Tuesday, December 28, 2010

engayo paditthavai.

வாரமலர் கவிதை சோலையில் நான் ரசித்துப்படித்தது
வருத்தப்படவில்லை மகனே உன் சொல்லும் செயலும் நியாயமானது
உலகம் ஆயிரம் சொல்லட்டும உற்றார் உறவினர் எப்படியும் ஏசட்டும் கவலைப்படாதே
மனக்கசப்புடன் மருமகள் ஒட்டாத பேரன் பேத்திகள் இனியும் உழைக்க
ஒத்துழைக்காத உடம்பு
திண்ணையும் புல்தரையும் காணாமல் அகதியாய் அடுக்குமாடி குடியிருப்பில்
நகரத்து நரக வாழ்க்கை
இவை எதுவுமின்றி இப்போது நலமாய் இருக்கிறேன் மகனே உனக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்
 மழை வெயில் தெரியாத இருப்பிடம் வேளாவேளைக்கு உணவு வேலையின்றி அமைதியான ஒய்வு நல்லதொரு வயதான நட்பு வட்டம்
பொழுது போக பூஜை பஜனை தாராள மருத்துவம் இன்னும் என்ன குறை எனக்கு
நீ மட்டும் மாதம் ஒரு முறை குடும்பத்துடன் வந்து முகம் காடு உள்ளபடியே நான் மகிழ்வுடன் இருக்கிறேன் இந்த முதியோர் இல்லத்தில்.
எழுதியவர். சொல்கேளான் எ வி  கிரி சென்னை,
ஆசிரியருக்கு ரொம்பவும் ஆசைதான். வாரம் ஒருமுறை என்று எழுதி இருந்தார்.
பெண்டாட்டி பிள்ளைகூட கழிப்பதற்கே வார இறுதி போதாது. அதனால் நானாகவே மாதம் ஒருமுறை என மாற்றி விட்டேன்.

Monday, December 6, 2010

kutram paarkin sutram illai.

மனிதர்களாய் பிறந்த எவரும் நூறு சதவீதம் நல்லவர்களை இருக்க முடியாது. நெருங்கிய  உறவுகளை அவரர் இயல்புகளுடன்  அப்படியே ஏற்று  வாழ பழக வேண்டும். அதற்கு மிகுந்த பொறுமையும் விட்டுகொடுக்கும் மனப்பான்மையும் அவசியம் தேவை. உறவுகளுடனே விட்டுகொடுக்காமலோ வீம்பு பேசியோ குற்றம் கண்டுபிடிப்பதே வேலையாக ஒருவன் வாழ்ந்தால் அவன் எதிகாலத்தில் உயர் அதிகரிகளுடனோ உடன் வேலை செய்பவர்களுடனோ கீழ பணி புரிபவர்களுடனோ ஒத்து போக மாட்டான். இதனால் மிஞ்சுவது கேட்ட பெயரும் மன உளைச்சலும் தான். முதலில் தாய் தந்தை உடன் பிறப்புகள் உற்றார் உறவினஅருண் ஒத்துவாழ குழந்தைகளை பழக்குங்கள். பிறகு நன்பர்க அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அதே மனப்பான்மையுடன் வாழ பழுகுவான். வாழ்வில் பல வெற்றிகளை வாரி குவிப்பான்.

artthame verudhaan.

ஊரான் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் தன பிள்ளை தானே வளரும். வாரியார் கூறினார், மனைவி கர்ப்பமாக உள்ள போடு ஊரான் பிள்ளையாகிய அவளை நன்கு கவனித்து ஊட்டி வளர்த்தால் தன பிள்ளை அவள் கருவிலிருக்கும் அவனுடைய பிள்ளை தானாகவே நன்கு வளரும்.

artthame veru dhaan

தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யனப்பெய்யும் மழை  இந்த குறளுக்கு பலரும் தெய்வத்தை தொழாமல் கணவனை மட்டுமே தொழும் மனைவி பெய் என சொன்னால் உடனே மழை பெய்யும் என்பதுதான். ஆனால் கலைஞர் தன குறளோவியத்தில் கூறுவது. விவசாயி ஆடி மாதம் நாற்று நட்டுவிட்டு ஆவணியில் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி நிற்பான். அந்த நேரம் மழை பெய்தால் தான் அவன் விவசாயத்துக்கு உதவியாக இருக்கும். பெய்ய தவரிவிட்டலோ காலங்கடந்து பெய்தாலோ பெரும் நஷ்டமடய்வன். அதுபோல் கணவனுக்கு உரிய நேரத்தில் தகுந்த உதவிகளை மனைவி செய்தால் தான் வாழ்வு சிறக்கும் இதுவும் ஏற்புடைய பொருள்தானே.

