுமே மூன்று கிலோமீட்டர் நடப்பனேன் என்று நண்பர் ஒருவர் கூறினார். ரமணன் வானில் ஜொலிக்கும் வர்ணஜாலம் தெரியும் வழிநெடுக உள்ள திருவிழாகோலம் எங்கிருந்து புறப்பட்டு வானில் சீறிப்பாய்கிறது எப்படி வெடிக்கிறார்கள் இதையெல்லாம் சாஆஆஆர்லஸ் நதிக்கரையில் உள்ள பாலத்தின் மீது முன்னாடியே பொய் இடம் பிடித்து பார்ப்பதுஒறு தனி ஆனந்த அனுபவம் என்று கூறினான். அது மிகையில்லை 
மூன்று மணி முதலே பாலத்துக்கு நான்குபுறமும் மூன்று மைல்தொலைவிலேயே போக்குவரத்தை நிறுத்திவிட்டார்கள். 
அம்ரிகாமக்களுக்கு கடவுள் கொடுத்த காலை நன்றாக பயப்பதுத்துவதே இந்த ஒருநாலாகத்தான் இருக்கும். வழி நெடுக டெண்டு போட்டுக்கொண்டு உட்கார்ந்ததும் படுத்தும் ஆனந்த களிப்பில் ஆழ்ந்த்திருந்தார்கள். பாசன் பாப் என்ற இசைக்குழுவின் கச்சேரி நூறு இருநூறு டாலர் என்று டிக்கட் எடுத்து கேட்கவேண்டிய பாடு இனமாக என்றால் அந்த இடத்தை சுற்றி கூட்ட நெரிசல். நம் நாடு திருவிழா போன்று அங்காங்கு பர்கர் பீட்சா கூல்டிரின்க் கடைகள். பாலத்தின் ஓரத்தில் இடம் பிடித்து உட்கார்ந்து விட்டோம். கைவண்டியில் ஒரு மாத கைக்குழந்தை மறுபக்கம் தொண்ணூறு வயது மூதாட்டியை தள்ளுவண்டியில் கொண்டுவரும் மகன் அல்லது மகள். வருடம் பூராவும்  ள்ukkஎந்திர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்தவாரம் முழுக்க குதூகலமும் கொண்டட்டமும்தான் 

BOSTON TRIP

.எம் ஐ டி காலேஜும் மற்ற காலேசுகளும் வரிசையாக உள்ளன நம் நாட்டு  மன்மோகன் சிங் சுப்பிரமணியசாமி  ப சிதம்பரம் மணி ஐயர் போன்றவர்கள் படித்தார்கள் அங்குள்ள எம் ஐ டி யில் படிப்பதுனம் சென்னை எம் ஐ டி யில் படிப்பதுபோன்ற பெருமைக்குரிய விஷயம். ஏனென்றால் அவர்கள் தான் பிற்காலத்தில் நோபல் பரிசு பெறுபவர்களாகவும் ஆராசிகள் செய்து பெரிய பெரிய கண்டு பிடிப்புகள் செய்பவர்கள். பாஸ்டன் ரயில் நிலைய சுவரில் 1800 முதல் நேற்று வரை யார் யார் என்ன சாதனை புரிந்தார்கள் என புகைப்படத்துடன் போட்டுள்ளது அந்த கல்லூரியை சார்ந்த அறுபச்த்தைந்து பேர் நோபல் பரிசு பெற்றுள்ளார்கள் இது ரெண்டாயிரம் வருட கணக்கு. 
அடுத்து டீபார்ட்டி ஷிப் என்ற இடத்துக்கு போனோம். இங்க்ஹிலாந்திளிருந்து வந்த டீ நிறைந்த கப்பலுக்கு வரி செலுத்தினால்தான் உள்ளே விடுவோம் என்று இங்கிலாம்து அரசு கூறியதை எதிர்த்து இரவோடிரவாக அத்தனை பாக்கட்டுகளையும் கடலில் கொட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கலம். அந்த நினைவாக ஒரு பழயகப்பல் நிற்கிறது. அதில் நாடகம் போன்று நடித்து காட்டுகிறார்கள், அமெரிக்கர்கள் எதுதில் காசு பார்க்கமுடியுமோ பார்க்கிறார்கள் 
மூன்று மணிக்கு சார்லஸ் நதிக்கரைக்கு வந்துவிட்டோம் அங்குதான் சுதந்திரதின வானவேடிக்கை நடக்கும் இடம். 
t

american independence day july 4 th

அமெரிக்காவின் சுதந்திர நாளை பார்த்துவிட்டுதான் போகவேண்டும் என்று ரமணன் அன்பு கட்டளை இட்டுவிட்டான். 
காலையிலேயே அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் காரில் மடக்கு transistergநாற்காலிகள் படுக்கை விரிப்புகள் ஆகாரங்கள் வாக்மன் என எல்லாம் எடுத்துகொண்டு பயனப்பட்டுவிட்டார்கள். 
நாங்கள் ட்ராலி டூர் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். எங்குவேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் எம்குவேண்டுமானாலும் இறங்கிகொள்ளலாம் அப்படி டிக்கட் நாங்கள் எங்கும் இறங்காமல் வழிநெடுக பார்த்து கொண்டே போனோம். அழகிய தெருக்கள் அன்று விடுமுறை நாள் எனவே கார்களின் நடமாட்டம் அதிகம் இல்லை. ஒரு காலத்தில் அமெரிக்காவிலேயே எனக்கு பாசன் நகர வீதிகளில் தான் உலாவ பிடிக்கும் என்று கென்னெடி கூறினாராம் அது மிகையில்லை. பழமையான கட்டிடங்கள் குறுகலான தெருக்கள் மறுபடி பெரிய தெருக்கள் பழங்காலத்துக்கு போய்விட்ட உணர்வு. முதன் முதலில் ஆங்கிலேயர்கள் உருவாகிய நகரம் என்பதால் இதற்கு நியூ இங்கிலாந்து பகுதி என்றே பெயர். தெருக்கள் பெரும் இங்கிலாந்து பாணியிலேயே அமைந்த்துள்ளன.
சார்லஸ் நதிக்கரையின் மறுபக்கம் cambridge என்னும் நகரம் அமைந்த்துள்ளது அங்குதான் உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் ம இ Tl

american independence day july 4 th

அமெரிக்காவின் சுதந்திர நாளை பார்த்துவிட்டுதான் போகவேண்டும் என்று ரமணன் அன்பு கட்டளை இட்டுவிட்டான். 
காலையிலேயே அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் காரில் மடக்கு transistergநாற்காலிகள் படுக்கை விரிப்புகள் ஆகாரங்கள் வாக்மன் என எல்லாம் எடுத்துகொண்டு பயனப்பட்டுவிட்டார்கள். 
நாங்கள் ட்ராலி டூர் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். எங்குவேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் எம்குவேண்டுமானாலும் இறங்கிகொள்ளலாம் அப்படி டிக்கட் நாங்கள் எங்கும் இறங்காமல் வழிநெடுக பார்த்து கொண்டே போனோம். அழகிய தெருக்கள் அன்று விடுமுறை நாள் எனவே கார்களின் நடமாட்டம் அதிகம் இல்லை. ஒரு காலத்தில் அமெரிக்காவிலேயே எனக்கு பாசன் நகர வீதிகளில் தான் உலாவ பிடிக்கும் என்று கென்னெடி கூறினாராம் அது மிகையில்லை. பழமையான கட்டிடங்கள் குறுகலான தெருக்கள் மறுபடி பெரிய தெருக்கள் பழங்காலத்துக்கு போய்விட்ட உணர்வு. முதன் முதலில் ஆங்கிலேயர்கள் உருவாகிய நகரம் என்பதால் இதற்கு நியூ இங்கிலாந்து பகுதி என்றே பெயர். தெருக்கள் பெரும் இங்கிலாந்து பாணியிலேயே அமைந்த்துள்ளன.
சார்லஸ் நதிக்கரையின் மறுபக்கம் cambridge என்னும் நகரம் அமைந்த்துள்ளது அங்குதான் உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் ம இ Tl

