Sunday, March 14, 2010

மகளாக

என்னுடைய இரண்டாவது பருவம் மகள். என் அம்மா என்னுடைய பத்தாவது வயதில் இறந்துவிட்டார். கூட்டுக்குடும்பத்தில் எனக்கு அம்மாவின் நெருக்கமான உறவே கிடைக்கவில்லை. அத்தையே பள்ளிக்கு தயார் பண்ணுவது சாப்பாடு போடுவது தூங்கவைப்பது என கவனித்துகொண்டதால் தாயின் முகமே நினைவில் இல்லை.இரண்டுசம்பவங்கள் தான் இன்னும் நினைவில் நிற்கின்றன . உட்பால் நலம் சரியில்லாமல் இருந்தபோது என் அம்மா என்னிடம் "தாத்தாவிடம் போய் என்னை பார்க்க வரச்சொல்லு வரும்போது ஒரு ஹார்லிக்ஸ் வாங்கி வரச்சொல்லு" என்றார்.ஏனென்றால் என் முதல் மனைவியின் மகா. பதிமூம்ற்று வயதில் திருமணமாகி வந்துவிட்டவர். பதினாறு வயதில் நானும் அடுத்தடுத்து நான்கு பிள்ளைகளை பெற்று விட்டார். இரண்டாம் தரத்துக்கு பயந்து என் தாத்தா மகளை பார்க்ககூட அதிகம் வரமாட்டார். அம்மா சொன்னதை கேட்டுவிட்ட என் அத்தை உன்னை என்ன குறைவாக வைய்த்திருக்கிறோம் அம்மா என் அப்பாவிடம் கேட்கிறாய் என சண்டை பிடித்தார். அதனால் அந்த சம்பவம் என் நினைவில் நின்றுவிட்டது. மற்றது அம்மா ஒரு காலை வேளையில் முனகும் சப்தம் கேட்டு நான் என்ன அம்மா என்று கேட்டேன். ரொம்பவும் தலைவலிக்கிறது அம்மா என்றார். நான் தலையை  பிடித்துவிடுகிறேன் என்று பிடித்துவிட்டுகொண்டு இருந்தேன். திடீரென விழ்த்து எழுந்த என் அப்பா விவரம் அறிந்து கிட்டே வந்து அம்மாவை உசுப்பினார். அம்மா நினவு தவரிவிட்டிருந்தர், பிறகு எழவே இல்லை. ஒரு மணி நேரத்தில் உயிர் விட்டார்.இந்த இரண்டு சம்பவங்கள் தவிர வேறுதுவும் அம்மா மகள் என்ற உறவின் அடையாளமாக நினைவில்  இல்லை.
                                                        தாயுமாகி நின்றார் என் அப்பா. பெரியப்பா பெரியம்மாவின் தியாகத்தால் அமைந்தது எங்கள் வாழ்க்கை, வெளியூரில் வேலை பார்த்த பெரியப்பா தன குடும்பத்தை கொண்டு போகவில்லை. அதுமுதல் நாங்கள் ஆறு சகோதரர்களிரண்டு சகோதரிகள் எரியாப்பவ்ன் பிள்ளைகலாணோம்.
                                                          குட்டி தம்பி பால் மறந்த ஒன்றரை வயது குழந்தை. சதா அழும் நான்கு வயது ஒரு தம்பி. தாய் ஸ்தானத்தை பத்து வயது அக்க நான் ஏற்று கொண்டேன். குளிப்பாட்டுவது சாதம் ஊட்டுவது இடுப்பில் சுமந்து திரிவது. பள்ளிக்கு மணிஅடிக்கும் ஒலி கேட்டு ஓடுவது வாடிக்கை.
                                                           வகுப்பில் முதல் மாணவி என்பதால் ஆசிரியைகளும்
