Sunday, January 30, 2011

kanchi

காஞ்சி  காஞ்சியில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன்.
காசியில் இறந்தால் மோட்சம் காஞ்சியில் பிறந்தால் மோட்சம்
என்பது வழக்கு. செத்த பிறகு எங்கே போகிறோம் என்பது யாருக்கு தெரியும்

எப்படிப்பட்ட புண்ணிய பூமியில் பிறந்துள்ளேன் என்று பெவ்ருமிதம் கொள்கிறேன்.
நகரேஷு காஞ்சி --அதாவது இந்தியாவின் தலை சிறந்த ஏழு நகரங்களில் முதன்மயானாது
காஞ்சி.உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமென்று பெயர் பெற்ற நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியர்களாக சென்ட்டிரவர்கள் காஞ்சியிலிருந்துதான்

பிறப்பால் மனிதன் உயர்ந்தவனில்லை எவன் ஒருவன் வேதங்களையும் சாத்திரங்களையும் படித்து அதன்படி வாழ்கிறானோ அவனே பிராமணன் என்று புரட்சி செய்து வேடம் படித்து தேறியவர்களை பூணுல் அணிவித்து பிராமணனாக ஏற்றார் ராமானுஜர். அவர் குருவாக ஏற்று வேடம் சத்திரம் பயின்றது திருகாசி நம்பி என்று காஞ்சியில் பிற ந்தவரிடம் தான்.

ஒருவரை சந்திப்பது கடினமாக இருந்து சந்திக்கும்போது என்ன காஞ்சி சி கருட சேவை
பார்ப்பது போல் உள்ளது என்பார்கள்.
போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் கருட சேவை  பார்க்க போவது நீண்ட நாள் திட்டமாகவும் ஆசையாகவும் இருந்தது.
 பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் என்றாள் ஆதிக்க உலகில் பெயர்த் பெற்றவர். அதாவது ஆத்திக வாதங்களில் அவர் உட்கார்ந்ததால் எதிரே இருப்பவர்கள் அஞ்சி நடுங்குவார்களாம்.

திருவள்ளுவர் சொன்னாரே அதன் பொருள் இன்றுவரை புரியவில்லை. யாராவது சொன்னால் நன்று
தோன்றிற் புகழோடு தோன்றுக ஏன்று  பிறப்பது நம் கையிலா உள்ளது  இனம் மதம் செல்வம் நாடு என பிறப்பை தீர்மானிப்பது ஆண்டவன் செயல்.  ஆனால் நன்கு கல்வி கற்று கற்றதன்படி நடந்து தன திறமைகளை வளர்த்துக்கொண்டு புகழோடு வாழ்ந்து மறைவது நம் கையில் தான் உள்ளது.
அப்படி ஒரு சாதாரணகு டும்பத்தில் பிறந்து  கல்வி கற்று தேர்ந்து வாழ்வில் புகழின் உச்சிக்கே சென்று இறப்பிலும் கின்னஸ் சாதனை படைத்த பேரறிஞர் அண்ணா பிறந்தது காஞ்சிக்கே பெருமை.

பண்டைய காலம்தொட்டே பட்டு என்றாள் காஞ்சிபட்டுதான் பட்டு. பார் புகழும் பட்டு புடவைகள் அசல் தங்க வெள்ளி சரிகை சேர்த்து நெய்யப்பட்டு  வந்தன. காலப்போக்கில் தங்கம் விலை தொட முடிய உயர்த்துக்கு சென்று விடவே மாற்று சரிகை போட்டு மின் தறியில்  யில்  புடவைகள் நேத்து நடுத்தர வர்கத்தினரும் வாங்கும் படி உற்பத்தி செய்கிறார்கள்.
காஞ்சிக்குபோனால் காலாட்டி பிழைக்கலாம் என்பது பழமொழி. எந்த நாளிலும் பிழைப்பு தேடி காஞ்சிக்கு வந்து விடடால் காலாடி என்பது தறி நெய்து என்பதை குறிக்கும். இன்றைய இளம் தலைமுறையினரும் கம்பியுட்டரில் டிசயின் செய்து பிரமாதமான ஒஉடவைகள் நெய்குரார்கள். அன்று எலிசபெத் ராணியிலிருந்து இன்றைய மிச்சேல் ஒபாமாவரை காஞ்சி பாபத்தை உடுத்தாதவர்களே கிடையாது,