american independence day july 4 th

அமெரிக்காவின் சுதந்திர நாளை பார்த்துவிட்டுதான் போகவேண்டும் என்று ரமணன் அன்பு கட்டளை இட்டுவிட்டான். 
காலையிலேயே அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் காரில் மடக்கு transistergநாற்காலிகள் படுக்கை விரிப்புகள் ஆகாரங்கள் வாக்மன் என எல்லாம் எடுத்துகொண்டு பயனப்பட்டுவிட்டார்கள். 
நாங்கள் ட்ராலி டூர் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். எங்குவேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் எம்குவேண்டுமானாலும் இறங்கிகொள்ளலாம் அப்படி டிக்கட் நாங்கள் எங்கும் இறங்காமல் வழிநெடுக பார்த்து கொண்டே போனோம். அழகிய தெருக்கள் அன்று விடுமுறை நாள் எனவே கார்களின் நடமாட்டம் அதிகம் இல்லை. ஒரு காலத்தில் அமெரிக்காவிலேயே எனக்கு பாசன் நகர வீதிகளில் தான் உலாவ பிடிக்கும் என்று கென்னெடி கூறினாராம் அது மிகையில்லை. பழமையான கட்டிடங்கள் குறுகலான தெருக்கள் மறுபடி பெரிய தெருக்கள் பழங்காலத்துக்கு போய்விட்ட உணர்வு. முதன் முதலில் ஆங்கிலேயர்கள் உருவாகிய நகரம் என்பதால் இதற்கு நியூ இங்கிலாந்து பகுதி என்றே பெயர். தெருக்கள் பெரும் இங்கிலாந்து பாணியிலேயே அமைந்த்துள்ளன.
சார்லஸ் நதிக்கரையின் மறுபக்கம் cambridge என்னும் நகரம் அமைந்த்துள்ளது அங்குதான் உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் ம இ Tl

whale watch at boston

சரியாக ௧௨ மணிக்கு படகில் ஏறினோம் இருபது மைல் போகும்வரை குளிரவில்லை. நான்மட்டும் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டேன். எடுத்துப்போன சாப்பாட்டை சாப்பிட்டோம். சில நாட்களில் ஒரு திமிங்கிலம் கூட கண்ணில் தென்படாதாம். ஒருமணிநேரம் சென்று கரைக்கு திரும்பிவிட வேண்டியதுதான், ஆனால் இருபது டாலர் கட்டணம் ஆகையால் எல்லோருக்கும் பாஸ் கொடுத்து மற்றொரு நாள் வர அனுமதிப்பார்கலம். ஒஉள்ளூர் வாசிகள் என்றால் அடுத்த வார இறுதியில் வருவார்கள். நம்மைபோன்று வெளியூர்வாசிகளுக்கு லக் இருந்தால் பார்க்கலாம். 
                     சின்ன வகுப்புகளில் பூமி உரைநடை என்பதற்கு கடற்கரைக்கு சென்று பார்த்தால் கப்பல் சிறிது சிறிதாக கண்ணுக்கு மறைவதைகாநலம்.அதிலிருந்து பூமி உரைண்டைவடிவம் என்பது தெரியும் என படித்தும் இருக்கிறோம் பார்த்தும் இருக்கிறோம் .இங்கு நேர்மாறாக படகு கடலில் போக போக கரையிலிருக்கும் கட்டிடங்கள் எல்லாம் சிறிது சிறிதாக மறைந்துனான்கள் ஐம்பது கல் தூரம் போனதும் முற்றிலுமாக மறைந்துவிட்டன. பூகோள உண்மை.
  குறிப்பிட்ட இடம் வந்ததும் படகின் என்ஜினை நிறுத்திவிடுகிறார்கள். உடனே படகு அலைகளின் வேகத்தினால் ஆடத்தொடங்கிவிட்டது. நான் பயந்துபோய் ஒரு ஓர இருக்கையில் உடகார்ந்து விட்டேன், அப்பாவும் ரமணனும் த்ய்ரியாமாக படகின் ஓர கைபிடியை பிடித்துகொண்டு நின்று கொண்டே வந்ததார்கள்/
ஒரு திமிங்கிலம் வருகிறது நன்றாக பாருங்கள் வீடியோ ரெடி செய்து கொள்ளுங்கள் என்று அறிவிக்கிறார்கள். ஆ வந்துவிட்டது முப்பத்தைம்து அடி நீளமுள்ள திமிங்கிலம் வாழ் பகுதிமட்டும் கடல் அலைகளுக்கு மேலே ட்டிஹெரின்தது. அதற்குள் அடுத்த பக்கம் அறுபத்தைந்து அடி நீளமுள்ள பெவ்ரிய திமிங்கிலம் உடலை புரட்டிக்கொண்டும் தலை வாழ் என்று மாறி மாறி நீருக்கு மேல் எழும்பி விளையாடியது அற்புதமான காட்சி. ஒரே ஆரவாரத்துடன் எல்லோரும் படகின் ஒரே பகுதிக்கு செல்வதால் படகு சாய்கிறது நான் ரங்கே ரசித்தேன் உய்ருடன் ஊர் போய சேருவோமா என்று ஆகிவிட்டது. ஐந்து நிமிடங்கள் மிஞ்சி போனால் பத்து நிமிடங்கள் தான் படகை திருப்பிவிட்டார்கள். 
          ரமணன் தயவில் யாருக்கும் எளிதில் கிடைக்காத கட்சி. நன்றி 

boston visit

முதலில் பாஸ்டனில் சென்ற இடம் பிரிட்டிஷ் ராணுவத்தை எத்திறத்து அமெரிக்கா முதன் முதலில் போரிட்ட இடம். அப்படியா பார்க் ஆக இன்றும் பழமை மாறாமல் உள்ளது பிறகு டவுனுக்கு போய் விட்டோம். ப்ருடென்ஷியல் டவர் என்ற இடத்தில் ஐம்பதாவது மாடிக்கு சென்றோம் எல்லா இடத்திலும் டிக்கட்தான் அங்கிருந்து பாஸ்டன் நகரின் அழகை சுற்றிப்பார்த்து ரசித்தோம். 
அடுத்து ஹால்லோ டவர் என்ற நியிவு இடத்தை பார்த்தோம் ஹிட்லரால் 
படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் அனைவரின் பெயரையும் பொடிபொடிய எழுதியுள்ளார்கள் மறுநாள் உலகில் வேறு எங்குமே காணமுடியாத வேல் வாச் 
என்ற இடத்திற்கு அழைய்த்துபோவதாக சொன்னான். உலகிலேயே முநூற்று எழுபத்தைந்து திமிங்கிலங்கல்தான் உயிர் வாழ்கின்றனவாம். அவை இந்த சீதோஷ்ண நிலையில் இனப்பெருக்கத்துக்காக பாஸ்டன் துறைமுகத்துக்கருகில் நான்கு மாதங்களுக்கு வாழுமாம். தனமும் மூன்றுமுறை விசைப்படகுகளில் மக்களை ஏற்றிசென்று கடலில் ஐம்பது மைல் தூரத்துக்கப்பால் அவை வருவதை காட்டி அழைத்து வருவார்களாம் போக இரண்டு மணி நேரம் ஒரு மணிநேரம் அங்கு பார்க்க திரும்பிவர ஒருமணி நேரம். மதியம் பன்னிரெண்டரை மணிக்கு டிக்கட் வாங்கி இருந்தான் சிலருக்கு கடல் காற்று வாந்தி வரும் என்பதால் எதாவது லேசாக சாபிட்டுவிட்டுவரவேண்டும் கடல்காற்று குளிரும் கம்பளி உடை கொண்டுவரவேண்டும் இதெல்லாம் முன்பாகவே சொல்லிவிடுகிறார்கள்.
காக நaa

