காலையில் எழுந்து குளித்துவிட்டு ஆறு மணிக்கெல்லாம் படித்துறைக்கு சென்றுவிட்டோம். அங்கிருந்து படகு சவாரி. ஓரமாகவே சென்று ஒவொவொரு கட்டமாக காண்பித்தான் அந்தகால அரசர்கள் தாங்கள் பெயரால் படித்துறைகளும் அதட்ற்குமேல் சத்திரங்களும் கட்டி வைத்திருக்கிறார்கள். நாங்கள் குளித்ததும் உடைமாற்ற வேண்டும் என்று சொல்லியிருந்தோம். அதுதான் நாங்கள் செய்த தவறு. நிறையபேர் குளிக்கும் இடமாக இருந்தால் படிகள் சேறு இன்றி சுத்தமாக இருக்கும்
எங்களை தனியாக கூட்டமே இல்லாத ஒரு படித்துறையில் இறக்கி விட்டான். வயதில் பெரியவர்கள் நீங்கள் முதலில் இறங்கி குளியுங்கள் என்று சொல்லவே நானும் அவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துகொண்டு இறங்கினோம் முதல் படியிலேயே நன்கு அங்குல உயரத்துக்கு சேறு ஒரே வழுக்கள். காலே கீழே படியவில்லை. நான் பயத்தில் நச்டுங்கி அப்படியே உட்கார்ந்து விட்டேன். இவர் துணிச்சலாக நன்கு படிகள் இறங்க்ஹி நின்று எனனை வா என்று மிரட்டுகிறார். படிதேரியாமல் வழுக்கினால் முதுகில் சரியான அடி படும். நான் மெதுவே உட்கார்ந்து வருகிறேன் என்று எப்படியோ இறங்கி இறங்கி இருவருமாக கங்கையில் மூன்று முறை முழுகி எழுந்தோம். எங்களுக்கு பிறகு மற்றவர்கள் கொஞ்சம் தைரியமாகவும் வசதியாகவும் இறங்கி குளித்தார்கள்.
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment