Tuesday, May 25, 2010

எங்கேயோ படித்தவை

மதவெறி இல்லாமல் சிறந்த கல்வியை அளிப்பவனே நல்ல குரு.இல்லைஎன்றால் புத்திசாலியான சாத்தானை உருவாக்கும் பாவம் அவனைசாரும்.
எதை எந்த அளவுக்கு விமர்சிப்பது என்பது ஒரு கலை உங்கள் நண்பர்கள் தோள்மேல்  அமர்ந்திருக்கும் ஈயை விரட்ட கோடலியை வீசி விடாதீர்கள்.
ஒருவர் செய்து காட்டியதற்கு எதிராக செய்வதற்கு பெயர் சாமர்த்தியம் அல்ல .
அதன் பெயரும் காபியடிப்பதுதன்.உல்டாவாக காப்பியடிப்பது.
எதிர்த்து பேசாதவரை எந்த மனிதனும் உங்களுக்கு புதியதொரு கருத்தை சொல்வதில்லை.
ஒவ்வொரு புடுக்கருத்தும் உங்களிடம் சேருகிற சொத்து. அதனால் எந்த விஷயத்தையும் ஒப்புக்கொள்வதற்கு முன் நிறைய வாதாடுங்கள்.

Monday, May 24, 2010

எங்கேயோ படித்தவை

எது சந்தோசம் என்ற கேள்விக்கு பதில் புதிரானது
சந்தோஷத்தை அளவுகோல் வைத்தெல்லாம் அளந்து பார்க்காதீர்கள். இருக்கிற மகிழ்ச்சியும் போய்விடும்

ஹீரோ என்பவன் யார்? மற்ற எல்லோரையும்விட ஐந்து நிமிடம் தைரியத்துடன் தாக்குப்பிடிப்பவன்

தப்பு செய்துவிட்டீர்களா மனப்பூர்வமாக மன்னிப்பு கேளுங்கள். உர்ரென்ற முகத்துடன் நீங்கள் கேட்கும் மன்னிப்பு எதிரா ளிக்கு செய்யும் இரண்டாவது அவமானம்.

ஒரு மனிதனின் இதயத்துக்குள் நீங்கள் இடம்பெற நினைத்தால் அவன் அர்த்தமின்றி உங்களை காயப்படுத்தும் போதும் அமைதியுடன் இருந்தாக வேண்டும்.

நூறு சதவீதம் யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்கிற சமயத்தில் ஒரு மனிதன் என்ன செய்கிறானோ அதுதான் அவன் நிஜகுணம்

Sunday, May 23, 2010

எங்கேயோ படித்தவை

வெற்றி என்பது விழாமல் இருப்பது அல்ல  விழுகின்ற ஒவ்வொரு முறையும் கம்பீரமாக எழுந்து நிற்பதே
நீங்கள் சிங்கமாகவே இருக்கலாம். ஆனால் நரிகளின் துணையின்றி நரியுடன் மோதாதீர்கள்
முதலில் கோபத்தை விடுங்கள். முழ்டி முறுக்கேறி இருக்கும்போது எந்த மனிதனாலும் தெளிவாக சிந்திக்க முடியாது.

எங்கேயோ படித்தவை

ஒருவனுடைய இழப்பால் எத்தனை கண்கள் கலங்குகின்றனவோ எத்தனை நெஞ்சங்கள் நடிக்காமல் வாடுகின்றனவோ அவை வடிக்கும் கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் அவனை இறைவனின் அடிகளுக்கு இட்டு செல்லும் படிகள் என்பதை மறந்து விடாமல் வாழ்கையை அர்த்தமுள்ளதாக்குவோம்.
ஓர் எட்டில் ஆடாத ஆட்டமும்
ஈரெட்டில் கல்லாத கல்வியும்
மூவெட்டில் புரியாத மணமும்
நாலெட்டில் பெறாத பிள்ளையும்
ஐயெட்டில் தேடாத செல்வமும்
ஆரெட்டில் காணாத காட்சியும்
எழேட்டில் பெறாத ஓய்வும்
எட்டேட்டில் பெறாத இறப்பும் பாழே .

அபாரமாக  சிந்திப்பதன் மூலம் வெற்றி  விரைந்து வருவதில்லை.
சிறப்பாக  சிந்தித்ததை துணிவுடன் செயல்படுத்தினால் தான் வெற்றி விரைந்து வரும்.
துணிச்சலான புதுமையான ஆரம்பம் என்பதே vetriyai
  nokki paadhi dhooram nerungivitta madhirithan.

எங்கேயோ படித்தவை

அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப்பெற முடியாது. அறிவின்மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம்.
சோகத்தில் ஏன் சிரிக்கிறேன் என்கிறாயா  இருள் சூழும்போது தானே விளக்கேற்ற வேண்டும்.
Early to bed early to rise is the way to be healthy wealthy and wise.
பாண்டவர்கள் ஏதாவது ஒரு பிரச்னைக்கு முடிவெடுக்கும்போது இளையவர்களான
நகுலன் சஹாதேவன் இருவர்க்கும் தங்கள் கருத்தை கூற முதல் சந்தர்ப்பத்தை அளிப்பாராம் மூத்தவர் தர்மர்.
பெரியவர்கள் பேசி முடிவெடுத்த பிறகு இளையகார்கள் தங்கள் கருத்தை கூறாமலே இருந்து விடுவார்கள் என்பதால் இந்த விதி.
ஏழை யாய் இருக்கும்போது இன்பம் காணாத மனிதன் செல்வந்தனாய் இருக்கும்போதும் இன்பம் காணமாட்டான்

Sunday, May 9, 2010

எங்கேயோ படித்தவை

ஏழு நற்குணங்கள் 

1. ஏழ்மையிலும்   நேர்மை
2. கோபத்திலும் பொறுமை
3. தோல்வியிலும் விடாமுயற்சி 
4. வறுமையிலும் பரோபகாரம்
5. துன்பத்திலும் தைரியம் 
6. செல்வத்திலும் எளிமை
7 .பதவியிலும் பணிவு

வயதான மனிதனுக்கு உற்ற  துணை வயதான மனைவி, பழகிய நாய், கையிலுள்ள ரொக்கம்

இன்பமான வாழ்வுக்கு மூன்று விஷயங்கள்  தேவை 
1 .பழையவற்றை மறத்தல்
2 .நிகழ்வதை கவனமாக நடத்தல்
3 .வரப்போவதை நன்கு சிந்தித்தல்

இன்பங்கள் ஜோடியாக வருவதில்லை. துன்பமோ தனித்து  வருவதில்லை.

தேவை குறையும் அளவுக்கு தெய்வத்தன்மை கூடும்.

தொலைபேசி உயிர்களின் ஓசை உரசிக்கொள்ள உதவும் உயிரற்ற துணைவன்.

அதிர்ஷ்டமுள்ளவனுக்கு முதல் குழந்தை பெண்ணாயிருக்கும்.

இளமை ஒரு தவறு.

காளைப்பருவம் ஒரு போராட்டம்.

முதுமை ஒரு வருத்தம்.

மன அமைதியான மணவாழ்வு இவ்வுலகில் சொர்க்கம் . பூசல் நிறைந்த  மணவாழ்வு இவ்வுலகில் நரகம்.