காஞ்சிபுரம் இட்லியும் பேர்தான் காசி அல்வா பூசணி அல்வாவும் காஞ்சிக்கே உரிய சிறப்பு பலகாரங்கள்.
காஞ்சியில் கருடசேவையின் போது  மதுரை சோமு பாடினாரே பாடிப்பழயவேத்ம தேடிப்பின்னேவர ஒது ம தமிழ் மறை தேடி நீ செல்வதேன்னே என்று.
காஞ்சி வரதராஜர் பத்து நாட்கள் உர்த்சவத்தை பார்க்கவேண்டுமே இன்றும் கட்டுக்குடுமியும் நெற்றியில் திருமன்னுமாக வாய் நிறைய திவ்யப்ரபந்தம் அல்லது ரிக் வேதம் பாடிசெல்பவர்கள் எல்லாம் சாமானியர்கள் என்று எண்ணி விடாதீர்கள் டெல்லியிலும் அமெரிக்காவிலும் பெரிய பெரிய பதவி வகிப்பவர்களும் அடக்கம்.
கைலாசநாதர் கோவில் மன்னர்களும் மலையத்து நின்ற அதிசயம்.
இன்னும் எவ்வளோவோ உள்ளன. டயிப் அடித்தது ஓடிவிடப்போகிறது முடித்து கொள்கிறேன்.


kanchi

Friday, January 28, 2011

from viveka chinthaamani

மாற்றானிடம்   உள்ள செல்வம்  பொருளாசை கொண்ட பெண்கள்,உடன் பிறவா சகோதரன்
ஆகியவை ஒருவனுக்கு கை கொடுப்பதில்லை.
ஆசிரியர் தந்த பாடம் செய்த தர்மம் குரு உபதேசித்த மந்த்ரம் மற்றவர்களின் கஷ்டம் இவைகளை வெளியில் சொல்ல கூடாது
பெற்றெடுத்தவள் மட்டும் தாயல்ல சகோதரனின் மனைவி குருபத்னி வேலைக்கு
ஊதியம் வழங்கும் முதலாளியின் மனைவி பெண் கொடுத்த மாமியார்
ஆகியோரும் தாய்க்கு சமமானவர்களே.
பணமில்லாத வாழ்க்கை குறிப்பறிதல் இல்லாத மனைவி விருந்தாளி வராத வீடு
வளர்ச்சி இல்லாத வாணிபம் இவற்றால் பயன் விளைவதில்லை
கற்றுக்கொடுத்த ஆசிரியரை மாணவன் கல்வி கற்றதும் மறந்து விடுகிறான்
நோய்க்கு மருந்து தந்து வைத்தியம் செய்த மருத்துவரை குணமடைந்த
நோயாளியும் மறந்து விடுகிறான்.
நல்லவர்களின் மனதை கெடுப்பது பெற்றவர்களின் மனதை வருத்துவது
ஒருவனின் கல்வி வளர்ச்சியை தடுப்பது போன்றவை பெரும் பாவசெயலாகும். 
இதைப்போல் இன்னும் ஆயிரம் ஆயிரம் சொல்லலாம் மொத்தத்தில் எல்லோர்க்கும் பசி நீங்கி வயிறு    குளிர்ந்து நாளை ப ற்றிய கவலையின்றி இருப்போர்க்குதான் உலகின் அழகுகள் எல்லாம் கண்ணுக்குத்தெரியும்
ஏழை கண்ணிருந்தும் குருடனே 
இடுப்பொடிய நாற்று நாட்டு எழும் பெண்ணிடம் நாற்று வரிசை
நாற்று வரிசை அழகு இல்லையா என்றால் அவள் கூறுவாள் ---இல்லை
பகலெல்லாம் உழைய்த்து வீடு திரும்பும் பெண் இரவு சமையல் என்ன செய்யலாம்
என்று யோசனையில் ரயிலில் வரும் பெண்ணிடம் அந்திவானத்து வானவில்
அழகாக உள்ள தே என்றால்  அவள் கூறுவாள்--இல்லை 

paarvaiyin koname verudhaan

பார்வையின் கோணமே வேறுதான்.
காலைத்தூக்கத்தை கதகதப்பான போர்வையில் அனுபவிக்கும் பேரனைக்
கேளுங்கள் மாமரச்த்துக்குயில் கூவுவது இனிமையா என்று --இல்லை என்பான்
பாடாளியை எழுப்பி பழைய கஞ்சியை குடிக்க கொடுத்துகொண்டே உதய சூரியன்
அழகா என்று கேட்கட்டும் --இல்லை என்பான்
.

