Wednesday, September 29, 2010

முதல் அமெரிக்க பயணம்

என் கணவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். நான் குடும்ப தலைவி. எங்களுக்கு நான்கு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். கடவுளருளால் அனைவரும்  நன்கு படித்து நல்ல நிலையில் உள்ளனர்.
                             எங்கள் மகன்கள் மூவரும் 1998-99 இல் ஒருவர் பின் ஒருவராக அமெரிக்காவில் கணினி துறையில் வேலை பெற்று சென்றுவிட்டார்கள்.
2000 வருடம் ஏப்ரல் மாதம் எங்களை அழைக்க தேவையான ஏற்பாடுகளை செய்தார்கள். மே இரண்டாம்  தேதி நாங்கள் சென்னையில் புறப்படுவதாக ஏற்பாடு.
                            இரண்டாம் தேதி புதன் இரவு எட்டு மணிக்கு உறவினர் புடைசூழ விமான நிலையம் வந்தடைந்தோம். பாஸ் வாங்கிகொண்டு எல்லோரும் உள்ளே வந்தார்கள். எல்லா செக்கிங்கும் முடிந்து நாங்கள் வெளியே வந்து எல்லோரிடமும் விடை பெற்று கொண்டு உள்ளே போனோம். சரியாக 11 : 50 க்கு உள்ளே போகலாம் என்றார்கள். நாங்கள் முதல் முறை விமான பயணம் என்பதால் எதோ ஏணி வழியே  ஏறி விமானத்தின் உள்ளே செல்வோம் என்று எண்ணி இருந்தோம். ஒரு வராந்தா வழியாக சென்றால் நேராக விமானத்தின்   உள் செல்லும் இடம் வந்துவிட்டது. இடம் கண்டுபிடித்து உட்காரவும் பெல்ட்டை அணிந்து கொள்ளவும் ஏற்கனவே அறிமுகமான ஒருவர் உதவினார். விமானம் கிளம்பியதே தெரியவில்லை. ரன்வேயில்  ஓடி முடிந்ததும் லிப்டில்  ஏறும்போது உண்டாகும் லேசான குலுக்கல்தான் இருந்தது.
             விமானத்தில் முதலில் ஆரஞ்சு பழரசமும் பின்பு இரண்டு மணிக்கு சாப்பாடும்  கொடுத்தார்கள். சாப்பிட்டு முடிந்த்ததும் சற்று கண் அயர்ந்தோம்.
ஆறரை மணிக்கெல்லாம் கோலாலம்பூர் சென்று அடைந்தோம்.
எங்கள் கைகடிகாரத்தை திருத்தி வைத்துகொண்டோம். கோலாலம்பூர் விமான நிலையம் ரொம்ப ரொம்ப அழகு. பிரம்மாண்டம், சில  மணி நேரம் ஆசைதீர சுற்றி வந்தோம். ஐந்து  டாலர்கள் கொடுத்து இரண்டு காபி குடித்தோம். ஒன்பது மணிக்கு விமானத்துக்கு திரும்பினோம். இது பெரிய போயிங் விமானம் இங்கு மதிய சாப்பாடு தந்தார்கள். மாலை நாலரைக்கு Tokyo  சென்றடைந்தோம். வெளியில் போக அனுமதி கிடையாது. லவுஞ்சிலேயே