Sunday, December 5, 2010

en abipiraayam

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு நகை சீர்வரிசை என தாய் வீட்டார் செய்யவேண்டும் என்ற நம் நாட்டு கொள்கையில் கொஞ்சம் கூட விருப்பம் கிடையாது. இரண்டு பேர் திருமணமான பிறகு இணைந்துவாழ போகிறோம். அதற்கு பெண்ணை பெற்றவர்கள் எதற்குநகை  பணம் திருமண செலவு என்று செய்யவேண்டும். உன் வீட்டில் . வசதி இல்லை அதனால் அப்படி நினைக்கிறாய் என்கிறார்கள். வசதி உள்ள தாய் தகப்பன் மகளுக்கு திருமண அன்பளிப்பாக எதுவேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் மணமகன் வீட்டார் அதை வற்புறுத்தி வாங்குவதை தான் மனதார வெறுக்கிறேன், ஆண் வேலையில் உழைக்கிறான். பெண் வீட்டில் அதைவிட அதிகமாக உழைத்து குடும்பத்தை உருவாக்குகிறாள்  உன்னுடைய வாரிசை சுமந்து பெற்று வளர்த்து ஆளாக்குவதற்கு ஆண் மகன் அல்லவோ பெண்ணுக்கு நன்றி சொல்லவேண்டும். அதனால் தான் அந்த நாச்ட்க்களில் பரிசம் போடுவதென்று பெண்ணை பெற்று வளர்த்து தரும் வீட்டுக்கு பணம் கொடுத்து மணமுடித்தார்கள் இடையில் வந்த வழக்கம் தான் பெண் வீட்டாரிடம் நகை சீர் வரிசை என பிடுங்குவது.எனனை பொறுத்தவரை திருமணமாகி 45 வருடங்களில் ஒரு சிறு துரும்பு கூட தாய் வீட்டிலிருந்து கேட்டு பெற்றத்தில்லை. திருமணத்தின் போது செய்த சீர்வரிசைகளை பெற்றுகொண்டேன். பிறகு ஆறு குழந்தைகளை வளர்த்து நன்கு படிக்க வைத்தோம். இரண்டு பெண்களை மணமுடித்து கொடுத்தோம். தாய் வீட்டில் வசதியாக இருந்தும் கடனாக கூட ஒரு பைசா யாரிடமும் பெற்றதில்லை. அந்த விழயத்தில் நான் தீர்மான மான முடிவோடு இருந்தேன், சிக்கனமாக குடும்பம் நடத்தினோம். பெற்றோர் கஷ்டம் தெரிந்த பிள்ளைகள் ஒரு தொல்லையும் தராமல் மணியாக  படித்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்ந்தது உள்ளார்கள். நாங்கள் செய்த தவப்பயன் இரண்டு மருமகன்களும் எதுவும் நாங்கள மனமுவது செய்த சீர்வரசைகளை ஏற்று இன்றுவரை எங்களை தங்கள் பெற்றோர் போல் அன்பு பாராட்டுகிறார்கள். நங்கள் நாலு பில்லைகல்லுக்கும் மனம் முடித்த போது பெண் வீட்டாரிடம் உங்கள் விருப்பம் போல் உங்கள் பெண்ணுக்கு செய்யுங்கள்   சொல்லிவிட்டோம். அதனால் நான்கு மருமகள்களும் எங்கள் மேல் நல்ல பாசம் கட்டிவருகிறார்கள். பிள்ளைகளை படிக்கவைத்த போது செலவு சமாளிக்க முடியாமல் என் கணவர் திணறுவார். என் தாய் வீட்டில் போட்ட நகைகள் எதற்கு உள்ளன. விற்று படிப்பு செலவை சமாளிப்போம் என்று தைரியம் சொல்லி எல்லா நகைகள் வெள்ளி சாமான்கள் அனைத்தையும் விற்று படிக்க வைத்தோம். பெரிய பிள்ளை வேலைக்கு போனது என் அண்ணனிடம் தைரியமாக கடன் வாங்கி திருமணம் முடித்து இரண்டு வருடங்களில் கடனை திருப்பி தந்தோம். எதற்கு இதை எல்லாம் எழுதுகிறேன் என்றால் படித்த எந்த ஆண் மகனும் தன பெண்டாட்டிக்கு சோறு போட்டு துணி எடுத்து கொடுத்து சம்பளம் வாங்காத வேலைக்காரி போல் நடத்த பெண் வீட்டாரிடம் கேட்க வெட்கப்பட வேண்டும்,