என் நிலை அறிந்து வீட்டுபாடம் செய்ய சொல்வதில்லை.அம்மாவும் வேறு ஒருவேலையும் என்னை இடுவதில்லை. பதினான்கு வயதிலேய பத்தாம் வகுப்பு எழுதவேண்டும்  தன சலுகை பெற்று எழுதினேன். வகுப்பில் முதல் மதிபெண் பெற்று பத்தாம் வகுப்பு தேறினேன்.
                                                                என் அப்பா இத்தனை நாளும் உன் பெரியம்மா பெற்ற  மகளை விட போற்றி வளர்த்தார்க. நாளைமுதல் காலையில் எழுந்துவிடவேண்டும். அம்மாவுக்கு உதவியாக வீடு வேலைகள் செய்யவேண்டும் என அறிவுரை கூறினார். தாய் அற்ற பிள்ளை சீரற்றது என்ற பழமொழியை நீ மாற்றிக்காட்டி உன் பெறியம்மவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
                                                                   சின்னத்தம்பி பள்ளிக்குபோகும் வயதகிவிட்டான். போக்குவரத்து மிகுந்த சாலையில் நானும் என் தங்கையும் நன்கு தம்பிகளையும் ஆட்டு குட்டிகளை மேய்த்து செல்வதுபோல் அழத்துபோவதை தெருவே வேடிக்கை பார்க்கும். வறுமை காரணமாக தம்பிகளுக்கு பயிண்டு செய்த நோட்டு புத்தகங்களும் எனக்கும் தங்கய்க்கும் பேப்பர் வங்கி தத்த புத்தகமும் தான்
                                                                      நான் பத்தாவது படிக்கும்போது ரூ நோட்சு வாங்கவில்லை.சொந்த பந்தங்கள் எல்லாம் இவர்களைப்போல் பெண்கள் எத்தனைபேர் இருந்தாலும் என்ன கவலை என்று சொல்வார்கள். வளையல்கார செட்டியாரிடம் விளைகேட்காமல்தேர்ந்து எடுக்கமாட்டோம். தய்யல்கார பாய் சொல்லுவார் உன் பெண்கள் ரெண்டுபேரும் உலகத்திலேயே திருத்தி தைக்க சொல்லாத பெண்கள்லப்பா என்பார்.
                                                                         அடுத்து எனக்காக மணமகன் தேர்ந்து எடுத்தார்கள். சற்றே ஒல்லியான தோற்றம் கொண்டவர். உறவினர்கள் எல்லாம் தாயற்ற பெண் அவள் விருப்பம் அர்ந்துக்ன்டீர்கா என்று கேட்டார்கள். என் தாதகப்பன் எனக்கு எது நன்மை என்று தெரிந்து செய்வார்கள். என் எண்ணம் என்று தனியாக ஏதும் ல்லை என்று சொல்லி மனமுவது ஏற்றுக்கொண்டேன்.
                                                                   திருமணமாகி சென்றபிறகும் ஒரு துரும்பு கூட தாய் வீட்டிலிருந்து கேட்டவள் இல்லை. புகுந்த இடத்தில் எல்லோரிடமம் நல்ல பேர் எடுத்து வாழ்ந்தேன். என் தாய்வீட்டில் எதாவது பிரச்னை என்றால் இருங்கள் அப்பாவின் செலல மகள் வருவாள் வந்து அப்பாவை சரிக்கட்டிவிடுவாள் என்று என் வருகைக்காக காத்திருப்பார்கள்.

