Saturday, September 25, 2010

காசி யாத்திரை- 4

கரையேறி வந்து உடை மாற்றிக்கொண்டு கரை ஓரமாகவே படகில் சென்று மற்ற படித்துறைகைளை (ghat) பார்த்தோம்
அரிச்சந்திர ghat  மணிகர்ணிக ghat  என்பவைதான் தகனம் செய்யும் இடங்கள்.  அரிச்சந்திர ghat  என்பதை பார்த்தோம். ஒரு  பிணம் எரிந்து முடிந்த நிலையிலும் மற்றொன்று எரிந்து கொண்டும் இருந்தது. இந்த ghat  அகால மரணம் மற்றும்  தற்கொலை போன்ற பிணங்களை எரிக்கும் இடமாம். மணிகர்ணிகா ghat அங்கு உயிர் விடுவதற்கு என்றே  வந்து காத்திருந்து இறந்து  மற்றும் வயதாகி இறந்தவர்களை தகனம் செய்யும் இடமாம். அதனால் அங்கு kutta     நெரிசலால் இடம் இல்லாததால் பாதி  ஏரியும் போதே கங்கையில்  இழுத்துவிட்டுவுட்ம் கட்சியாம். அது கொம்\ஞ்சம் தொலைவில் இருந்தது அங்கு போய் திரும்ப நேரமாகு. படகும் எதிர்காற்றில் வலிப்பது சிரமம் என்று சொல்லவே கரைக்கு திரும்பி விட்டோம்.
மூன்று மைல் தொலைவில் உள்ள காலபைரவர் கோவிலுக்கு போனோம். ஞாயிற்று கிழமை விசேஷம் என்பதால் சொல்ல மிடியாத கூடம். கைடு ஒரு ஆரஞ்சு கலர் பலூன் வாங்கினான். எதற்கு என்று கேட்டால் இந்த கூட்டத்தில் நாம் திசைக்கொருவராக பிரிந்துவிடுவோம் நான் இந்த பலூனை தூகிபிடித்து கொண்டு ஓரிடத்தில் நிற்பேன் நீங்கள் எல்லோரும் அங்கு வந்து விட வேண்டும் எர்ந்ற்றன், என்னே சமயோசித புத்தி  அவ்வையின் கர்வத்தை முருகன் அடக்கிநோற்போல் அந்த நிமிடம் படித்தவர்கள் என்ற ஆணவம் யாருக்காகிலும் இருந்திருந்தால் அந்த நொடியில் ஒழிந்துவிட்டது.
                         பிறகு விமானநிலையம் நோக்கி பயணப்பட்டோம். வழியில் சாரநாத் பார்த்தோம். புத்தர்கயாவில்   முக்தி பெட்ட்றதும்  முதன்முதலில் சீடர்களுக்கு உரை நடத்திய இடம். தங்க புத்தர் சிலை. அங்கு தானே நாம் அரசாங்க சின்னம் அசோகா சின்னம் என்று கேட்டேன். அது முன்பு வெளியில் தான் இருந்தது அதை உடைதுவிடுகிரார்கள் என்று மேயுசியத்தில் கொண்டுவித்து விட்டார்கள் என்று காண்பித்தான். எங்கள் விமானம் இரண்டு மணிநேரம் தாமதமாக புறப்பட்டதால் டெல்லியில் சென்னை விமானத்தை பிடிக்க முடியவில்லை ஏழு மணி விமானத்தில் இடம் கொடுத்து ஒருவர் போர்டிங் பாஸ் தருவதும் மற்றவர் அதெல்லாம் எனக்குஇன்னும்  தகவல்  வரவில்லை உங்களை பஸ்ஸில் ஏற்ற முடியாது என்று வம்பு செய்தார்கள். டாக்டர் சத்தம் போட்ட பிறகு ஜெட் லைட் என்ற விமானத்தில் காசியிளிருன்த்து வந்தவர்கள் மற்றும் சிலரை ஏற்றிக்கொண்டு பெரும்பாலும் காலியாகவே சென்னை வந்து சேர்ந்த்தது.  ஒரு வழியாக நல்ல விதமாக காசி பயணம் முடித்து கொண்டு வீடு வந்து செர்ந்த்தோம். கடவுளுக்கு நன்றி அழய்த்துபோன மகாதேவன் தம்பதிக்கும் நன்றி.

No comments:

Post a Comment