அமர்ந்திருந்தோம். கோலாலம்பூர் விமானநிலையத்துடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை. ஆனால் நம் ஊர் பஸ் நிலையம் போல் நிமிடத்து ஒரு விமானம் இறங்குவதும் மேலே புறப்படுவதும் கண்கொள்ளா காட்சி. மறுபடி விமானத்திற்கு செல்ல வேண்டிய இடத்துக்கு போக அந்த தம்பதிகள் உதவினார்கள். ஆனால் யார் உதவியும் இன்றி எந்த இடத்துக்கும் போகலாம். வழியை படங்கள் மூலம் போட்டிருக்கிறார்கள். படிப்பறிவு இல்லாதவர்கள்  கூட சற்று கவனமாக இருந்தால் தனியாக எந்த இடத்துக்கும்  செல்லலாம்.
                                                   ஆறு மணிக்கு விமானம் புறப்பட்டது. இரவு உணவுக்கு முன்  அடிக்கடி குடிக்க எதாவது கொடுத்து கொண்டே இருந்தார்கள். சரியாக பத்து மணிக்கு ஜன்னல்களை சாத்திவிட்டார்கள். பெரிய விளக்குகளை அணைத்துவிட்டார்கள். அவரவர் இருக்கைக்கு மேல் விளக்கு மற்றும் குளிரூட்டும் வசதி உள்ளது. இரவா பகலா பொழுது விடிந்துவிட்டதா ஒன்றும் தெரிய வில்லை. பசிபிக் கடல் மீது நீண்ட பயணம். பொழு விடிந்தது என்று அவர்களாக வந்து ஜன்னல் கதவுகளை திறந்துவிட்டு காலை காபி தந்தார்கள் பிறகு காலை உணவு தந்தார்கள்.
                                                 3  ஆம்  தேதி  வியாழன் பகல் ஒரு மணிக்கு  Los  Angeles வந்தடைந்தோம் விமானத்தில் பயணிக்கும் போது எந்த பயமும் தெரியவில்லை வீட்டில் சோபாவில் உட்கார்ந்து இருப்பதுபோல் தான் இருந்த்தது, தரையை தொடும் போதுதான் சற்று தட தட  என்ற ஓசையுடன்   நம்மை அறியாமல் தூக்கி போடுகிறது.
செக்கிங் போது  எதற்கு வந்து உள்ளீர்கள் என்று கேட்டார்கள். பிள்ளையை பார்க்க மற்றும் சுற்றிபார்க்க என்றோம். சரி என்று 6 மாதங்களுக்கு விசா கொடுத்து விட்டார்கள். இதுவரை உதவிய தம்பதியருக்கு நன்றி கூறி விடை பெற்றோம். பெட்டிகளை எடுக்க பலரும் உதவினார்கள். முதியவர்கள்  என்றல் நாம் கேட்காமலே வலிய வந்து உதவுகிறார்கள்.
எனக்கு தானியங்கி படிகளில் (escalator) இறங்க பயம் சாதாரண படிகளிலேய இறங்கி விட்டேன். பிள்ளைகள் , மருமகள்கள் பேரக்குழந்தைகள் அனைவரையும்  பார்த்ததும் மனம் கொள்ளாத மகிழ்ச்சி.
                    இனி சொந்த கதை சொல்லி படிப்பவர்களை போரடிக்க மாட்டேன்.
இனி நாங்கள் சென்ற ஒவ்வொரு இடமாக சொல்கிறேன்.