Saturday, March 6, 2010

ஒரு பெண்ணின் முதல் பருவம்

ஒரு பெண்ணின் வாழ்வில் பல கட்டங்களை கடக்க வேண்டி உள்ளது. தாய் வீட்டில்
பேத்தியாக மகளாக சகோதரியாக என்றும் புகுந்த வீட்டில் மருமகளாக மனைவியாக தாயாக பிறகு மாமியராக பாட்டியாக என பலஉருவம் எடுக்க வேண்டி உள்ளது. எனக்கு எழுபது வயதாகிறது. நான் கடந்துவந்த பாதையை சற்றே திரும்பி பார்க்கிறேன். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு தந்தை வழி தாத்தா மட்டும்தான் இருந்தார். வீட்டில் நான் முதல் பெண் குழந்தை எனவும் ஆவலோடு தன்  அம்மாவின் பெயரை பங்கஜம் என்று வைத்துவிட்டு சதா அம்மா அம்மா என்றே அழைப்பார். எனக்கு நான்கு வயது முடிவதற்குள் தமிழ் எழுத்துக்கள் ஆங்கில  எழுத்துக்கள் எழுத படிக்க கற்று தந்தார்.நிறங்கள், உடல் உறுப்புகள் பூக்கள் பழங்கள் உறவுகள் வீடு உபயோக சாமான்கள் என அனைத்தையும் சொல்லி கொடுத்தார். நானும் பொறுமையாக கற்றுக்கொண்டேன். ஐந்து வயது முடிந்ததும் பள்ளியில் சேர்க்க அழைத்துப்போனார். தன்  பேத்தியின் திறமையை பெருமையுடன் தலைமை ஆசிரியருடன் சொல்லி காட்டினார்.. அவர்கள் எனக்கு இரண்டாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள்.
பிறகு நடந்த வேடிக்கையை கேளுங்கள். வகுப்பில் முதல்மாணவியாகஇருப்பேன். ஒரு நாள் கைவேலை வகுப்பிற்கு ஆசிரியை வளையல் துண்டுகளும் பனை ஓலையும் கண்டு வரசொன்னார். நான் மறந்துகொண்டு போகவில்லை, என்னைப்போல் வராத பிள்ளைகளை கையில் பிரம்பால் அடித்தார்கள். என்னைமட்டும் முதல் மாணவி என அலட்சியமா என்று கன்னத்தை நன்றாக திருகிவிட்டர்கள். மத்யம் வீட்டுக்கு போனதும் தாத்தா விசாரணையில் உண்மையை சொல்லிவிட்டேன். வந்ததே கோபம். நேராக ஆசிரியையிடம் போய் இது ஒரு பெரிய குற்றமா குழந்தைகளை  தண்டிக்க என்று கேட்டார்
எல்லா குழந்தையையும்தான்  அடித்தேன். உங்கள் பேத்தி செல்லம் என்றால் வீட்டிலேயே வைத்துபடிக்க வையுங்கள் என்றார். நேராக தலைமை ஆசிரியையிடம் முறையிட்டார் அவர்களும் ஆசிரியைக்கு  ஆதரவாக பேசவும்
மாற்று சான்றிதழ் வாங்கி விட்டு மூன்று மாதங்கள் வீட்டில் பாடம்சொல்லி அடுத்த  வருடம் மூன்றாம் வகுப்பு வேறுபள்ளியில் சேர்த்தார்.
என் அப்பவை அழைத்து என் பேத்தியை பத்தாவதுவரை படிக்கவை என்றார் . அந்த நாட்களில் பெண்வயதுக்கு வந்து விட்டால் பள்ளி படிப்பை நிறுத்தி விடுவார்கள். பாட்டு சொல்லிகொடுத்தார். ஓவிய ஆசிரியராக பச்சையப்பன் பள்ளியில்  வேலை பார்த்தவர். அதனால் ஓவியம் சொல்லி தருவார் . தன்  பேத்தி சகலகலவல்லியாக  விளங்கவேண்டும் என்று கனவுகண்டார்.
வயதான காரணத்தால் கை
கால் பிடித்துவிட சொல்வர் தண்ணீர் குடிக்க கொண்டுவர சொல்லுவர். நான் இன்முகத்தோடு செய்வேன். அதற்கு பரிசாக கதைகள் சொல்லுவார்  . அனால் என்னுடைய பத்தாவது வயதில் தாத்தாவை இழந்துவிட்டேன்.
அவர் சொல்லித்தந்த சகிப்புத்தன்மை, தன்னம்பிக்கை, பொறுமை, இவையெல்லாம் துணையாக இருந்து என் வாழ்வில் உயர்வை தந்துள்ளது.

