Thursday, January 31, 2013

குமுதம் ச்நேஹிதியில் விவாத மேடையில் இன்றைய காலகட்டத்தில் வரதச்ட்சினை முறை சரியா தவறா.
சென்ற தலைமுறையை சேர்ந்த்த 73 வயது வாசகி நான். அன்றும் சரி இன்றும் சரி பெண்ணுக்கு நகைகள் சீரர் செனத்தி என்று செய்வதை வெறுப்பவள். இருந்தாலும் ஒரு விஷயம் சிந்திக்க வேண்டி உள்ளது 
வரதட்சினை வாங்காமல் திருமணம் செய்து கொள்பவர்கள் இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு சொந்த வீடு வாங்க பிள்ளையை நல்ல பள்ளியில் சேர்க்க என்ற பண உதவி தேவை படும்போது நம் மகளை குத்தல் பேச்சு பேச ஆரம்பித்துவிடுவார்கள் அங்கு படும் அவதி போருக்க முடியாமல் தாய் வீடு வந்தால் அவளை பார்த்துக்கொள்ள வயதான தாய் தகப்பனால் முடியுமா. அண்ணன் தம்பிதான் எவ்வளவு நாளைக்கு தாங்குவார்கள். நீ வழாவெட்டியாக  இருப்பதால் தங்கை தம்பி தங்கிதிருமனகள் தட்டி போகின்றன என்று சமாதானம் சொல்லி மம்யார் வீட்டுக்கே திருப்பி அனுப்புவார்கள். அந்த பெண் அங்கேயும் வாழமுடியாமல் இங்கேயும் ஆதரவு இன்றி தவறான முடிவுக்கு வருவாள். அவளுக்கென்று போட்ட நகைகளோ பனமூஇருந்தால் அவள் திறமைக்கு ஏற்ற்ற வாறு வாழ்கையை அமித்து கொள்ளலாம். அதனால் இந்த காலகட்டத்திலும் வரதட்சினை கொடுப்பது அவசியமே.

Wednesday, January 30, 2013

குமுதம் ச்நேஹிதி   திருமணத்துக்கு முந்தைய காதலை சொல்லலாமா காதல் என்பது உங்கள் இதயத்துக்கும் உங்கள் காதலர் இதயத்துக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் அல்ல நீங்கள் கடிதங்கள் பரிமாறிக்கொண்டு இருக்கலாம் சினிமா பார்க் பீச் என்று சேர்ந்தது சென்றிருக்கலாம். இவையெல்லாம் உங்கள் நண்பர் அல்லது உறவினர் வட்டாரத்துக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை ஏதோ சூழ்நிலையில் உங்கள் காதல் நிறைவேறாமல் போகலாம் இப்போதுதான் பெண் பார்க்க வரும்போதே பெண்ணையும் பிள்ளையும் பேச அனுமதிக்கிறார்களே. அப்போது உங்கள் காதலைப்பற்றி சொல்லி விட்டு அவருக்கு சம்மதம் என்றால் மேற்கொண்டு திருமணம் பற்றி பேசலாம் இல்லையெனில் வேறு ஏதாவது கரணம் சொல்லி உங்களை நிராகரிக்கும்படி தயவுடன் கேட்டுகொல்லுங்கள் இந்த நேர்மைக்ககவே உங்களை ஒருவர் ஏற்றுக்கொள்ள முன் வருவார். அதுவரை பொறுமை காப்பதே புத்திசாலித்தனம். 
நான் எழுதி குமுதம் ச்நேஹிதியில் விவாதமேடையல்  இடம்  பெற்ற வை.
பெற்றோரை கவனிக்காமல் விட்டு விடும் பிள்ளைகளை சட்டத்தின் மூலம் தண்ட நை வாங்கி கொடுத்து பெற்றோரை பராமரிக்க சொல்லலாமா தானாக கனியாத பழத்தை தடிகொண்டு கனிய வைத்தால் என்ன ஆகும் அந்த கதிதான் தண்டனை தந்து பெற்றோரை கவனிக்க சொன்னால் பெற்றோருக்கு ஏற்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் பெற்றோர் தான் ரோல் மாடல் நம் பெற்றோரை நம் குழந்தைகள் முன்னால் அன்புடன் நடத்த வேண்டும் நம்மைப்பார்த்து நம் பிள்ளைகள் நம் வயதான காலத்தில் நமக்கு திருப்பி அன்பை செலுத்துவார்கள்
தண்டனைக்கு பதில் பிள்ளைகளிடமிருந்து ஒரு தொகச்யை மதாமாதம் பெற்றுக்கொண்டு அரசே ஒரு முதிர் இல்லம் நடத்தலாமே 
உண்மையான தெய்வபக்தி.
ஓரூ அரசன் தன்னுடையா   காவலன் ஒருவனுடன் வேட்டைக்கு சென்றார்.
காட்டில் பெகு தூரம் சென்று விட்டார்கள். பசிமயக்கம் இருவருக்கும் கண்ணை இருட்டியது  ஓரிடத்தில் உட்கார்ந்தா ர்கள்.
வெகு தொலைவில் ஒரு குடிசை இருந்தது தெரிந்தது.
காவலாளி நான் அங்கு போய் ஏதாவது உணவுபெற்று வருகிறேன் என்றான் அதற்க்கு அரசர் நீ போனால் ஒன்றும் கொடுக்க மாட்டார்கள். என்னைபார்ததால் ஏதாவது தருவார்கள். நீ பேசாமல் மரத்தடியில் படுத்து இளைப்பாறு என்று சொன்னார். காவலன் நாராயண என்று கூறி துண்டை உதறி போட்டு படுக்க முனைந்தான்.அடே மூடா உனக்கு நாராயணனா உவவு தரப்போகிறான் என்ற கேலியாகச கேட்டு விட்டு சென்றார். குடிசையில் இருந்தவர்கள் மன்னருக்கு வயிறார உணவு கொடுத்து மீதம் இருந்ததை கட்டி கொடுத்தார்கள். அரசன் காவலாளியை எழுப்பி இந்தாடா உன் நாராயணன் உனக்கு உணவு தந்தார் நான் தானே தந்தேன் இனியாவது நாராயணனை நம்புவதைவிடு என்றார். அதைகேட்டு காவலன் கலகல என சிரித்தான். என்ட சிரிக்கிராஇஎன்ட்ரு அரசர் கேட்டார். அரசரண் நீப்கள் உணவு இருக்குமிடம் பொய் கேட்டுவாங்கி சாப்பிட்டீர்கள் .அனால் எனக்கோ அரசரையே தன கயல் உணவு கொண்டு வந்து கொடுக்க வைத்து விட்டார் நாராயணன். அவர் கருணையை எண்ணி சிரித்தேன் என்றான்  அரசரும் தன தவறை உணர்ந்தார்.
குமுதம் அரசு கூறுகிறார்.
அந்த நூலைப்பற்றி ரஜினி ஸ்டைலில் சொன்னால் அந்த ஒரு புத்தகத்தை படித்தாலே நூறு புத்தகங்கள் படித்த திருப்தி உங்களுக்கு கிட்டும் சரித்திர விழயங்கள் புராணக்கதைகள் சம கால அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகள் குட்டி கதைகள் வெளிநாட்டு விஷயங்கள் அறிவியல் போர்த்தந்திரங்கள் தன்னம்பிக்கை என்று உங்களுக்கு எந்த சப்ஜெகட் பிடிக்குமோ அதைப்பற்றி இந்த புத்தகத்தில் இருக்கிறது. ஆண்டு த்தேர்வுக்கு படக்கும் மாணவன் போல் மிக உன்னிப்பாக மூன்று மணி நேரத்துக்குள் படித்து முடித்தேன். அந்தப்புத்தகத்தின் பெயர் போர்த்தொழில் பழகு. எழுதியவர் வே. இறையன்பு ஐ ஏ எஸ் .