Saturday, February 26, 2011

nayagaratrip

சுவையான சம்பவங்களே இருந்தால் எப்படி. கொஞ்சம் கஷ்டப்பட்ட சம்பவமும் சொல்கிறேன். நாங்கள் இருவரும் ரமணனுடன் பப்பாலோ  விலிருந்து பாஸ்டன் வந்ததும் லதாவின் பர்ஸ் உங்களிடம் தவறி வந்துவிட்டத என்று போன்
இல்லை என்று நாங்கள் சொன்னதும் திருடு பொய் விட்டதென்று தெரிய வந்தது  அதற்குள் இருந்த இருநூறு டாலர் பணமும் க்ரடிட் கார்டில் ரெண்டாயிரம் ரூபாய்களும் திருடு போனது தெரிந்தது. நம் நாடுபணத்திற்கு   ஒரு லட்சம் ஆயிற்றே என்று நாங்கள் ல்துடித்து போய்விட்டோம் ரமணன் மட்டும் அவர்கள் கட்டாயம் இன்சூர் செய்திருப்பார்கள். முழு பணமும் கிடைத்துவிடும் என்றான். லதா பர்ஸ் தொலைந்ததை கண்டுபிடித்து தன அக்கவுண்டை ப்ளாக் செய்ய சொல் வதற்குள்  பலே திருடன் எடுத்த பத்தாவது நிமிடம்  ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஜீன்சும் மற்ற ஆயிரம் ரூபாய்க்கு எதோ ஒன்றும் வாங்கி விட்டிருக்கிறான். நல்லகாலம் பாங்கில் பணம் எடுக்க முயற்ச்சித்து தோற்று விட்டான்.திருடு போனது பைசா பாக்கியில்லாமல் கிடைத்துவிட்டது அதுதான் அமெரிக்கா வாழ்க.

nayagara

காலை கிளம்பி சென்றோம் கஸ்டம்சில் எங்கள் விசாவையும் ரமணன் கிரீன் கார்டையும் பார்த்து விட்டு விட்டார்கள் நடுவில் ஒரு பாலம் தான் அமெரிக்கர்களுக்கு விசா தேவையில்லை நடந்தே போய் விடுகிறார்கள்.
அமைதியாக வரும் தண்ணீர் படுவேகமாக விழுவதையும் நம்மை வெகுதொலைவிலேய நிறுத்தி அழைத்துவந்து விட்டார்கள் யாராலும் கிட்ட நெருங் கவே முடியாது என்பதும் தெரிந்தது.
டிக்கட் வாங்கி ஒரு மாடிக்கு அழைத்துசென்றான் அங்கிருந்து பார்த்தால் நயாகராவின் அழகு தோற்றம் முழுமையாக தெரிந்தது 
எலிசபத் ரோஸ் கார்டன் என்ற இடத்தில் உலகில் உள்ள அத்தனை வகை ரோஜாக்களும் காணமுடிந்தது. 

nayagaraa and boston trip

என் தம்பி மகன் ரமணன் பாஸ்டனில் உள்ளான்  அவனை நியு ஜெர்சி வந்து எங்களை அழைத்துபோக சொன்னோம்
இளங்கோ காரில் இடம் போதாது.,நீண்ட பயணம் பின் சீட்டில் நான்கு பேர் உட்கார்ந்து போவது குற்றம் . காலை ஒன்பது மணிக்கு புறப்பட்டு மாலை மூணு மணிக்கு பப்பால்லோ என்ற இடத்தை அடைந்த்தோம் அதுதான் நயாகர நீர்வீழ்ச்சி இருக்கும் இடம். சமதரையிலிருந்துநூற்றி முப்பத்து நாலு ௧  அடி கீழே லிப்டில் இறங்கி தண்ணீர் துறைக்கு வந்தோம். எல்லோருக்கும் வீசி எறிந்துவிடும் மழைகோட்டுகள் தந்தார்கள், அமெரிக்க பக்கம் உள்ள ஏரியிலிருந்து ஆரவாரமாக நூற்றி இருபது அடி  உயரத்திலிருந்து ஒரு இடத்திலும் நூற்றி இருவது அடி உயரத்திலிருந்து ஹுஒருஇடத்திலும் விழுகிறது. இரண்டாவதுதான் குதிரை லாடம் போன்று வடிவம் உள்ளது. ஒரு மனிதரை பக்கவாட்டில் பார்ப்பதுபோல் உள்ளது. கனடா பக்கம் சென்றால் எதிரே புறப்பட்டு வந்து வீழும் அழகை ரசிக்கலாம். ரமணன் ஏற்கனவே சொல்லியபடி இளங்கோ எங்கள் இருவருக்கும் விசா 
வாங்கியிருந்தான் நாளை அங்கு போகப்போகிறோம்.படகில் ஏற்றி நீர்வீழ்ச்சி கொட்டும் இடம் நோக்கி அழைத்து சென்றார்கள். அனால் எவ்வளவு  அருகில் என தெரியவில்லை. ஒரே புகை மூட்டமாக ஜோ என்ற காதைபிளக்கும் இரச்சலுடன் விழுவதை பார்க்கவே பயங்கரம். நன்றாக நனைந்து விட்டோம். பத்து நிமிடங்கள் கழித்து கரைக்கு அழைத்து வந்து விட்டான். ஆறு மணிக்கு கனடா பக்கமிருந்து நீர்வீழ்ச்சியின்மேல் வண்ணவிலக்கொலி  அடிக்கிறார்கள். அதை பார்த்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினோம் நல்ல இந்திய உணவு கிடைத்தது.

waashington trip

அடுத்து காங்கிரஸ் லய்ப்ரரி என்ற இடத்துக்கு போனோம் அந்த கட்டிடத்தின் உள்ளே அழகா அது இரண்டு கண்கள் போதாது மேற் கூரையில் அழகிய வண்ண ஒ வியங்கள் சிற்ப வேலைப்பாடுகள்  ஒவ்வொரு அறையும் ஒரு கலை பொக்கிஷம் நிதானமாக சுற்றிபார்க்க மூன்று நாட்கள் பிடிக்கும் அப்போதும் விட்டுவர மனம் வருமா தெரியவில்லை. நியுயார்க்கில் வானுயர்ந்த கட்டிடங்கள் என்றால் இங்கு அகலமான பிரும்மாண்டமான காடிடங்கள். முப்பது நாற்பது படிஏறி தான்மேலே போகவேண்டும். நம மூர் நான்கு வீடுகள் சேர்ந்த்த அகலம் ஒரு கட்டிடம். ஆர்வ மிகுதியால் இளைஞர்களுக்கு ஈடாக ஓடியாடி எல்லா இடமும் பார்த்தோம் பணம் படைத்தவர்களுக்கு  கூட இந்தவாய்ப்பு கிடைக்காது.ஆண்டவனுக்கு நன்றி. ly

waashungton trip

அடுத்து கொரியா போர் இரண்டாவது உலகப்போர் வியட்நாம் போர இவற்றில்உயிரிழந்த வீரர்களின் நினைவு இடங்களை பார்த்தோம். உலகின் பெரிய வல்லரசான அமெரிக்காவில் எவ்வளவு உயிர் த்யாகங்கள் என்று கண்ணீர் வராமல் இல்லை. டூரிச்ட்காரனே காலையிலேயே குரூப் டிக்கட் வாங்கி விட்டார். திருப்தி shed  மாதிரி மூன்றாவது செட்டில் உட்கார்ந்து இருந்தோம். சரியாக 12 மணிக்கு ஜனாதிபதி மாளிகை பார்க்க உள்ளே விட்டார்கள், ஒரு இடத்தில மட்டும் சோதனை பெரிய கெடுபிடி ஒன்றுமே இல்லை. அங்கு மூன்று அறைகள் சிவப்பு அறை பச்சை அறை நீல அறை என்று பெயரிடப்பட்டு அதற்க்கேற்றர்ப்போல் சுவர் அலங்கார பொருட்கள் தரை வியப்பு எல்லாம் அந்தந்த நிறத்தில் வெகு அழகாக இருந்தன, ஒரு சார்ஜென்டிடம் என் பெற்றோர் இந்தியாவிலிருந்து வந்துள்ளார்கள் ஜனாதிபதி எங்கு உள்ளார் என அறிய ஆவலாக உள்ளார்கள் என்றுஇளங்கோ கேட்டான்.உடனே அவர் மிக மரியாதையுடன் பக்கத்து அறையில் மதிய உணவு உட்கொள்கிறார் என்று கூறுங்கள் என்றார். அது அமெரிக்கா நம் ஊர் கவுன்சிலர் வீடு பக்கம் கூட சாமான்யன் நெருங்க முடியாதே மூன்று அறைகளையும் சுற்றி பார்த்து விட்டு வெளியே வந்த்தோம் அங்கு ஒரு வாடா இந்திய தம்பதியினர் ஜார்ஜ் புஷ் கிளிண்டன் இருவரின் கட் அவுட்களுடன் நின்றிருந்தார்கள். அதன் பக்கத்தில் நின்றுகொண்டு நம் காமராவில் படம் எடுத்துக்கொள்ள காசு நாங்களும் எடுத்துக்கொண்டோம். சொன்னாலொழிய யாருக்கும் தெரியாது அவ்வளவு நேர்த்தியாக உள்ளது. 
u

Friday, February 25, 2011

waashington trip

மறுநாள் பஸ்ஸில் கிளம்பினோம்.  லிங்கன் மெமோரியல் முதலில் பார்த்தோம். 
பிறகு வியட்நாம்போரில் உயிரிழந்தவர்களின் கல்லறை மற்றும் கென்னடியின் 
கல்லறை பார்க்க கிளம்பினோம். வழிநெடுக காணிக்கல் போல் வெள்ளை வர்ணம் தீட்டப்பட்ட கற்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான 
கல்லறைகளை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மனம் மிகவும் வேதனைக்குள்ளனது. அதன் முடிவில் சலவை கர்க்கலாளன கல்லறைகள். அவை உயர் பதவி வகித்து உன்னுயிர் நீத்த ரா ணுவ மேஜர்கள் கல்லறை. 
இறுதியில் ஒரு இடத்தில் நூறு அடி நீளத்திற்கு ஒரு ஜவான் கையில் துப்பாகியுடன் சல்யூட் அடித்தபடி குறுக்கும் நெடுக்குமாக உலாவுகிறார். இரண்டுமணி நேரத்திற்கு ஒருவர் என நாள் முழுவதும் நடக்குமாம். கென்னடி 
கல்லறை ஒரு பளிங்கு கல்லில் எழுதி உள்ளது.veru 

waashington trip

வாஷிங்டனில் அங்கங்கு காரை நிறுத்துவது சிரமம் அதனால் பேக்கேஜ் 
டூர் பஸ்ஸில் மறுநாள் போகலாம். இன்று அதில் விடுபட்ட இடங்களை பார்த்துவிடலாம் என்று கிளம்பினோம். 
வாஷிங்டன் ரயில் நிலையம் மிகப் பிரம்மாண்டமான கட்டிடம். 
அழகிய வேலைபாடுகள் மிக்க கூரை நடுவில் உள்ளது.  நான்கு புறமும் மிக நீண்ட வராந்தாக்கள். பெருபாலும் பாதாள ரயில்தான்.முதலில் ஜார்ஜ் வாஷிங்டன் நினைவு ஸ்தூபி. வியட்நாம் போரில் உயிரிழந்தவர்களுக்காக கட்டப்பட்டது. 2 லைட் ஹவுஸ் உயரம்  எதோ பராமரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்ததால் உள்ளே அனுமதிக்கவில்லை. இல்லையென்றல் லிப்ட் மூலம் உச்சிக்கு சென்று பார்க்கலாம்.நான்குபுறமும் ஒரு ஜன்னல்கூட கிடையாது. உச்சியில் ஒரே ஒரு சாளரம். 
அதன் பிறகு அருகே உள்ள ஐ மாக்ஸ் திரையரங்கு.  200 எம்  எம்  டுபளை என்ற 
படம்  மனிதன் முதன்முதலில் எப்படி கிளைடரில் பறக்க முயற்ச்சித்தான் என்றும் இன்று எப்பெடி விமானமூலம் அமெரிக்க உள்ளது என்று சுற்றிக்கட்டுவதுபோல் முடிகிறது. வானுயர்ந்த கட்டிடங்கள் உலக அதிசயமான கிராண்ட் கன்யான் பள்ளத்தாக்கு நயாகரா நீர்வீழ்ச்சி என அமெரிக்காவின் பார்க்கவேண்டிய அனைத்து இடங்களையும் உட்கார்ந்த இடத்திலேயே காட்டிவிட்டார்கள். 

waashington trip

அடுத்து அருகில் உள்ள லூரே கேவ் என்ற இடத்திற்கு சென்றோம். பூமி 
மட்டத்திற்கு 134 அடி கீழே உள்ளது. ஒரு பரந்த தெரு அளவுக்கு நீல அகலம் கொண்ட குகை  பூமியில் எப்போதோ பெய்த மழை சுண்ணாம்பு படிவங்கள
மாறி கூரையிலிருந்து ஆலம்  விழுதுகள் போல் தொங்குகின்றன நம் வீட்டு பிரிட்ஜில் உள்ளே தொங்குமே அதுபோல். ஆங்காங்கு பளிங்கு போன்ற நீர் தேக்கங்கள் .மனிதர்கள் தலைநிமிர்ந்து வசதியாக நடந்து போகலாம். ஒவ்வொரு அழகிய தோற்றம் உள்ளம் இடத்திலும் மின் விளக்குகள் அமைத்து உள்ளார்கள். வழிகாட்டி சுவைபட விளக்கம் கூறுகிறார். இயற்கையின் அழகை அமெரிக்கரின் புத்திசாலித்தனம் வருமானமிக்க சுற்றுலா தளமாக மாற்றிவிட்டது. ஒரு பாறையின் மீது படுத்து உறங்கிய ஒரு ராணுவ வீரர் தண்ணீர் ஓடும்ம் சலசல சத்தம் கேட்டு ஆராய்ந்து கண்டுபிடித்தது . maari
மட்டத்திற்கு கீழே 134

waashington trip

பிலடெல்பியா சுற்றிப்பார்த்து விட்டு இரவு ரிச்மாண்டில் நண்பர் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் வாஷிங்டன் போக ஏற்பாடு. 
அமெரிக்காவின் தலைந கரமாக இருந்தது பிளடேல்பியாதான்
அங்குள்ள நாணய தொழிர்ச்சாலைதான் மிக அற்புதம் 
மாடியில் சுற்றிலும் நாணயம் அடிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை 
வெளிவந்த நாணயங்கள்
நினைவு பதக்கங்கள்  அவற்றில் உள்ளவர்களின் வாழ்க்கை 
வரலாறு என கண்காட்சி .மாடியிலிருந்து கண்ணாடி வழியாக 
கீழே தொழிற்ச்சாலையை பார்க்க வசதி பளபளவென பெட்டிடி பெட்டியாக 