சிக்கனமே சிறப்பு தரும்

ஒரு ஊரில் இரண்டு பெண்கள் பால் வியாபாரம் செய்து வந்தார்கள்ஒருத்தியிடம் ஆறு பசுக்களும்ஒருத்தியிடம் இரண்டு பசுக்களும்இருந்தனஇரண்டு பசுக்கள்
வைத்திருந்தவள் பெயர்சுமதி . ஆறு பசுக்கள் வத்திருன்தவள் பெயர் ஆண்டாள்.சுமத் காசி செல்ல புறப்பட்டாள். தன்னிடம் இருந்த 5000ரூபாய்களை சுமதியிடம் தனது கச்யிளிருந்து வந்து வாங்கி கொள்வதாக கூறி சென்றாள் ஆறு மாதங்கள் சென்று திரும்பி வந்து பணத்தை கேட்டால் " நீ பணமே தரவில்லை என்று விட்டாள் இந்தவழக்கை சுமதி பஞ்சாயத்தரிடம் கூறி முறையிட்டாள்
பஞ்சாயத்து தலைவர் மறுநாள் காலை இருவரையும் வரச்சொன்னார் ஆண்டாள் "நான்ஆறு பசுக்கள் வைத்திருப்பவள் இவள் பணத்தை ஏமாற்றுவனா என்று கூறினாள் மறுநாள் அவர்கள் வரும் வழியில் தன்னிர்கொட்டி செராக்கி வைத்தார். இருவருக்கும் ஒரு ஒரு செம்பு தண்ணிர் தந்து கால் கழுவி வர சொன்னார். சுமதி கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு கால்களை சுத்ததிக்கொண்டு மீதம் கொஞ்சம் நீரும் வைத்தாள் ஆனால் ஆண்டாள் நீரை கொட்டிகவிழ்த்து கால்களை சீராக கழுவாமல் வந்தாள் அதா கவனித்த நீதிபதி சுமதி இரண்டு பசுக்கள் வைத்ருந்தலும் பணம் சேர்த்து உன்னிடம் கொடுத்திருப்பல். உண்மையை கூறிவிடு இல்லையென்றால் பெரிய தண்டனை கொடுப்பேன் என்றார் ஆண்டாள் பயந்து உண்மையை ஒத்துக்கொண்டு பணத்தை திருப்பி கொடுத்தாள்.

Thursday, March 4, 2010

இரண்டாவது கதைபுத்திமானே பலவான் . ஒரு மழை மிகுந்த மாலைப் பொழுதில் ஒரு ஆடு தன இரண்டு குட்டிகளுடன் ஒரு குகைக்குள் ஒதுங்கியது சிறிதுநேரத்தில் அந்த குகையில் வசிக்கும் புலி தொலைவில் வருவதைப்பார்த்து ஆட்டு குட்டிகள் பயத்தால் நடுங்கின ஆடு பயப்படாதீர்கள் என்று சொல்லி விட்டு உரக்க "இ ப்போதுதனே ஒரு புலியை முழுதாக சாப்பிட கொடுத்தேன். மறுபடி பசி என்று அழுதால் நான் என்ன செய்வேன்.இந்த குகையில் வசிக்கும் புலி வரட்டும் அதை அடித்து தருகிறேன்" என்றது. அதை கேட்ட புலி தலை தெறிக்க ஓடியது. வழியி ல் பா ரத்த நரி விவரம் கேட்டது. புலியும் நடந்தவற்றை கூறியது. நரி கலகலவென சிரித்துவிட்டு நீங்க எமந்திரகள் நான் ஒரு ஆடும் அதன் இரண்டு குட்டிகளும் குகைக்குள் செல்வதை இபோதுதான் பார்த்தேன். என்னுடன் வாருங்கள் என்றது. புலி நம்பவில்ல. நீ எப்போதுமே தந்திரக்காரன் என்னை ஏமாற்றி விட்டு விட்டு ஓடி விடுவாய் என்றது நரி நீங்கள் நம்பாவிட்டால் உங்கள் வாலுடன் என் வாலை கட்டிகொள்ளுங்கள் என்றது புலியும் அதுபோல் செய்தது இரண்டும் குகைல்க்கு அருகில் சென்றன மறுபடி ஆடுகுட்டிகள் பயந்து அழுதன ஆடு உரக்க "நான் சொன்னதுபோல் நரி மாமா புலியை கட்டி இழுதுவருகிறார் பார்த்திர்களா சற்று பொறுங்கள் புலியை அடித்து தருகிறேன் என்றது. இதை கேட்ட புலி தலை தெறிக்க ஓடிற்று அதன் ஓட்டத்த்க்கு ஈடு கொடுக்க முடியாம நரி படுகாயம் அடைந்தது . ஆடு தன அறிவால் புளிய்டமிருந்து பிழைத்தது