Sunday, September 26, 2010

எங்கேயோ படித்தவை

புத்திசாலித்தனம் என்பது தேர்வு மதிப்பெண்களை வைத்து தீர்மானிப்பது அல்ல.
  • கணிதமேதை ராமானுஜம்  ஆங்கிலத்தில்  தேர்வில் தேறாதவர்.
  • உலகம் புகழும் ஐன்ஸ்டீனை பள்ளி ஆசிரியர், " நீ ஒன்றும்  உருப்படமாட்டே" என் வகுப்பில் இருப்பதால்  என் மரியாதை குறைகிறது" என்பாராம்.
  •  பேரறிஞர் அண்ணா  நான்கு முறை பத்தாம் வகுப்பு தேர்வில் கணிதத்தில் தோல்வியை கண்டவர்.
பேச்சுத்திறன், வார்த்தை சரளம், எண்களில் திறமை, முப்பரிமாண சிந்தனை  உணர்வு, ஊகம், ஞாபகம், தெர்ச்டோனே கில்பிர்ட் என்பவர் ஏழு இல்லை நூற்றி இருபது  அம்சங்கள் உள்ளன என்கிறார். 
 
IQ டெஸ்ட் படி உலக ஜனத்தொகையில்
  • 68 -85  சதவிகிதம் பேர்  115 புள்ளி IQ  
  • 13 சதவிகிதம் பேர் 116  முதல் 130 புள்ளி IQ
  • 2   சதவிகிதம் பேர் மட்டுமே 130 புள்ளிகளுக்கு மேல்  உள்ளார்கள்                                         சுஜாதா தன்னுடைய ஏன்,எப்படி,எதற்கு என்ற புத்தகத்தில் தன்னைப்போன்ற சராசரி  மனிதருக்கு  100 புள்ளிகள் IQ உள்ளதாக குறிப்பிடுகிறார்.
இறைவனால் கொடுக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது
இறைவனால் தடுக்கப்படுவதை யாராலும் கொடுக்க முடியாது.

Saturday, September 25, 2010

எங்கேயோ படித்தவை

மாங்கல்யம் 9  இழைகளை  கொண்டது.
  1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ளல் .
  2. மேன்மை                  
  3. ஆற்றல்.                     
  4. தூய்மை
  5. தெய்வீக குணம்
  6. உத்தமகுணங்கள்
  7. விவேகம்
  8. தன்னடக்கம்
  9. தொண்டு மனம்
இவற்றை ஒரு பெண் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம்
அமைக்கப்பட்டுள்ளது.

 
  • செருப்பு தேயும்போது கால் ஜாக்கிரதை ஆகி விடவேண்டும்.
  • வயது ஏறும்போது பண சேமிப்பு பத்திரமாக இருக்கவேண்டும்.
  • மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல விடாமுயற்சியினால்தான்.
  • பசி வந்திடப்பத்தும் பறந்து போகும். மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை மற்றும்  காமம் இவையே அந்த பத்தும்
  • பயமும் தயக்கமும் உள்ளவனை தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
  • பிடிவாதக்காரன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான். 
  • வளமையில் வலது கை உழைப்பு இடது கை சிக்கனம்
  • பசித்தவனுக்கு சமாதானம் கூற முடியாது. பசித்தவனுக்கு காதுகள் கிடையாது                                                 
சாணக்யன்


முப்பது வருடங்களுக்கு முன் தினத்தந்தியில்  தினமும் சாணக்யன் சொல் என்று படத்துடன் ஒரு  சொல் வெளிவரும். என பிள்ளைகளை பிடிவாதக்கார குழந்தைகள் என்று யாரவது சொன்னால் நான் உடனே பிடிவாதக்காரன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான் நான் சொல்லவில்லை சாணக்யன் சொல்லிப்போயிருக்கிறார் என்று சொல்வேன்.
அதனால் தான் எந்த வயதிலும் படிப்பை ஒரு சவாலாக ஏற்று படித்து  ஜெயித்து  காட்டுகிறார்கள். இதை நினைத்து  நான் பெருமைப்படுகிறேன்.

காசி யாத்திரை- 4

கரையேறி வந்து உடை மாற்றிக்கொண்டு கரை ஓரமாகவே படகில் சென்று மற்ற படித்துறைகைளை (ghat) பார்த்தோம்
அரிச்சந்திர ghat  மணிகர்ணிக ghat  என்பவைதான் தகனம் செய்யும் இடங்கள்.  அரிச்சந்திர ghat  என்பதை பார்த்தோம். ஒரு  பிணம் எரிந்து முடிந்த நிலையிலும் மற்றொன்று எரிந்து கொண்டும் இருந்தது. இந்த ghat  அகால மரணம் மற்றும்  தற்கொலை போன்ற பிணங்களை எரிக்கும் இடமாம். மணிகர்ணிகா ghat அங்கு உயிர் விடுவதற்கு என்றே  வந்து காத்திருந்து இறந்து  மற்றும் வயதாகி இறந்தவர்களை தகனம் செய்யும் இடமாம். அதனால் அங்கு kutta     நெரிசலால் இடம் இல்லாததால் பாதி  ஏரியும் போதே கங்கையில்  இழுத்துவிட்டுவுட்ம் கட்சியாம். அது கொம்\ஞ்சம் தொலைவில் இருந்தது அங்கு போய் திரும்ப நேரமாகு. படகும் எதிர்காற்றில் வலிப்பது சிரமம் என்று சொல்லவே கரைக்கு திரும்பி விட்டோம்.
மூன்று மைல் தொலைவில் உள்ள காலபைரவர் கோவிலுக்கு போனோம். ஞாயிற்று கிழமை விசேஷம் என்பதால் சொல்ல மிடியாத கூடம். கைடு ஒரு ஆரஞ்சு கலர் பலூன் வாங்கினான். எதற்கு என்று கேட்டால் இந்த கூட்டத்தில் நாம் திசைக்கொருவராக பிரிந்துவிடுவோம் நான் இந்த பலூனை தூகிபிடித்து கொண்டு ஓரிடத்தில் நிற்பேன் நீங்கள் எல்லோரும் அங்கு வந்து விட வேண்டும் எர்ந்ற்றன், என்னே சமயோசித புத்தி  அவ்வையின் கர்வத்தை முருகன் அடக்கிநோற்போல் அந்த நிமிடம் படித்தவர்கள் என்ற ஆணவம் யாருக்காகிலும் இருந்திருந்தால் அந்த நொடியில் ஒழிந்துவிட்டது.
                         பிறகு விமானநிலையம் நோக்கி பயணப்பட்டோம். வழியில் சாரநாத் பார்த்தோம். புத்தர்கயாவில்   முக்தி பெட்ட்றதும்  முதன்முதலில் சீடர்களுக்கு உரை நடத்திய இடம். தங்க புத்தர் சிலை. அங்கு தானே நாம் அரசாங்க சின்னம் அசோகா சின்னம் என்று கேட்டேன். அது முன்பு வெளியில் தான் இருந்தது அதை உடைதுவிடுகிரார்கள் என்று மேயுசியத்தில் கொண்டுவித்து விட்டார்கள் என்று காண்பித்தான். எங்கள் விமானம் இரண்டு மணிநேரம் தாமதமாக புறப்பட்டதால் டெல்லியில் சென்னை விமானத்தை பிடிக்க முடியவில்லை ஏழு மணி விமானத்தில் இடம் கொடுத்து ஒருவர் போர்டிங் பாஸ் தருவதும் மற்றவர் அதெல்லாம் எனக்குஇன்னும்  தகவல்  வரவில்லை உங்களை பஸ்ஸில் ஏற்ற முடியாது என்று வம்பு செய்தார்கள். டாக்டர் சத்தம் போட்ட பிறகு ஜெட் லைட் என்ற விமானத்தில் காசியிளிருன்த்து வந்தவர்கள் மற்றும் சிலரை ஏற்றிக்கொண்டு பெரும்பாலும் காலியாகவே சென்னை வந்து சேர்ந்த்தது.  ஒரு வழியாக நல்ல விதமாக காசி பயணம் முடித்து கொண்டு வீடு வந்து செர்ந்த்தோம். கடவுளுக்கு நன்றி அழய்த்துபோன மகாதேவன் தம்பதிக்கும் நன்றி.

Friday, September 24, 2010

காசி யாத்திரை- 3

 காலையில் எழுந்து குளித்துவிட்டு ஆறு மணிக்கெல்லாம் படித்துறைக்கு சென்றுவிட்டோம். அங்கிருந்து படகு சவாரி. ஓரமாகவே சென்று ஒவொவொரு கட்டமாக காண்பித்தான் அந்தகால அரசர்கள் தாங்கள் பெயரால் படித்துறைகளும் அதட்ற்குமேல் சத்திரங்களும் கட்டி வைத்திருக்கிறார்கள். நாங்கள் குளித்ததும் உடைமாற்ற வேண்டும் என்று சொல்லியிருந்தோம். அதுதான் நாங்கள் செய்த தவறு. நிறையபேர் குளிக்கும் இடமாக இருந்தால் படிகள் சேறு இன்றி சுத்தமாக இருக்கும்
எங்களை தனியாக கூட்டமே இல்லாத ஒரு படித்துறையில் இறக்கி விட்டான். வயதில் பெரியவர்கள் நீங்கள் முதலில் இறங்கி குளியுங்கள் என்று சொல்லவே நானும் அவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துகொண்டு இறங்கினோம் முதல் படியிலேயே நன்கு அங்குல உயரத்துக்கு சேறு ஒரே வழுக்கள். காலே கீழே படியவில்லை. நான் பயத்தில் நச்டுங்கி அப்படியே உட்கார்ந்து விட்டேன். இவர் துணிச்சலாக நன்கு படிகள் இறங்க்ஹி நின்று எனனை வா என்று மிரட்டுகிறார். படிதேரியாமல் வழுக்கினால் முதுகில் சரியான அடி படும். நான் மெதுவே உட்கார்ந்து வருகிறேன் என்று எப்படியோ இறங்கி இறங்கி இருவருமாக கங்கையில் மூன்று முறை முழுகி எழுந்தோம். எங்களுக்கு பிறகு மற்றவர்கள் கொஞ்சம் தைரியமாகவும் வசதியாகவும் இறங்கி குளித்தார்கள்.