Thursday, January 27, 2011

kavidhai illai en karutthu

ஆணின் அழகு
பிடரி முடி சிலிர்க்க பீடு நடை போட்டு வரும் சிங்கம்
பீலியில் அழகெல்லாம் தெரிய மழை மேகம் கண்டு ஆடி வரும் மயில்
கொண்டையை சிலுப்பி கொக்கரக்கோ என்று காலை கூவி வரும் சேவல்
நீண்ட தந்தம் கொண்டு காதுகள் விசிறியாக வீச ராஜநடை போட்டு வரும் யானை
உயர்ந்த திமிலும் கூரிய கொம்பும் கொண்டு சீறி வரும் காலை
மனிதனும் ஆசை பட்டு வைக்கும் குறுந்தாடி கொண்ட ஆடு

தூக்கி கட்டிய முடியும் நீவி விட்ட தாடியும் கொண்ட திருவள்ளுவர்
முறுக்கிய மீசையும் தீ உமிழும் கண்களும் கொண்ட பாரதி
சிம்ம நடை நடந்து சிம்ம குரல் கொண்டு சிங்காரமாய் வாழ்ந்த சிவாஜி கணேசன்
எல்லா ஆண்களும் ஆசை பட்டு வைத்துகொண்ட மீசைக்கு சொந்தகார் ரன் வீரப்பன்
ராமாயணம் தொடரை ராமன் அழகுக்காகவே பார்க்கும் ரசிகைகள் பலர் உண்டு
எல்லா விளம்பரங்களிலும் நவரசம் காட்டி நடிக்கும் குட்டிப்பையன்
பெண்ணே கண்டு மயங்கும்படி ஆண் வேடம் போட முடியும்
பெண் என்னதான் ஆணாக வேடம் போட்டாலும் பெண்ணின் கனிவு முகம் மாறாது
ஆணாக பிறந்து பெண்ணாக மரியா கதை பலவுண்டு
பெண் ஆணாக மாறியதாக கதை அறிதன்றோ
அது கடவுள் செய்த சதி


Tuesday, January 25, 2011

vilambarangalil aniyaayam

தினமும் தொலைக்காட்சி பெட்டியை திறந்தால் அபத்தமன் விளம்பரங்கள்

எரிச்சலூட்டுகின்றன
. ஒரு பெண் எழுநூறு தடவை சோப்பு தேய்க்கிறாள் என்றாள் அவள் புத்தி
சுவாதீனம் அற்றவலகத்தான் இருக்க வேண்டும்
எழுநூருமுறை தேக்க தான் இயலுமா ?
ஹமாம் சோப்பு போட்டு குளித்தால் புதரிலுள்ள பாம்பு ஓணான்
பல்லி தேள் எல்லாம் பயந்து ஓடிவிடுமா
ஒரு குழந்த சின்னம்மை போட்டதால் தேர்வில் ஜீரோ வாங்கினான் என்பதை மகிழ்ச்சிய்டு ஒரு குழந்தை சொல்ல தாய் தக்சப்ப்ச்ன் கேட்டு கொண்டு இருக்கிறார்கள்

அந்த குழந்தை  மற்றவர் துயர்கண்டு மகிழும் ஒரு சாடிச்டாக தானே வளருவான் .
இதையெல்லாம் உங்களைபோன்றவர்கள் தலையங்கத்தில் கண்டித்து எழுதினாலாவது

பலன் கிடைக்குமா 

aanmaa

ஆன்மாவுக்கு தீங்கினை விளைவிப்பவை எட்டு
காமம் ---ஒரு பொருளை விடும்பினால் அதை அனுபவிக்கும் வரை
நிற்க ஒன்னத நிலை
குரோதம் ---விருப்பட்ட பொருள் கிடைக்காவிட்டால் அண்மையில் இருப்பவர் பக்கம்
பிறக்கும் சீற்றம்
உலோபம் ---தன்னிடத்திலுள்ள பொருளில் பேராசை
மோகம்---செய்வன தவிர்வனவற்றை பகுத்தறிய மாட்டாமை
பொருள் முதலியன பெருமவற்றால் வரும் களிப்பு
மாத்சர்யம் ----பிறருடைய செல்வம் முதலிவற்றை கண்டு பொறாமை படுதளோடு
அமையாது அதனை செயலிலும் காட்டுதல்
அஞானமாவது ---இவற்றால் மேல்வரும் கேட்டினை அறியாமை
அசூயை -----குணங்களிலே குற்றங்களை ஆரிடுதல் .