நாணயங்கள் நம் ஊர் ர் மிளகாய் மெஷின் னே போல் அங்காங்கு மெஷின்கள் 
அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்  பெஞ்சமின் பிராங்க்ளின் கல்லறை அரசியல் சாசனம் எழுதப்பட்ட இடம்  சுதந்திர பிரகடனம் வாசிக்கப்பட்ட பால்கனி என பளைடங்கள் பார்த்தோம்  m

waashington trip

பிலடெல்பியா சுற்றிப்பார்த்து விட்டு இரவு ரிச்மாண்டில் நண்பர் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் வாஷிங்டன் போக ஏற்பாடு. 
அமெரிக்காவின் தலைந கரமாக இருந்தது பிளடேல்பியாதான்
அங்குள்ள நாணய தொழிர்ச்சாலைதான் மிக அற்புதம் 
மாடியில் சுற்றிலும் நாணயம் அடிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை 
வெளிவந்த நாணயங்கள்
நினைவு பதக்கங்கள்  அவற்றில் உள்ளவர்களின் வாழ்க்கை 
வரலாறு என கண்காட்சி .மாடியிலிருந்து கண்ணாடி வழியாக 
கீழே தொழிற்ச்சாலையை பார்க்க வசதி பளபளவென பெட்டிடி பெட்டியாக 

நாணயங்கள் நம் ஊர் ர் மிளகாய் மெஷின் னே போல் அங்காங்கு மெஷின்கள் 
அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்  பெஞ்சமின் பிராங்க்ளின் கல்லறை அரசியல் சாசனம் எழுதப்பட்ட இடம்  சுதந்திர பிரகடனம் வாசிக்கப்பட்ட பால்கனி என பளைடங்கள் பார்த்தோம்  m

Thursday, February 10, 2011

kudai patri oru kavidhai

குடை
ஏழை பணக்காரன் பேதமின்றி அனைவருக்கும் உதவுபவன் நான்
லட்ச ரூபாய் பெறுமான திருப்தி பெருமாள் குடையாகட்டும்
பிச்சைக்காரனின் கிழிசல் குடையாகட்டும்
பட்டுகுடை  தங்க குடை வெள்ளிகுடை  கருப்பு குடை வெள்ளைகுடை
எத்தனை எத்தனை ரகமிருந்தாலும் பேர் ஒன்றுதான் குடை
மழைக்கும் உதவுவேன் வெயிலுக்கும் உதவுவேன்
கப்பல் போன்ற காரிலிருந்து இறங்கி மாளிகை போன்ற வீட்டிற்குள்
நுழையும் கொடீச்வரனுக்கும் ஓரிரு நிமிடங்கள் என் சேவை தேவை
பெருமாளுக்கு குடை கொண்டு போவது திருவிழா
குடை போடுவது ஒரு ஆரவாரம்
மாந்தர் குலத்துக்கு என்றும் என் சேவை தேவை


Tuesday, February 8, 2011

from vaara malar

முறிந்த கையைக்கொண்டு உழைக்கலாம். ஆனால் ஒடிந்த மனதோடு உழைக்க முடியாது,

அவன் பணக்காரனா என்று கேட்காதீர்கள். அவன் ஒழுக்கமுள்ளவனா என்று கேளுங்கள்.

அன்புள்ள இதயம் எப்போதும் இளமையாகவே இருக்கும்

கூச்சப்பட்டுகொண்டே இருப்பவன் உலகை அனுபவிக்கவே முடியாது.

இரண்டு மொழிகள் தெரிந்தவன் இரண்டு மனிதர்களுக்கு சமம்.

Thursday, February 3, 2011

நரம்பற்ற நாக்கு அனாவசியமாக பேசுவதற்கெல்லாம்
நாங்கள் அடி வா  ங்கி ரத்தம் சிந்துகிறோம் அதனால்
ஆண்டவன் எங்களை அதிகமாக படைத்துவிட்டான்
கூறுவதுபோல் மனிதன் பேசிய நாக்கை இழுத்து வைத்து
அருப்பதென்றால் உலகில் எல்லோரும் ஊமைகளாக திரிவோம்

engeyo paditthavai

அறிவாற்றலோடு பேசுவது என்பது மட்டும் முக்கியம்  அல்ல
அவையறிந்து பேசுவது முக்கியம்.இடமறிந்து பேசுவது அதைவிட
முக்கியம்.
தன்னை எவனாலும் எனாற்ற முடியாது என்று எவன் நினைக்கிறானோ
அவன் கண்டிப்பாக ஏமாந்து போவான்.
செல்வத்திற்கு பின் வரும் வறுமையைவிட வருமைக்குப்பின் வரும்
செல்வம் மேன்மையானது
நீ மட்டும் அனுபவித்தால் அது அறிவு
பிறரையும் அனுபவிக்க செய்தால் அது நற்பண்பு 

Sunday, January 30, 2011

kanchi

காஞ்சி  காஞ்சியில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன்.
காசியில் இறந்தால் மோட்சம் காஞ்சியில் பிறந்தால் மோட்சம்
என்பது வழக்கு. செத்த பிறகு எங்கே போகிறோம் என்பது யாருக்கு தெரியும்

எப்படிப்பட்ட புண்ணிய பூமியில் பிறந்துள்ளேன் என்று பெவ்ருமிதம் கொள்கிறேன்.
நகரேஷு காஞ்சி --அதாவது இந்தியாவின் தலை சிறந்த ஏழு நகரங்களில் முதன்மயானாது
காஞ்சி.உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமென்று பெயர் பெற்ற நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியர்களாக சென்ட்டிரவர்கள் காஞ்சியிலிருந்துதான்

பிறப்பால் மனிதன் உயர்ந்தவனில்லை எவன் ஒருவன் வேதங்களையும் சாத்திரங்களையும் படித்து அதன்படி வாழ்கிறானோ அவனே பிராமணன் என்று புரட்சி செய்து வேடம் படித்து தேறியவர்களை பூணுல் அணிவித்து பிராமணனாக ஏற்றார் ராமானுஜர். அவர் குருவாக ஏற்று வேடம் சத்திரம் பயின்றது திருகாசி நம்பி என்று காஞ்சியில் பிற ந்தவரிடம் தான்.

ஒருவரை சந்திப்பது கடினமாக இருந்து சந்திக்கும்போது என்ன காஞ்சி சி கருட சேவை
பார்ப்பது போல் உள்ளது என்பார்கள்.
போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் கருட சேவை  பார்க்க போவது நீண்ட நாள் திட்டமாகவும் ஆசையாகவும் இருந்தது.
 பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் என்றாள் ஆதிக்க உலகில் பெயர்த் பெற்றவர். அதாவது ஆத்திக வாதங்களில் அவர் உட்கார்ந்ததால் எதிரே இருப்பவர்கள் அஞ்சி நடுங்குவார்களாம்.

திருவள்ளுவர் சொன்னாரே அதன் பொருள் இன்றுவரை புரியவில்லை. யாராவது சொன்னால் நன்று
தோன்றிற் புகழோடு தோன்றுக ஏன்று  பிறப்பது நம் கையிலா உள்ளது  இனம் மதம் செல்வம் நாடு என பிறப்பை தீர்மானிப்பது ஆண்டவன் செயல்.  ஆனால் நன்கு கல்வி கற்று கற்றதன்படி நடந்து தன திறமைகளை வளர்த்துக்கொண்டு புகழோடு வாழ்ந்து மறைவது நம் கையில் தான் உள்ளது.
அப்படி ஒரு சாதாரணகு டும்பத்தில் பிறந்து  கல்வி கற்று தேர்ந்து வாழ்வில் புகழின் உச்சிக்கே சென்று இறப்பிலும் கின்னஸ் சாதனை படைத்த பேரறிஞர் அண்ணா பிறந்தது காஞ்சிக்கே பெருமை.

பண்டைய காலம்தொட்டே பட்டு என்றாள் காஞ்சிபட்டுதான் பட்டு. பார் புகழும் பட்டு புடவைகள் அசல் தங்க வெள்ளி சரிகை சேர்த்து நெய்யப்பட்டு  வந்தன. காலப்போக்கில் தங்கம் விலை தொட முடிய உயர்த்துக்கு சென்று விடவே மாற்று சரிகை போட்டு மின் தறியில்  யில்  புடவைகள் நேத்து நடுத்தர வர்கத்தினரும் வாங்கும் படி உற்பத்தி செய்கிறார்கள்.
காஞ்சிக்குபோனால் காலாட்டி பிழைக்கலாம் என்பது பழமொழி. எந்த நாளிலும் பிழைப்பு தேடி காஞ்சிக்கு வந்து விடடால் காலாடி என்பது தறி நெய்து என்பதை குறிக்கும். இன்றைய இளம் தலைமுறையினரும் கம்பியுட்டரில் டிசயின் செய்து பிரமாதமான ஒஉடவைகள் நெய்குரார்கள். அன்று எலிசபெத் ராணியிலிருந்து இன்றைய மிச்சேல் ஒபாமாவரை காஞ்சி பாபத்தை உடுத்தாதவர்களே கிடையாது,

காஞ்சிபுரம் இட்லியும் பேர்தான் காசி அல்வா பூசணி அல்வாவும் காஞ்சிக்கே உரிய சிறப்பு பலகாரங்கள்.
காஞ்சியில் கருடசேவையின் போது  மதுரை சோமு பாடினாரே பாடிப்பழயவேத்ம தேடிப்பின்னேவர ஒது ம தமிழ் மறை தேடி நீ செல்வதேன்னே என்று.
காஞ்சி வரதராஜர் பத்து நாட்கள் உர்த்சவத்தை பார்க்கவேண்டுமே இன்றும் கட்டுக்குடுமியும் நெற்றியில் திருமன்னுமாக வாய் நிறைய திவ்யப்ரபந்தம் அல்லது ரிக் வேதம் பாடிசெல்பவர்கள் எல்லாம் சாமானியர்கள் என்று எண்ணி விடாதீர்கள் டெல்லியிலும் அமெரிக்காவிலும் பெரிய பெரிய பதவி வகிப்பவர்களும் அடக்கம்.
கைலாசநாதர் கோவில் மன்னர்களும் மலையத்து நின்ற அதிசயம்.
இன்னும் எவ்வளோவோ உள்ளன. டயிப் அடித்தது ஓடிவிடப்போகிறது முடித்து கொள்கிறேன்.


kanchi

Friday, January 28, 2011

from viveka chinthaamani

மாற்றானிடம்   உள்ள செல்வம்  பொருளாசை கொண்ட பெண்கள்,உடன் பிறவா சகோதரன்
ஆகியவை ஒருவனுக்கு கை கொடுப்பதில்லை.
ஆசிரியர் தந்த பாடம் செய்த தர்மம் குரு உபதேசித்த மந்த்ரம் மற்றவர்களின் கஷ்டம் இவைகளை வெளியில் சொல்ல கூடாது
பெற்றெடுத்தவள் மட்டும் தாயல்ல சகோதரனின் மனைவி குருபத்னி வேலைக்கு
ஊதியம் வழங்கும் முதலாளியின் மனைவி பெண் கொடுத்த மாமியார்
ஆகியோரும் தாய்க்கு சமமானவர்களே.
பணமில்லாத வாழ்க்கை குறிப்பறிதல் இல்லாத மனைவி விருந்தாளி வராத வீடு
வளர்ச்சி இல்லாத வாணிபம் இவற்றால் பயன் விளைவதில்லை
கற்றுக்கொடுத்த ஆசிரியரை மாணவன் கல்வி கற்றதும் மறந்து விடுகிறான்
நோய்க்கு மருந்து தந்து வைத்தியம் செய்த மருத்துவரை குணமடைந்த
நோயாளியும் மறந்து விடுகிறான்.
நல்லவர்களின் மனதை கெடுப்பது பெற்றவர்களின் மனதை வருத்துவது
ஒருவனின் கல்வி வளர்ச்சியை தடுப்பது போன்றவை பெரும் பாவசெயலாகும். 
இதைப்போல் இன்னும் ஆயிரம் ஆயிரம் சொல்லலாம் மொத்தத்தில் எல்லோர்க்கும் பசி நீங்கி வயிறு    குளிர்ந்து நாளை ப ற்றிய கவலையின்றி இருப்போர்க்குதான் உலகின் அழகுகள் எல்லாம் கண்ணுக்குத்தெரியும்
ஏழை கண்ணிருந்தும் குருடனே 
இடுப்பொடிய நாற்று நாட்டு எழும் பெண்ணிடம் நாற்று வரிசை
நாற்று வரிசை அழகு இல்லையா என்றால் அவள் கூறுவாள் ---இல்லை
பகலெல்லாம் உழைய்த்து வீடு திரும்பும் பெண் இரவு சமையல் என்ன செய்யலாம்
என்று யோசனையில் ரயிலில் வரும் பெண்ணிடம் அந்திவானத்து வானவில்
அழகாக உள்ள தே என்றால்  அவள் கூறுவாள்--இல்லை 

paarvaiyin koname verudhaan

பார்வையின் கோணமே வேறுதான்.
காலைத்தூக்கத்தை கதகதப்பான போர்வையில் அனுபவிக்கும் பேரனைக்
கேளுங்கள் மாமரச்த்துக்குயில் கூவுவது இனிமையா என்று --இல்லை என்பான்
பாடாளியை எழுப்பி பழைய கஞ்சியை குடிக்க கொடுத்துகொண்டே உதய சூரியன்
அழகா என்று கேட்கட்டும் --இல்லை என்பான்
.

Thursday, January 27, 2011

kavidhai illai en karutthu

ஆணின் அழகு
பிடரி முடி சிலிர்க்க பீடு நடை போட்டு வரும் சிங்கம்
பீலியில் அழகெல்லாம் தெரிய மழை மேகம் கண்டு ஆடி வரும் மயில்
கொண்டையை சிலுப்பி கொக்கரக்கோ என்று காலை கூவி வரும் சேவல்
நீண்ட தந்தம் கொண்டு காதுகள் விசிறியாக வீச ராஜநடை போட்டு வரும் யானை
உயர்ந்த திமிலும் கூரிய கொம்பும் கொண்டு சீறி வரும் காலை
மனிதனும் ஆசை பட்டு வைக்கும் குறுந்தாடி கொண்ட ஆடு

தூக்கி கட்டிய முடியும் நீவி விட்ட தாடியும் கொண்ட திருவள்ளுவர்
முறுக்கிய மீசையும் தீ உமிழும் கண்களும் கொண்ட பாரதி
சிம்ம நடை நடந்து சிம்ம குரல் கொண்டு சிங்காரமாய் வாழ்ந்த சிவாஜி கணேசன்
எல்லா ஆண்களும் ஆசை பட்டு வைத்துகொண்ட மீசைக்கு சொந்தகார் ரன் வீரப்பன்
ராமாயணம் தொடரை ராமன் அழகுக்காகவே பார்க்கும் ரசிகைகள் பலர் உண்டு
எல்லா விளம்பரங்களிலும் நவரசம் காட்டி நடிக்கும் குட்டிப்பையன்
பெண்ணே கண்டு மயங்கும்படி ஆண் வேடம் போட முடியும்
பெண் என்னதான் ஆணாக வேடம் போட்டாலும் பெண்ணின் கனிவு முகம் மாறாது
ஆணாக பிறந்து பெண்ணாக மரியா கதை பலவுண்டு
பெண் ஆணாக மாறியதாக கதை அறிதன்றோ
அது கடவுள் செய்த சதி


