என் மாமனார் எண்பத்தாறு வயது வாழ்ந்தார். யோகா செய்ததில்லை வாக்கிங் என்று போனதில்லை சப்பாத்தி சாப்பிட்டதில்லை இரண்டுமுறை ஜுரம் வந்தது தவிர ஒரு நாளும் வீடு சென்றதில்லை . எப்படி? காலை ஐந்து மணிக்கு எழுந்து விடுவார். காலைகடன் முடித்து ஒரு காபி அருந்திவிட்டு குளித்து முடிப்பார். சரியாக ஆறு மணிக்கு டியூஷன் படிக்க பிள்ளைகள் வந்துவிடுவார்கள். ஆறு மணி முதல் எட்டு மணிவரை குரலெடுத்து பாடம் நடத்துவார். அதுவே மூச்சுபயிற்சி.பெரும்பாலும் இட்லி தோசை காலை உணவு. பத்து மணிவரை ஹிந்து பேப்பரை ஒருவரி விடாமல் படிப்பார் .ஒரு வார்த்தைக்கு சரியான பொருள் தெரியவல்லை என்றால் சோம்பல் படாமல் டிக்ஷனரி எடுத்து பொருள் அறிவார். பிறகு எந்த வேலைக்கும் ஒருமைல் வரை நடந்தே சென்று திரும்புவார். ஒரு மணிக்கு சாதம் சாம்பார், ரசம்,தயிர், ஒரு போரியல் என எளிய உணவு திருப்தியாக சாப்பிடுவார். அரைமணி நேரம் குட்டிதூக்கம் . எண்டு மணிமுதல் பாடம் எடுக்க தேவையானவற்றை எழுதி வைத்துக்ல்வார். கடைசி வரை கொஞ்சமும் நடுக்கமின்றி எழுத முடிந்தது. மாலை ஐந்து மணிமுதல் அக்கம்பக்கம் ஏழை மாணவர்குக்கு பாடம். ஆத்மா திருப்தி ஏழரை மணிக்கு சாதம்,ரசம், மோர் என இரவு உணவு. மறுபடிபள்ளிமாணவன் பரிக்ஷைக்கு
படிப்பதுபோல் ஆங்கில புத்தகங்கள படிப்பார் . எட்டரை மணிக்கு ஒரு குவளை பால்.படுக்கைக்கு சீக்கிரம் போ சீக்கிரம் ஏழு என்ற ஆங்கிய பழமொழிக்கு உதரணமாக வாழ்ந்தார். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. காலை முதல் இரவுவரை குறித்த நேரத்தல் குறித்த வேலையை செய்து வந்தால் யோகா செய்யவேண்டாம் வாக்கிங் போகவேண்டாம் சப்பாத்தி சாப்பிடவேண்டாம் மாத்திரை விழுங்கவேண்டம் என் மாமனார் போன்றே அவர் பிள்ளைகள் இருவரும் எழுபத்திரண்டு எழுபதிஎழு வயதில் ஆரோகியமாக் வழுகிரர்க. இனியும் வாழ்வார்கள் .
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago