Thursday, January 27, 2011

kavidhai illai en karutthu

ஆணின் அழகு
பிடரி முடி சிலிர்க்க பீடு நடை போட்டு வரும் சிங்கம்
பீலியில் அழகெல்லாம் தெரிய மழை மேகம் கண்டு ஆடி வரும் மயில்
கொண்டையை சிலுப்பி கொக்கரக்கோ என்று காலை கூவி வரும் சேவல்
நீண்ட தந்தம் கொண்டு காதுகள் விசிறியாக வீச ராஜநடை போட்டு வரும் யானை
உயர்ந்த திமிலும் கூரிய கொம்பும் கொண்டு சீறி வரும் காலை
மனிதனும் ஆசை பட்டு வைக்கும் குறுந்தாடி கொண்ட ஆடு

தூக்கி கட்டிய முடியும் நீவி விட்ட தாடியும் கொண்ட திருவள்ளுவர்
முறுக்கிய மீசையும் தீ உமிழும் கண்களும் கொண்ட பாரதி
சிம்ம நடை நடந்து சிம்ம குரல் கொண்டு சிங்காரமாய் வாழ்ந்த சிவாஜி கணேசன்
எல்லா ஆண்களும் ஆசை பட்டு வைத்துகொண்ட மீசைக்கு சொந்தகார் ரன் வீரப்பன்
ராமாயணம் தொடரை ராமன் அழகுக்காகவே பார்க்கும் ரசிகைகள் பலர் உண்டு
எல்லா விளம்பரங்களிலும் நவரசம் காட்டி நடிக்கும் குட்டிப்பையன்
பெண்ணே கண்டு மயங்கும்படி ஆண் வேடம் போட முடியும்
பெண் என்னதான் ஆணாக வேடம் போட்டாலும் பெண்ணின் கனிவு முகம் மாறாது
ஆணாக பிறந்து பெண்ணாக மரியா கதை பலவுண்டு
பெண் ஆணாக மாறியதாக கதை அறிதன்றோ
அது கடவுள் செய்த சதி


No comments:

Post a Comment