Saturday, January 15, 2011

ini varuma andha pogal

மாமியார் செங்கல் அடுப்பு கட்டி மண் பானை அடுப்பிலேற்றி
மகன்களும் மருமகள்களும் பயபக்தியுதன் சூழ்ந்து நிற்க
பாலும் சோறும் பொங்கி வழியும்போது பேரப்பிள்ளைகள்
பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரம் செய்யும்போது அடைந்த
ஆனந்தம் காஸ் அடுப்பில் சக்கரை பொங்கல் வைத்து விசில் சத்தமே
பொங்கலோ பொங்கல் என்று எண்ணி நெய்யும் முந்திரியும் ஏலமும்
மணமணக்க போட்டு படையலிட்டு கணவனும் மனைவியும் எதிரெதிரே
உட்கார்ந்து உற்றம் சுற்றம் இன்றி உண்ணும் பொங்கல் இனிக்குமா
கசந்ததே

Friday, January 14, 2011

pongal

 பொங்கல் திருநாளை வருடப்பிறப்பாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நன்னாளில்
நாம் சில நல்ல கொள்கைகளை கடைபிடிப்போம்
யாரும் பார்க்காத இடத்திலும் நாம் குப்பைகளை போடக்கூடாது. பஸ் நிலையங்களில் குப்பைகூடை  இருந்தாலும் காபி குடித்த கப்புகள் பழத்தோல்கள் சாப்பிட்ட இலைகள்
எல்லாவற்றையும் ஜன்னல் வழியாக வீசுகிறார்கள்
கட்டண கழிப்பறைகள் இலவச கழிப்பறைகள் இருந்தாலும் இந்த ஆண்கள் சுவரோரம் சிறுநீர் கழிப்பதை விடுவதில்லை.
இதுவே ஒரு நிறை மாத கர்ப்பிணி பெண் கழிப்பறை வசதி இல்லாத இடத்திலும் கண் கலங்கி தவித்து நிற்பாளே தவிர வேறு விதியில்லை.
பஸ்ஸில் பெரும்பாலும் வயதானவர்கல்லுக்கு இடம் கொடுப்பது ஆண்கள்தான். பெண்கள் தலையை திருப்பிக்கொண்டு கவனிக்காதது போல் இருந்து விடுவார்கள்.
.

bogi

பரண்மேல் போட்ட சைக்கிளை கீழே இறக்குங்கள், அதை உபயோகப்படுத்துவதால் உடற்பயிற்சி செய்தது போலவும் ஆச்சி பணமும் மிச்சம்.
மாலையில் குழந்தைகளை பள்ளியிலோ வீட்டிலோ மற்ற பிள்ளைகளுடன் விளையாட சொல்லுங்கள்.
அதனால் அவர்களுக்கு மற்றவஸ்ர்களுடன் பழுகும் தன்மை விட்டு கொடுக்கும் தன்மை எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் குணம் எல்லாம் ஏற்படும்.
வயதானவர்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உபயோகமற்ற சீரியல்களை பார்பதை விட்டு குழந்தைகளை அருகில் உள்ள கோவிலுக்கோ பூங்காவுக்கோ அழைத்து செல்லுங்கள்
நல்ல காற்றை சுவசித்தர்போலவும் இருக்கும் வீட்டிலுள்ள இளம் தாய்க்கு உதவினார்போலவும் இருக்கும்.
இரவில் சப்பாத்தி சாப்பிடனும் இட்லி தோசை சாப்பிடனும் என்றெல்லாம் வயதாவர்களுக்கு கட்டாயமில்லை ரசம் சதாமும் மோர் சாதமும் அளவோடு சாப்பிட்டால் ஒன்றும் செய்யாது.
குழந்தை களுக்கு கூடியவரை பழங்கள் கொடுங்கள் பாட்டிலில் அடைத்த ஜூஸ் கொடுக்காதீர்கள்.
மதத்தில் ஒருமுறை வ்ண்டுமானால் வெளியில் அவரவர் வசதிக்கேற்ற இடத்தில் சாப்பிடுங்கள். ஆனால் வீட்டில் சுத்தமான எண்ணையில் தயாரித்த முறுக்கு தட்டை வடை போன்றவற்றை கொடுங்கள்
இரவில் கோரை பாயில்  படுங்கள் அல்லது இலவம்பஞ்சு மெத்தையில் படுங்கள்  இவை இரண்டும் தான் உடல் நலத்திற்கு நல்லது..டு

