Sunday, January 30, 2011

kanchi

காஞ்சி  காஞ்சியில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன்.
காசியில் இறந்தால் மோட்சம் காஞ்சியில் பிறந்தால் மோட்சம்
என்பது வழக்கு. செத்த பிறகு எங்கே போகிறோம் என்பது யாருக்கு தெரியும்

எப்படிப்பட்ட புண்ணிய பூமியில் பிறந்துள்ளேன் என்று பெவ்ருமிதம் கொள்கிறேன்.
நகரேஷு காஞ்சி --அதாவது இந்தியாவின் தலை சிறந்த ஏழு நகரங்களில் முதன்மயானாது
காஞ்சி.உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமென்று பெயர் பெற்ற நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியர்களாக சென்ட்டிரவர்கள் காஞ்சியிலிருந்துதான்

பிறப்பால் மனிதன் உயர்ந்தவனில்லை எவன் ஒருவன் வேதங்களையும் சாத்திரங்களையும் படித்து அதன்படி வாழ்கிறானோ அவனே பிராமணன் என்று புரட்சி செய்து வேடம் படித்து தேறியவர்களை பூணுல் அணிவித்து பிராமணனாக ஏற்றார் ராமானுஜர். அவர் குருவாக ஏற்று வேடம் சத்திரம் பயின்றது திருகாசி நம்பி என்று காஞ்சியில் பிற ந்தவரிடம் தான்.

ஒருவரை சந்திப்பது கடினமாக இருந்து சந்திக்கும்போது என்ன காஞ்சி சி கருட சேவை
பார்ப்பது போல் உள்ளது என்பார்கள்.
போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் கருட சேவை  பார்க்க போவது நீண்ட நாள் திட்டமாகவும் ஆசையாகவும் இருந்தது.
 பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் என்றாள் ஆதிக்க உலகில் பெயர்த் பெற்றவர். அதாவது ஆத்திக வாதங்களில் அவர் உட்கார்ந்ததால் எதிரே இருப்பவர்கள் அஞ்சி நடுங்குவார்களாம்.

திருவள்ளுவர் சொன்னாரே அதன் பொருள் இன்றுவரை புரியவில்லை. யாராவது சொன்னால் நன்று
தோன்றிற் புகழோடு தோன்றுக ஏன்று  பிறப்பது நம் கையிலா உள்ளது  இனம் மதம் செல்வம் நாடு என பிறப்பை தீர்மானிப்பது ஆண்டவன் செயல்.  ஆனால் நன்கு கல்வி கற்று கற்றதன்படி நடந்து தன திறமைகளை வளர்த்துக்கொண்டு புகழோடு வாழ்ந்து மறைவது நம் கையில் தான் உள்ளது.
அப்படி ஒரு சாதாரணகு டும்பத்தில் பிறந்து  கல்வி கற்று தேர்ந்து வாழ்வில் புகழின் உச்சிக்கே சென்று இறப்பிலும் கின்னஸ் சாதனை படைத்த பேரறிஞர் அண்ணா பிறந்தது காஞ்சிக்கே பெருமை.

பண்டைய காலம்தொட்டே பட்டு என்றாள் காஞ்சிபட்டுதான் பட்டு. பார் புகழும் பட்டு புடவைகள் அசல் தங்க வெள்ளி சரிகை சேர்த்து நெய்யப்பட்டு  வந்தன. காலப்போக்கில் தங்கம் விலை தொட முடிய உயர்த்துக்கு சென்று விடவே மாற்று சரிகை போட்டு மின் தறியில்  யில்  புடவைகள் நேத்து நடுத்தர வர்கத்தினரும் வாங்கும் படி உற்பத்தி செய்கிறார்கள்.
காஞ்சிக்குபோனால் காலாட்டி பிழைக்கலாம் என்பது பழமொழி. எந்த நாளிலும் பிழைப்பு தேடி காஞ்சிக்கு வந்து விடடால் காலாடி என்பது தறி நெய்து என்பதை குறிக்கும். இன்றைய இளம் தலைமுறையினரும் கம்பியுட்டரில் டிசயின் செய்து பிரமாதமான ஒஉடவைகள் நெய்குரார்கள். அன்று எலிசபெத் ராணியிலிருந்து இன்றைய மிச்சேல் ஒபாமாவரை காஞ்சி பாபத்தை உடுத்தாதவர்களே கிடையாது,

காஞ்சிபுரம் இட்லியும் பேர்தான் காசி அல்வா பூசணி அல்வாவும் காஞ்சிக்கே உரிய சிறப்பு பலகாரங்கள்.
காஞ்சியில் கருடசேவையின் போது  மதுரை சோமு பாடினாரே பாடிப்பழயவேத்ம தேடிப்பின்னேவர ஒது ம தமிழ் மறை தேடி நீ செல்வதேன்னே என்று.
காஞ்சி வரதராஜர் பத்து நாட்கள் உர்த்சவத்தை பார்க்கவேண்டுமே இன்றும் கட்டுக்குடுமியும் நெற்றியில் திருமன்னுமாக வாய் நிறைய திவ்யப்ரபந்தம் அல்லது ரிக் வேதம் பாடிசெல்பவர்கள் எல்லாம் சாமானியர்கள் என்று எண்ணி விடாதீர்கள் டெல்லியிலும் அமெரிக்காவிலும் பெரிய பெரிய பதவி வகிப்பவர்களும் அடக்கம்.
கைலாசநாதர் கோவில் மன்னர்களும் மலையத்து நின்ற அதிசயம்.
இன்னும் எவ்வளோவோ உள்ளன. டயிப் அடித்தது ஓடிவிடப்போகிறது முடித்து கொள்கிறேன்.


No comments:

Post a Comment