Tuesday, January 25, 2011

vilambarangalil aniyaayam

தினமும் தொலைக்காட்சி பெட்டியை திறந்தால் அபத்தமன் விளம்பரங்கள்

எரிச்சலூட்டுகின்றன
. ஒரு பெண் எழுநூறு தடவை சோப்பு தேய்க்கிறாள் என்றாள் அவள் புத்தி
சுவாதீனம் அற்றவலகத்தான் இருக்க வேண்டும்
எழுநூருமுறை தேக்க தான் இயலுமா ?
ஹமாம் சோப்பு போட்டு குளித்தால் புதரிலுள்ள பாம்பு ஓணான்
பல்லி தேள் எல்லாம் பயந்து ஓடிவிடுமா
ஒரு குழந்த சின்னம்மை போட்டதால் தேர்வில் ஜீரோ வாங்கினான் என்பதை மகிழ்ச்சிய்டு ஒரு குழந்தை சொல்ல தாய் தக்சப்ப்ச்ன் கேட்டு கொண்டு இருக்கிறார்கள்

அந்த குழந்தை  மற்றவர் துயர்கண்டு மகிழும் ஒரு சாடிச்டாக தானே வளருவான் .
இதையெல்லாம் உங்களைபோன்றவர்கள் தலையங்கத்தில் கண்டித்து எழுதினாலாவது

பலன் கிடைக்குமா 

aanmaa

ஆன்மாவுக்கு தீங்கினை விளைவிப்பவை எட்டு
காமம் ---ஒரு பொருளை விடும்பினால் அதை அனுபவிக்கும் வரை
நிற்க ஒன்னத நிலை
குரோதம் ---விருப்பட்ட பொருள் கிடைக்காவிட்டால் அண்மையில் இருப்பவர் பக்கம்
பிறக்கும் சீற்றம்
உலோபம் ---தன்னிடத்திலுள்ள பொருளில் பேராசை
மோகம்---செய்வன தவிர்வனவற்றை பகுத்தறிய மாட்டாமை
பொருள் முதலியன பெருமவற்றால் வரும் களிப்பு
மாத்சர்யம் ----பிறருடைய செல்வம் முதலிவற்றை கண்டு பொறாமை படுதளோடு
அமையாது அதனை செயலிலும் காட்டுதல்
அஞானமாவது ---இவற்றால் மேல்வரும் கேட்டினை அறியாமை
அசூயை -----குணங்களிலே குற்றங்களை ஆரிடுதல் .

Saturday, January 15, 2011

ini varuma andha pogal

மாமியார் செங்கல் அடுப்பு கட்டி மண் பானை அடுப்பிலேற்றி
மகன்களும் மருமகள்களும் பயபக்தியுதன் சூழ்ந்து நிற்க
பாலும் சோறும் பொங்கி வழியும்போது பேரப்பிள்ளைகள்
பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரம் செய்யும்போது அடைந்த
ஆனந்தம் காஸ் அடுப்பில் சக்கரை பொங்கல் வைத்து விசில் சத்தமே
பொங்கலோ பொங்கல் என்று எண்ணி நெய்யும் முந்திரியும் ஏலமும்
மணமணக்க போட்டு படையலிட்டு கணவனும் மனைவியும் எதிரெதிரே
உட்கார்ந்து உற்றம் சுற்றம் இன்றி உண்ணும் பொங்கல் இனிக்குமா
கசந்ததே

Friday, January 14, 2011

pongal

 பொங்கல் திருநாளை வருடப்பிறப்பாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நன்னாளில்
நாம் சில நல்ல கொள்கைகளை கடைபிடிப்போம்
யாரும் பார்க்காத இடத்திலும் நாம் குப்பைகளை போடக்கூடாது. பஸ் நிலையங்களில் குப்பைகூடை  இருந்தாலும் காபி குடித்த கப்புகள் பழத்தோல்கள் சாப்பிட்ட இலைகள்
எல்லாவற்றையும் ஜன்னல் வழியாக வீசுகிறார்கள்
கட்டண கழிப்பறைகள் இலவச கழிப்பறைகள் இருந்தாலும் இந்த ஆண்கள் சுவரோரம் சிறுநீர் கழிப்பதை விடுவதில்லை.
இதுவே ஒரு நிறை மாத கர்ப்பிணி பெண் கழிப்பறை வசதி இல்லாத இடத்திலும் கண் கலங்கி தவித்து நிற்பாளே தவிர வேறு விதியில்லை.
பஸ்ஸில் பெரும்பாலும் வயதானவர்கல்லுக்கு இடம் கொடுப்பது ஆண்கள்தான். பெண்கள் தலையை திருப்பிக்கொண்டு கவனிக்காதது போல் இருந்து விடுவார்கள்.
.

bogi

பரண்மேல் போட்ட சைக்கிளை கீழே இறக்குங்கள், அதை உபயோகப்படுத்துவதால் உடற்பயிற்சி செய்தது போலவும் ஆச்சி பணமும் மிச்சம்.
மாலையில் குழந்தைகளை பள்ளியிலோ வீட்டிலோ மற்ற பிள்ளைகளுடன் விளையாட சொல்லுங்கள்.
அதனால் அவர்களுக்கு மற்றவஸ்ர்களுடன் பழுகும் தன்மை விட்டு கொடுக்கும் தன்மை எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் குணம் எல்லாம் ஏற்படும்.
வயதானவர்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உபயோகமற்ற சீரியல்களை பார்பதை விட்டு குழந்தைகளை அருகில் உள்ள கோவிலுக்கோ பூங்காவுக்கோ அழைத்து செல்லுங்கள்
நல்ல காற்றை சுவசித்தர்போலவும் இருக்கும் வீட்டிலுள்ள இளம் தாய்க்கு உதவினார்போலவும் இருக்கும்.
இரவில் சப்பாத்தி சாப்பிடனும் இட்லி தோசை சாப்பிடனும் என்றெல்லாம் வயதாவர்களுக்கு கட்டாயமில்லை ரசம் சதாமும் மோர் சாதமும் அளவோடு சாப்பிட்டால் ஒன்றும் செய்யாது.
குழந்தை களுக்கு கூடியவரை பழங்கள் கொடுங்கள் பாட்டிலில் அடைத்த ஜூஸ் கொடுக்காதீர்கள்.
மதத்தில் ஒருமுறை வ்ண்டுமானால் வெளியில் அவரவர் வசதிக்கேற்ற இடத்தில் சாப்பிடுங்கள். ஆனால் வீட்டில் சுத்தமான எண்ணையில் தயாரித்த முறுக்கு தட்டை வடை போன்றவற்றை கொடுங்கள்
இரவில் கோரை பாயில்  படுங்கள் அல்லது இலவம்பஞ்சு மெத்தையில் படுங்கள்  இவை இரண்டும் தான் உடல் நலத்திற்கு நல்லது..டு

bogi

போகி பண்டிகை என்பது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பார்கள்
என் பார்வையில் புதியன கழிந்து பழையன புகவேண்டும் என்பதே.
காலையில் ஆறுமணிக்காவது படுக்கையை விட்டு எழுந்து விடவேண்டும்.
காலை உணவை நிராகரிக்ககூடாது.
தென்னிந்தியா உணவுகளான இட்லி, தோசை, பொங்கல்,உளுந்துவடை சட்னி
சாம்பார் இவையெல்லாம் சரிவிகித உணவுகள் என்று உணவு வல்லுனர்களின்
கணிப்பு. இவற்றிஎல்லாம் விட்டு விட்டு சீரியல்களும் ஓட்சும் கால் வயிறு சாப்பிட்டு ஓடுவதை தவிர்க்க வேண்டும்.
ஆங்கில பழமொழிய காலையில் சக்ரவர்த்திபோல் உண்ணவேண்டும் மதியம் ராஜா போல் உண்ண வேண்டும் இரவு பிச்சை காரனைப்போல் உண்ணவேண்டும் என்பதுதான், நம் உணவுமுறை அதற்கு நேர் மாறாகத்தான் உள்ளது.
வருடத்தில் முன்னூறு  நாட்கள்வெயிலில் காயும் தலைக்கு கொஞ்சம் எண்ணெய் தடவி
சீவினால் பார்க்கவும் அழகு ஆரோக்யமும் ஆகும்  பரண் மேல் போட்ட saiyikkalai