Wednesday, March 3, 2010

எல்லாம் நன்மைக்கே

காண பரம்பரை கதைகள் என்றால் செவிவழிகேட்ட கதைகள் என்று பொருள்.என்னிடம் கதைகேட்கும் வயதில் உள்ள பேரப்பிள்ளைகள் எல்லாம் கண் காணா தொலைவில் உள்ளார்கள். இதைபட்டிப்பவர்கள் எல்லாம் என் பிள்ளைகளே பேரப்பிள்ளைகளே. எனக்கு பிடித்த கதைகளை தினம் ஒன்றாக சொல்லுகிறேன். ஒரு அரசரும் மந்திரியும் கட்டு வழி சென்றுகொண்டிருந்தர்த்கள் அரசர் ஒரு மரத்திலிருந்த காய் ஒன்றை கத்தியால் பறித்தார்.சுண்டுவிரலில் காயம் பட்டு ரத்தம் கொட்டியது. மந்திரி கட்டுபோட்டுவிட்டு எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து கொள்வோம் என்றார் என் கையில் ரத்தம் வருவது உனக்கு நன்மையாக தெரிகிறதா தொலைந்துபோ என்று காலால் எட்டி உதைத்தார் மந்திரி பக்கத்தில் இருந்த ஒரு கிணற்றிற்குள் விழுந்து விட்டார். சிறிது நேரத்தில் உந்த வழியாக வந்த நரபலி சாமியார்கள் நால்வர் அரசரை பார்த்து நாம் தேடிவந்த ராஜலக்ஷ்ணம் பொருந்திய ஆள் கிடைத்துவிட்டான் என்று கூச்சலிட்டு அரசரை உடல் முழுதும் சோதித்தார்கள் விரலில் இருந்த வெட்டு காயத்தை பார்த்து அடடா இவன் பின்னப்பட்ட உருவம் பலிக்கு உதவமாட்டான் என்று விட்டு சென்று விட்டார்கள் ராஜா உடனே கிணற்றருகில் சென்று மந்திரியை வெளியே தூக்கி விட்டு நீர் சொன்னது சரிதான் என் கையில் காயம் பட்டதா ல் இன்று உயிர் பிழைத்தேன் நான் உம்மை கிணற்றஇல் தள்ளியதற்காக மன்னித்துவிடு என்றார். அதுவும் நன்மைக்கே மகராஜா என்றார். அது எப்படி என கேட்டார். நான் வெளியே நின்றிருந்தால் உங்களை விட்டு அடுத்ததாக என்னை அல்லவோ பிடித்துபோயிருப்பர்கள் என்று கூறினார். அரசுரும் மந்திரியை பாராட்டினார். எதையும் நன்மைக்கே என்று எடுத்து கொள்ளுவோம்.வாழ்வில் முன்னேறுவோம்.