Saturday, February 27, 2010

என் மாமனார் எண்பத்தாறு வயது வாழ்ந்தார். யோகா செய்ததில்லை வாக்கிங் என்று போனதில்லை சப்பாத்தி சாப்பிட்டதில்லை இரண்டுமுறை ஜுரம் வந்தது தவிர ஒரு நாளும் வீடு சென்றதில்லை . எப்படி? காலை ஐந்து மணிக்கு எழுந்து விடுவார். காலைகடன் முடித்து ஒரு காபி அருந்திவிட்டு குளித்து முடிப்பார். சரியாக ஆறு மணிக்கு டியூஷன் படிக்க பிள்ளைகள் வந்துவிடுவார்கள். ஆறு மணி முதல் எட்டு மணிவரை குரலெடுத்து பாடம் நடத்துவார். அதுவே மூச்சுபயிற்சி.பெரும்பாலும் இட்லி தோசை காலை உணவு. பத்து மணிவரை ஹிந்து பேப்பரை ஒருவரி விடாமல் படிப்பார் .ஒரு வார்த்தைக்கு சரியான பொருள் தெரியவல்லை என்றால் சோம்பல் படாமல் டிக்ஷனரி எடுத்து பொருள் அறிவார். பிறகு எந்த வேலைக்கும் ஒருமைல் வரை நடந்தே சென்று திரும்புவார். ஒரு மணிக்கு சாதம் சாம்பார், ரசம்,தயிர், ஒரு போரியல் என எளிய உணவு திருப்தியாக சாப்பிடுவார். அரைமணி நேரம் குட்டிதூக்கம் . எண்டு மணிமுதல் பாடம் எடுக்க தேவையானவற்றை எழுதி வைத்துக்ல்வார். கடைசி வரை கொஞ்சமும் நடுக்கமின்றி எழுத முடிந்தது. மாலை ஐந்து மணிமுதல் அக்கம்பக்கம் ஏழை மாணவர்குக்கு பாடம். ஆத்மா திருப்தி ஏழரை மணிக்கு சாதம்,ரசம், மோர் என இரவு உணவு. மறுபடிபள்ளிமாணவன் பரிக்ஷைக்கு
படிப்பதுபோல் ஆங்கில புத்தகங்கள படிப்பார் . எட்டரை மணிக்கு ஒரு குவளை பால்.படுக்கைக்கு சீக்கிரம் போ சீக்கிரம் ஏழு என்ற ஆங்கிய பழமொழிக்கு உதரணமாக வாழ்ந்தார். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. காலை முதல் இரவுவரை குறித்த நேரத்தல் குறித்த வேலையை செய்து வந்தால் யோகா செய்யவேண்டாம் வாக்கிங் போகவேண்டாம் சப்பாத்தி சாப்பிடவேண்டாம் மாத்திரை விழுங்கவேண்டம் என் மாமனார் போன்றே அவர் பிள்ளைகள் இருவரும் எழுபத்திரண்டு எழுபதிஎழு வயதில் ஆரோகியமாக் வழுகிரர்க. இனியும் வாழ்வார்கள் .

Thursday, February 25, 2010

சிறு குறிப்புகள்.

சின்ன குழந்தையை ஒரு வயதுவரை நேரம் கிடக்கும்போதேல்லாம் மடியில் தூக்கி வைத்து பேச்சு கொடுக்கவேண்டும். கால்களை மெதுவாக பிடித்து விடவேண்டும.படுத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுக்ககூடாது. புட்டியி பா ல் கொடுப்பதானாலும்மடியில்தூக்கி வைத்துக்கொண்டு கைகளால் அரவணைத்துக்கொண்டு தரவேண்டும். தூளியை தாழ்வாக கட்டவேண்டும். தூளி பழகாமல் இருப்பது நன்று முகத்தில் பவுடர் போடகூடாது. காதில் பட்ஸ் போட்டு துடைக்காமல் மெல்லிய துணிய திரித்து போட்டு சுத்தம் செயலாம். ஆறு அல்லது ஏழாம் மாதம் சாதம் கொடுக்கும் போது கரண்டியால் நன்றாக மசித்து கொடுத்து பழக வேண்டும். மிக்சிய்ல் அடித்து கொடுத்து பழகிவிட்டால் வெகு நாட்களுக்கு அதேபோல் குழந்தை கேட்கும். போகும் இடத்திலெல்லாம் சாப்பிட முடியாமல் சிரமப்படும்.