Wednesday, January 12, 2011

kan

கண்
கருணை பொழிவது கண்
கனல் கக்குவதும் கண்
காதல் பேசும் கண்
காமம் வீசுவதும் கண்
கண்ணின் அருமை தெரிவது
கால் மணி நேர மின் தடையின்போது
கரியாகி விடாமல் கண் தானம் தந்து
காப்பீர் இருவர் வாழ்வை

Tuesday, January 11, 2011

azhagu


மழலைக்கு சிரிப்பழகு
முளைத்து வரும்  பல்லழகு
ழு
பள்ளிபருவம் பதினான்கில் பெண்ணுக்கு
பாவாடை தாவணி அழகு
பதினா று வயதினில் ஆணுக்கு
அரும்பும் மீசை தனியழகு
முதிர்கன்னி முக த்தினிலே
காணும் அறிவு முதிர்ச்சியும் தனியழகு
நாற்பது வயது ஆணின் கம்பீர நடையழகு
முதுமைக்கு நரையழகு முதிர்ந்த வயதினிலே
கணவர் கண்ணுக்கு மனைவி அழகு
மனைவி கண்ணுக்கு கணவர் அழகு.

Monday, January 10, 2011

from vaaramalar.

வாழ்க்கை வசப்பட
பகைவர்கள் மிக நல்ல நண்பர்களாய் மாறலாம்
பழைய தொவிகளின் பாரங்கள் நீங்கலாம்
எத்தனை இழந்தாலும் இழந்த பொருளை மீட்கலாம்
என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம்
பதறாத மனம் தான் புதுமைகள் நினைக்கும்
புதுமைகள் செய்தால் செயல்கள் சிறக்கும்
செயல்கள் சிறந்தால் சாதனை பிறக்கும்
சாதனை பிறந்தால் வாழ்க்கை இனிக்கும்
சரிவுகள் தானே சரி செய்துவிடலாம்
சவால்கள்தானே சந்தித்து விடலாம்
சதிகள்தானே முறியடித்து விடலாம்
சிக்கல்கல்தானே சீர் செய்துவிடலாம்
புதிய நட்புகளை ஏற்படுத்தி கொள்ளுங்கள்
பழைய நண்பர்களை கொண்டாடுங்கள்
இரவல் வாங்குபவற்றை திரும்ப கொடுங்கள்
 நாளொன்றுக்கு மூன்று பேரையாவது பாராட்டுங்கள்.
நிரந்தரமான மகிழ்ச்சி
துணிவான முடிவுகளில் இருக்கிறது
பணிவான வார்த்தைகளில் இருக்கிறது
கனிவான அணுகுமுறையில் இருக்கிறது
பரிவான உதவிகளில் இருக்கிறது
தொல்வி வந்தால் பொறுமை அவசியம்
வெற்றி வந்தால் பணிவு அவசியம்
எதுவந்தாலும் நம்பிக்கை அவசியம்
இது என்னுடைய வேண்டுகோள்
புதுவருடத்தில் ஒரு சபதம் எடுத்துக்கொள்வோம்
தயவு செய்து , மிக்க நன்றி,மன்னித்து கொள்ளுங்கள்
இம்மூன்று வார்த்தைகளையும் அந்தந்தத ச்டந்தர்பர்த்தில் தவறாமல் பயன் படுத்துவோம்
பஸ் கண்டக்டர் ஆட்டோ டிரைவர் ஹோட்டல் சர்வர் இவர்களுக்கு ஒரு நன்றி சொல்லுங்கள்
பணம் கொடுக்கும்போது இருந்த முக மலர்சியைவிட அதிகமாக முகம் மலர்வார்கள்
அதைக்காணும் நமக்கும் அகம் மகிழும்
பெற்ற பிள்ளயிடமானாலும் ஒரு வேலை சொல்லும்போது
ப்ளீஸ் என்று போட்டு சொல்லி பாருங்கள் மறு வார்த்தையின்றி
உடனே செய்வார்கள்
நாம் செய்தது தவறு என நம் மனசாட்சி சொல்லும்போது வயது பதவி எதயும் பாராம் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புகேளுங்கள். பிறகு குற்ற உணர்வு மனதை விட்டு ஓடியே போய்விடும்

from vaaramalar.

வாழ்க்கை வசப்பட.
அழுத்தமாக கை குலுக்குங்கள்
கண்களை நேராக பார்த்து பேசுங்கள்
இயல்பாக இதமாக புன்னகையுங்கள்
அறிமுகமானவர்கள் எதிர்ப்படும்போது வணக்கம் சொல்வதில் முந்திக்கொள்ளுங்கள்.
உங்கள் பலன்களை பலப்படுத்துங்கள்
உங்கள் பலவீனங்களை பலவீனப்படுத்துங்கள்
நெஞ்சார நன்றி சொல்லுங்கள்
இயற்கையை ரசிக்க நேரம் ஒதுக்குங்கள்
எப்போதும் துணையிருக்கும் நண்பர்களுக்கு
எப்போதும் வழிகாட்டும் எழுத்துகளுக்கு
எப்போதும் சிரிக்கும் பூக்களுக்கு
எப்போதும் கைவிடாத நம்பிக்கைக்கு
நன்றி சொல்லுங்கள்

சோர்வாக இருக்கிறதா
அமைதியான இடத்திற்கு செல்லுங்கள்
உங்கள் பலங்களை எழுதுங்கள்
மாற்று வழிகளை சிந்தியுங்கள் தியானம் செய்யுங்கள்
ல்
சோதனை சூறாவளியில்
அச்சம்தான் நம் எதிரி அச்சத்தை உதறுங்கள்
உடனடியாய் என்ன செய்ய ? உள்ளுணர்வை கேளுங்கள்
அடுத்தடுத்து போராட ஆயத்தம் ஆகுங்கள்
போனதெல்லாம் போகட்டும் புதிதாக தொடங்குங்கள்

Wednesday, January 5, 2011

kalyana katcheri

கல்யாண வீட்டில் கச்சேரி செய்பவர்கள் வாங்கின காசுக்கு வஞ்சனையின்றி பாடுவார்கள். கேட்கதான் ஆள் இருக்காது, எப்போதும் நானும் என் பெண்கள் இருவரும் கச்சேரி மேடைக்கு எதிரில் உட்கார்ந்துகொள்வோம். பாடுபவர்களுக்கு அவ்வப்போது கைதட்டி உர்ச்சகபடுத்துவோம். எங்களைபர்த்து இன்னும் சில உறவினரும் வந்து எங்கள் அருகில் உட்கார்ந்து கொண்டு உற்சாக படுத்துவார்கள். ஒருமணிநேரமாவது  கேட்டு விட்டு பிறகுதான் சாபிடபோவோம்.
       ஸ்
 அதுபோல என் எழுத்துக்களை ஒன்ற்றிரண்டு பேர் படித்தாலும் படிக்காவிட்டாலும் நான் என் கருத்துக்களை எழுதுவதில் மகிழ்கிறேன்.