engayo paditthavai

சமயோசிதம் என்றால் என்ன?  ஒரு ஏழை விவசாயி ஒரு மைனரிடம் கடன் வாங்கி இருந்தான். திருப்பி கொடுக்க முடியவில்லை. கடனுக்கு பதிலாக பெண்ணை மணமுடித்து கொடுக்க சொன்னான். பெண்ணுக்கோ அவனை மணக்க விருப்பமில்லை. ஒரு கண்டிஷன் போட்டாள் ஒரு பையில் இரண்டு கற்களை போடுங்கள் கணங்களை மூடிக்கொண்டு  நான் வெள்ளைக்கல்லை எடுத்தால் உன்னை மணமுடிக்கிறேன் கருப்புல்கல்லை எடுத்தால் நீ எனனை விட்டுவிடவேண்டும் என்றாள் அதற்க்கு எல்லோரும் சம்மதித்தார்கள் அந்த பணக்காரன் இரண்டு  கர்க்கலுமே  வெள்ளையாக பையில் போட ஏற்பாடு செய்திருந்தான். இதை எப்படியோ அறிந்த அந்த பெண் கண்களை கட்டி கல்லை எடுக்க சொன்னதும் ஒரு கல்லை எடுத்து அருகில் இருந்த கிணற்றுக்குள் போட்டு விட்டாள். எல்லோரும் பதறி என்ன இப்படி செய்துவிட்டாய் என்றார்கள். பையில் உள்ள மற்றொரு கல் என்னவோ அதன்படி தீர்பளியுங்கள் என்றாள் பையில் வெள்ளைக்கல் இருந்ததால் அவள் எடுத்தது கருப்பு என தீர்மானித்து அவளை திருமணம்  செய்யாமல் விடுவித்தார்கள். அவள் எடுத்தாலே அதுதான் சமயோசித புத்தி

engeyo paditthavai

ஆரோக்யமான போட்டி வேண்டும்.வாலிக்கும் சுக்ரீவனுக்கும் கடும் போர் நடந்து கொண்டிருந்தது. இதை ராம லக்ஷ்மணர் பார்த்து கொண்டு இருந்தனர். லக்ஷ்மணன் ராமரிடம் "அண்ணா இவர்கள் சண்டைக்கு முடிவே இல்லையா என்று கேட்டான். உடனே ராமபிரான் "எல்லோரும் பரதனைபபோல் ஆகிவிட முடியுமா"என்றார். இதைக்கேட்டு லக்ஷ்மணன் கோபம் கொள்ளவில்லை. காட்டுக்கு உடன் வந்து கண்ணை இமை காப்பதுபோல் காக்கிறோம் நம்மைவிட்டு எங்கோ உள்ள பரதனை அண்ணன் புகழ்கிறாரே என்று எண்ணாமல் உடனே "அண்ணா நீங்கள் சொல்வது சர்டிதன். நீங்கள் இல்லாதபோது அயோத்தியை கட்டிக்காக்கும் பரதன் தான் உயர்ந்தவன் என்று சொன்னான். சகோதரர்கள், நண்பர்கள் அலுவலக பணியாளர்கள் தொழிலாளிகள் பொறாமை இன்றி இருந்துவிட்டால் சண்டை சச்ச்சரவுக்கே இதம் இல்லை. நம்மை சார்ந்தவர் யார் முன்னேறினாலும் அவரை பாராட்டுவதுடன் அவரை முன் மாதிரியாக கொண்டு முன்னேறவும் முயற்சிக்க வேண்டும்.