Wednesday, September 22, 2010

காசி யாத்திரை- 2

மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் புறப்பட வேண்டும் என்பதால் காலை உணவை கட்டி தந்து விடும்படி கேட்டோம். ஒரு சண்ட்விச் ஒரு கேக் ஒரு ஆப்பிள் மற்றும் ஜூஸ் என கட்டி ரெடியா ஹாலில் வைய்துவிட்டர்கள் நாங்களும் எழரைகேல்லாம் புறப்பட்டுவிட்டோம் வழியில் ஒரு மரத்தடியில் சில மேசைகளும் நாற்காலிகளும் போட்டிருந்தன. அங்கு கொண்டுவந்த உணவை உண்டு அருகில் இருந்த தேநீர் விடுதியில் தேநீர் அருந்திவிட்டு புறப்பட்டோம். 123 கிலோமீட்டர் தொலைவு அலஹபாத்  பதினோரு மணிக்கு போனோம் அன்குய் ஸ்நானம் செய்தால் துணிகளை தானம் செய்துவிட வேண்டும் என்று சிலரும் வேண்டாம் என்று சிலரும் சொன்னார்கள்,
நான் பலரும் குளித்த இடத்தில் நாம் குளித்துவிட்டு ஈரவுடைகளை காரில் சுமந்துவந்து எங்கு தோப்போம் எங்கு உலர்த்துவோம் அதனால் சுமாரான துணிகளை உடுதிப்போய் அங்கு போட்டு விட்டு வந்துவிடுவோம் என்றேன் அது போலவே எல்லோரும் உடுத்தி சென்றோம்.
யமுனைகரையோரம் படகோட்டிகள் நிற்கிறார்கள் நம்மை ஒரு படகில் அரை கிலோமீட்டர் தொலைவு அழைத்து சென்று அங்கு நிலையாக நிற்கும் ஒரு படகில் கையை பிடித்து இறக்கிவிடுகிரார்கள், அங்கு இருபது அடி அஆழம்.  நிலையாக நிற்கும் படகில் நான்கு அடிக்கு நான்கடி துவாரம் போட்டு உள்ளே ஒரு பலகையை
கட்டி உள்ளே தொங்கவிட்டிருக்கிராரகள் நம்மை இருவர் இருவராரக கையை பிடித்துகொண்டு இறங்க சொல்லி பத்திரமாக இறக்கி விடுகிறான். இடுப்பளவு தண்ணீரில் நிற்கிறோம் அப்படியே மூழ்கி எழ வேண்டியதுதான். மிகுந்த பயத்துடன்
மூன்று முறை முழுகி எழுந்தோம் தீர்ந்த்தது திருவேணி சங்கம ஸ்நானம் என்று கரை ஏறி உடை மாற்றிக்கொண்டு ஈர உடைகளை அங்கு கொடுத்துவிட்டோம். தல 350 படகோட்டி வாங்கி கொண்டான்.
       காசிக்கு திரும்ப பயணமானோம் வழியில் விந்த்யச்சல் என்ற சக்தி பீடம் பார்த்தோம் 108 சக்திபீடங்களில் ஒன்றாம் ஹோடேல்லுக்கு வரும் வழயில் ஒரு இடத்தில் காசிவந்த நினைவாக ஒன்றிரண்டு புடவைகள் வாங்கினோம்.
கைடைவிட்டே அன்னபூரணி சின்ன சிலய்களும் காசி தீர்த்தமும் வாங்கி கொண்டோம். பக்கத்தில் உள்ள உணவு விடுதியில் இரவு உணவை முடித்து கொண்டோம். மறுநாள் காலை ஆறு மணிக்கே கிளம்பினால்தான் கங்கா ஸ்நானம் முடித்து எல்லா ghaat  என்கிற படித்துறைகளை பார்த்துவிட்டு வழியில் சாரநாத் பார்த்துவிட்டு விமானநிலையம் செல்ல நேரம் சரியாக இருக்கும்  என்று கிடு சொன்னார்
.