Tuesday, February 23, 2010

சன்ன சின்ன குறிப்புகள் : குழந்தைவாயில் எதை யாவது போட்டு கொண் டு தொண்டையில் சிக்கிக்கொண்டால் கைவிட்டு எடுக்க ப்பதோ தண்ணீர் கொடுபதோ தவறு. உடனே தலை கீழாக தூக்கி பிடித்து முதுகில் பலமாக ரெண்டு தட்டு தட்டுங்கள். சிக்கிய பொறு வெளிய வந்துவிடும். மூக்கில் எதாவுது போட்டுகொண்டால் மறுபக்கம் மூக்கில் துணியை திரித்து ஒட்டு ரெண்டு மூன்று தும்ம ல் போடா வையுங்கள். கத்தில் எதுபோட்டுகொண்டலும் நாமாக எடுக்க முயற்சிக்க கூடாது. கண்ணில் எது விழுந்தாலும் எடுக்க முயற்சிக்ககூடாது உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
அயன் பாக்ஸ் , ஷேவிங் செட்,காய்கறி நறுக்கும் கத்தி போன்ற வைகளை உடன உரிய இடத்தல் வைத்துவிட வேண்டும்.
இரண்டு குழந்தைகள் வீட்டில் இருந்தால் சின்ன குழந்தை சதா உங்கள் கண் காணிப்பில் இருக்க வேண்டும் பெரிய குழந்தை கீழே போடும் பென்சில் சிறிய ரப்பர் துண்டுக்கள்,விளையாட்டு பொருட்கள் சன்ன குழந்தை எடுத்து வாயல் போட வாய்ப்பு உள்ளது
சாலையில் செல்லும்போது குழந்தையை இடதுபக்கம் இருக்கும்படி பார்த்து ல்கொள்ளல் வேண்டும். அவர்கள் கரத்தை நாம்தான் பிடித்துக்கொள்ள வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தி ல் தனியாக விட்டு விட்டு பக்கதில்தனே ஏதாவது வாங்கி கொண்டோ பேசிக்கொண்டோ இருக்க கூடாது.

Saturday, February 20, 2010

என் கவிதை யார் படிப்பார் உன்ன விட்டால்

என் வயதோ எழுபது தோற்றமோ அறுபது கேட்கும் பார்க்கும் திறனுக்கோ வயது ஐம்பது ஓடியாடி வேலை செய்யும் உடலுக்கு வயது நாற்பது ஆனால் வுள்ளத்த்ற்கோ வயது பத்து நிறைவேறாத ஆசைகள் பலவுண்டு அவற்றில் சில தாய் மடிஇ ல் படுத்து கதை கேட்க ஆசை தந்தை கை பிடித்து கடலாட ஆசை கட்டம் போட்டு பாண்டி ஆட ஆசை கா கொலுசு சத்தம்ஒ லிக்க ஓடி ஆட ஆசை ரங்கராட்டினம் ஏறி சுற்றிவர ஆசை குச் சிஐசு வாங்கி மெதுவாய் சுவைத்து தின்ன ஆசை ரெட்ட சடை போட்டு ரிப்பன் வக்க அசை கல்லுரி சென்று முதுகலை பட்டம் பெற ஆசை நிறைவேறா ஆசைகள் நிறைய உண்டு என் மனதில் அனால் இன்றிருக்கும் ஆசையோ ஒன்றே ஒன்றுதான் வீடு போ என்று சலிப்புற்று சொல்லுமுன் காடு சென்று விட கொண்டுளேன் ஓர் ஆசை

Wednesday, February 17, 2010

முதிய வயதில் தன்மையில் இருக்கவேண்டி உள்ளதா? புத்தகங்களை துணையாக நினையுங்கள் . அண்டை அயல் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுங்கள் கோயில் அல்லது பூங்கா என் மக்கள் கூ டும் இடங்களுக்கு செல்லுங்கள் .உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு சிரமம் பாராமல் செல்லுங்கள் . நண்பர்கள் உறவினர்களை பார்த்தால் மனம் மகிழும். தனியாக் வாழும் பெண் என்றால் இரண்டு அல்லது மூன்று மாணவி களை பணம் கொடுத்து தங்கும் விருந்தினராக ஏற்று கொள்ளுங்கள் . துணைக்கு துணையும் ஆயிற்று.உங்கள்ளுக்கு சமைக்கவும் ஆர்வம் வரும்.அதுவும் முடியாத நேரம் வரும்போது கவுரவம் பாராமல் தகுதிக்கு ஏற்ற முதியோர் இல்லத்தில் சேருவதே புத்தி சாலித்தனம். வயதான காலத்தில் பேச்சு துணை தான் மனம் நாடும். இந்த அவசர உலகில் தன மாணவி மக்களுடனே பேச நேரம் இன்றி ஓடும் பிள்ளய்க்கு நம்மோடு தினமும் பேச நேரம் எது ?

Wednesday, February 10, 2010

என்னைப்பற்றிய குறிப்பு

பெயர் பங்கஜம் வயது எழுபது இல்லத்தரசி பத்தாம் வகுப்பு தேர்ச்சி