bogi

போகி பண்டிகை என்பது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பார்கள்
என் பார்வையில் புதியன கழிந்து பழையன புகவேண்டும் என்பதே.
காலையில் ஆறுமணிக்காவது படுக்கையை விட்டு எழுந்து விடவேண்டும்.
காலை உணவை நிராகரிக்ககூடாது.
தென்னிந்தியா உணவுகளான இட்லி, தோசை, பொங்கல்,உளுந்துவடை சட்னி
சாம்பார் இவையெல்லாம் சரிவிகித உணவுகள் என்று உணவு வல்லுனர்களின்
கணிப்பு. இவற்றிஎல்லாம் விட்டு விட்டு சீரியல்களும் ஓட்சும் கால் வயிறு சாப்பிட்டு ஓடுவதை தவிர்க்க வேண்டும்.
ஆங்கில பழமொழிய காலையில் சக்ரவர்த்திபோல் உண்ணவேண்டும் மதியம் ராஜா போல் உண்ண வேண்டும் இரவு பிச்சை காரனைப்போல் உண்ணவேண்டும் என்பதுதான், நம் உணவுமுறை அதற்கு நேர் மாறாகத்தான் உள்ளது.
வருடத்தில் முன்னூறு  நாட்கள்வெயிலில் காயும் தலைக்கு கொஞ்சம் எண்ணெய் தடவி
சீவினால் பார்க்கவும் அழகு ஆரோக்யமும் ஆகும்  பரண் மேல் போட்ட saiyikkalai

Wednesday, January 12, 2011

kan

கண்
கருணை பொழிவது கண்
கனல் கக்குவதும் கண்
காதல் பேசும் கண்
காமம் வீசுவதும் கண்
கண்ணின் அருமை தெரிவது
கால் மணி நேர மின் தடையின்போது
கரியாகி விடாமல் கண் தானம் தந்து
காப்பீர் இருவர் வாழ்வை

Tuesday, January 11, 2011

azhagu


மழலைக்கு சிரிப்பழகு
முளைத்து வரும்  பல்லழகு
ழு
பள்ளிபருவம் பதினான்கில் பெண்ணுக்கு
பாவாடை தாவணி அழகு
பதினா று வயதினில் ஆணுக்கு
அரும்பும் மீசை தனியழகு
முதிர்கன்னி முக த்தினிலே
காணும் அறிவு முதிர்ச்சியும் தனியழகு
நாற்பது வயது ஆணின் கம்பீர நடையழகு
முதுமைக்கு நரையழகு முதிர்ந்த வயதினிலே
கணவர் கண்ணுக்கு மனைவி அழகு
மனைவி கண்ணுக்கு கணவர் அழகு.

Monday, January 10, 2011

from vaaramalar.