காசி யாத்திரை- 1

ஆறரை மணிக்கு கங்கைக்கு ஆரத்தி பூஜா விசேஷம் என்றார்கள், மறுபடி கால்வலியை பொருட்படுத்தாமல் கங்கை கரைக்கு சென்றோம் அங்கு படித்துறையில் நம்மூர் தெப்பத்துக்கு படிகளில் இடம் பிடித்து உட்காருவதுபோல்  ஜனங்கள் உட்கார்ந்திருந்தார்கள் படகில் சிறிது தூரம் சென்று எதிரே தெரியும் பூஜையை பார்ப்பது நன்றாகஸ் இருக்கும் என்று போனோம்  அய்ந்து இடங்களில் திருநங்கையர் போல் உள்ளவர்கள் கங்கையை நோக்கி தூபம் தீபம் சாமரம் வீசுதல் பஜன் பாடுதல் என்று  ஒரு மணிநேரம் செய்தார்கள். பிறகு காண்கையில் அகல் விளக்குகளை ஏற்றி மிதக்க விட்டார்கள்,
அத்துடன் அன்றைய ட்ரிப் முடிந்து ரூமுக்கு வந்து படுத்து விட்டோம்

Friday, September 10, 2010

ஒருவர் மிக உயர்ந்த இடத்தில இருக்கிறார் என்றால் அவர் மிக அதிகமாக வேதனைகளை துரோகங்களை அனுபவித்திருப்பார் என்று தான் அர்த்தம் ஆனால் மிக
மிக வலிமையான மனவுறுதியின் காரணமாக அனைய்தையும் தாண்டி அந்த
இடத்திற்கு வந்திருக்கிறார் என்பதே அர்த்தம்

தன்னால் அடையமுடியாத ஒன்றை மற்றவர்கள் அடைந்தால் அதைக்கண்டு சகியாத
மன நிலைக்கு பொறாமை என்று பெயர்
ஒரு மனிதனுடைய மேன்மைகளைஎல்லாம் பொறாமை தேய்த்துவிடுகிறது
மற்றவர்களது முன்னேற்றத்தை கண்டு மகிழ்கிற அளவே ஒரு மனிதன் முன்னேற்ற
மடைகிறான்  பகவத் கீதை
செல்வம் சேருதல் தொடர்ந்து ஆரோக்யமாக இருத்தல் பிறியமுடையவளும் இனிமையாக பேசுபவளுமாகிய அனுகூலமான மனைவி பணிவுள்ள புதல்வன் நல்லறிவு அவ்வறிவும் பொருளீட்டவோ ஞானம் பெறவோ உதவியாக இருத்தல் இவ்வாறு அம்சங்களும் மனிதனுக்கு வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன
விதுர நீதி.
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் வாய்சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
மதுரதேமொழி மாதர்கள் எல்லாம்
வாணி பூசைக்குரியன பேசீர்
எதுவும் நல்கி இங்கேவகையாலும்
இப்பெரும்பணி நாட்டுவம் வாரீர்
கல்விப்பணிக்காக பாரதி
கதிர்களை சுமந்து நிற்கும்போது பயிர் அழகு பெறுகிறது
தாமரையை சுமந்து நிற்கும்போது குளம் அழகு பெறுகிறது
நாணத்தை சுமந்து நிற்கும்போது பெண் அழகு பெறுகிறாள்
அறத்தை சுமந்து நிற்கும்போதுதான் மனிதன் அழகுடையவனாகிறான்
நான்மணிக்கடிகை