Sunday, September 26, 2010

எங்கேயோ படித்தவை

புத்திசாலித்தனம் என்பது தேர்வு மதிப்பெண்களை வைத்து தீர்மானிப்பது அல்ல.
  • கணிதமேதை ராமானுஜம்  ஆங்கிலத்தில்  தேர்வில் தேறாதவர்.
  • உலகம் புகழும் ஐன்ஸ்டீனை பள்ளி ஆசிரியர், " நீ ஒன்றும்  உருப்படமாட்டே" என் வகுப்பில் இருப்பதால்  என் மரியாதை குறைகிறது" என்பாராம்.
  •  பேரறிஞர் அண்ணா  நான்கு முறை பத்தாம் வகுப்பு தேர்வில் கணிதத்தில் தோல்வியை கண்டவர்.
பேச்சுத்திறன், வார்த்தை சரளம், எண்களில் திறமை, முப்பரிமாண சிந்தனை  உணர்வு, ஊகம், ஞாபகம், தெர்ச்டோனே கில்பிர்ட் என்பவர் ஏழு இல்லை நூற்றி இருபது  அம்சங்கள் உள்ளன என்கிறார். 
 
IQ டெஸ்ட் படி உலக ஜனத்தொகையில்
  • 68 -85  சதவிகிதம் பேர்  115 புள்ளி IQ  
  • 13 சதவிகிதம் பேர் 116  முதல் 130 புள்ளி IQ
  • 2   சதவிகிதம் பேர் மட்டுமே 130 புள்ளிகளுக்கு மேல்  உள்ளார்கள்                                         சுஜாதா தன்னுடைய ஏன்,எப்படி,எதற்கு என்ற புத்தகத்தில் தன்னைப்போன்ற சராசரி  மனிதருக்கு  100 புள்ளிகள் IQ உள்ளதாக குறிப்பிடுகிறார்.
இறைவனால் கொடுக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது
இறைவனால் தடுக்கப்படுவதை யாராலும் கொடுக்க முடியாது.

No comments:

Post a Comment