வாழ்க்கை வசப்பட
பகைவர்கள் மிக நல்ல நண்பர்களாய் மாறலாம்
பழைய தொவிகளின் பாரங்கள் நீங்கலாம்
எத்தனை இழந்தாலும் இழந்த பொருளை மீட்கலாம்
என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம்
பதறாத மனம் தான் புதுமைகள் நினைக்கும்
புதுமைகள் செய்தால் செயல்கள் சிறக்கும்
செயல்கள் சிறந்தால் சாதனை பிறக்கும்
சாதனை பிறந்தால் வாழ்க்கை இனிக்கும்
சரிவுகள் தானே சரி செய்துவிடலாம்
சவால்கள்தானே சந்தித்து விடலாம்
சதிகள்தானே முறியடித்து விடலாம்
சிக்கல்கல்தானே சீர் செய்துவிடலாம்
புதிய நட்புகளை ஏற்படுத்தி கொள்ளுங்கள்
பழைய நண்பர்களை கொண்டாடுங்கள்
இரவல் வாங்குபவற்றை திரும்ப கொடுங்கள்
 நாளொன்றுக்கு மூன்று பேரையாவது பாராட்டுங்கள்.
நிரந்தரமான மகிழ்ச்சி
துணிவான முடிவுகளில் இருக்கிறது
பணிவான வார்த்தைகளில் இருக்கிறது
கனிவான அணுகுமுறையில் இருக்கிறது
பரிவான உதவிகளில் இருக்கிறது
தொல்வி வந்தால் பொறுமை அவசியம்
வெற்றி வந்தால் பணிவு அவசியம்
எதுவந்தாலும் நம்பிக்கை அவசியம்
இது என்னுடைய வேண்டுகோள்
புதுவருடத்தில் ஒரு சபதம் எடுத்துக்கொள்வோம்
தயவு செய்து , மிக்க நன்றி,மன்னித்து கொள்ளுங்கள்
இம்மூன்று வார்த்தைகளையும் அந்தந்தத ச்டந்தர்பர்த்தில் தவறாமல் பயன் படுத்துவோம்
பஸ் கண்டக்டர் ஆட்டோ டிரைவர் ஹோட்டல் சர்வர் இவர்களுக்கு ஒரு நன்றி சொல்லுங்கள்
பணம் கொடுக்கும்போது இருந்த முக மலர்சியைவிட அதிகமாக முகம் மலர்வார்கள்
அதைக்காணும் நமக்கும் அகம் மகிழும்
பெற்ற பிள்ளயிடமானாலும் ஒரு வேலை சொல்லும்போது
ப்ளீஸ் என்று போட்டு சொல்லி பாருங்கள் மறு வார்த்தையின்றி
உடனே செய்வார்கள்
நாம் செய்தது தவறு என நம் மனசாட்சி சொல்லும்போது வயது பதவி எதயும் பாராம் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புகேளுங்கள். பிறகு குற்ற உணர்வு மனதை விட்டு ஓடியே போய்விடும்

from vaaramalar.

வாழ்க்கை வசப்பட.
அழுத்தமாக கை குலுக்குங்கள்
கண்களை நேராக பார்த்து பேசுங்கள்
இயல்பாக இதமாக புன்னகையுங்கள்
அறிமுகமானவர்கள் எதிர்ப்படும்போது வணக்கம் சொல்வதில் முந்திக்கொள்ளுங்கள்.
உங்கள் பலன்களை பலப்படுத்துங்கள்
உங்கள் பலவீனங்களை பலவீனப்படுத்துங்கள்
நெஞ்சார நன்றி சொல்லுங்கள்
இயற்கையை ரசிக்க நேரம் ஒதுக்குங்கள்
எப்போதும் துணையிருக்கும் நண்பர்களுக்கு
எப்போதும் வழிகாட்டும் எழுத்துகளுக்கு
எப்போதும் சிரிக்கும் பூக்களுக்கு
எப்போதும் கைவிடாத நம்பிக்கைக்கு
நன்றி சொல்லுங்கள்

சோர்வாக இருக்கிறதா
அமைதியான இடத்திற்கு செல்லுங்கள்
உங்கள் பலங்களை எழுதுங்கள்
மாற்று வழிகளை சிந்தியுங்கள் தியானம் செய்யுங்கள்
ல்
சோதனை சூறாவளியில்
அச்சம்தான் நம் எதிரி அச்சத்தை உதறுங்கள்
உடனடியாய் என்ன செய்ய ? உள்ளுணர்வை கேளுங்கள்
அடுத்தடுத்து போராட ஆயத்தம் ஆகுங்கள்
போனதெல்லாம் போகட்டும் புதிதாக தொடங்குங்கள்

Wednesday, January 5, 2011

kalyana katcheri

கல்யாண வீட்டில் கச்சேரி செய்பவர்கள் வாங்கின காசுக்கு வஞ்சனையின்றி பாடுவார்கள். கேட்கதான் ஆள் இருக்காது, எப்போதும் நானும் என் பெண்கள் இருவரும் கச்சேரி மேடைக்கு எதிரில் உட்கார்ந்துகொள்வோம். பாடுபவர்களுக்கு அவ்வப்போது கைதட்டி உர்ச்சகபடுத்துவோம். எங்களைபர்த்து இன்னும் சில உறவினரும் வந்து எங்கள் அருகில் உட்கார்ந்து கொண்டு உற்சாக படுத்துவார்கள். ஒருமணிநேரமாவது  கேட்டு விட்டு பிறகுதான் சாபிடபோவோம்.
       ஸ்
 அதுபோல என் எழுத்துக்களை ஒன்ற்றிரண்டு பேர் படித்தாலும் படிக்காவிட்டாலும் நான் என் கருத்துக்களை எழுதுவதில் மகிழ்கிறேன்.