Monday, January 28, 2013

இது என்ன நியாயம்?   மனிதன் வேண்டாமென விட்டுவிட்ட வைக்கோலை தின்றும் அரிசியை நன்றாக கழுவி எடுத்துகூண்டு கீழே கொட்டும் கழுநீரை குடித்தும் எண்ணையை எதுத்து விட்டு சக்கை என வீசும் புண்ணாக்கை தின்றும் தன கன்று என்று தரும் சத்தான பாலை சுய நலம் மிக்க மனிதன் முக்கல் வாசி கறந்துகொண்டு கால்வாசி கன்ற்டுக்க்ர்நற்று விடுகிறானே இது என்ன கொடுமை. பசுவுக்கு கடவுள் தந்த சாபமா மனிதனுக்கு தந்த வரமா?


பந்திக்கு முந்திக்கொள் என ஓடிபந்தியில் உட்காருமுன் மனிதா சற்றே சிந்தி.
இந்த அடம்பர விருந்திற்கு விருந்தளிப்பவன் கொடுத்த விலை என்ன?
நிலம் நீச்சை விற்று பல வருட சேமிப்பை கரைத்து ஒரு பெண்ணுக்கோ அல்லது மகனுக்கோ திருமணம் செய்கிறான்.

நாமோ முதல் பந்தியில் உட்கார்ந்து கொண்டு இந்தச் பண்டம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கலாம் இது தேவலாம் என்று விமர்சித்து விட்டு பாதி பண்டத்தை பழாகிவிட்டு எழுகிறோம்.
ஒரு வேலை சோற்றுக்காக தன்மானத்துடன் பிச்சை எடுக்காமல் கீரை விற்கும் கிழவியும் வெயிலில் கை வண்டீழுக்கும் கிழவரும் நாற்று நாடும் நிறைமாத கர்ப்பிணியும் நினைவில் வந்தால் விருந்தில் வாழை இல்லை தவிர எதையும் விட்டுவைக்க மாட்டோம்.
உலகத்தையே மாற்ற முடியாது உன்னால் உன் வரை மாரிக்கொள்
என்னைபொருத்தவரை பந்தியில் முதலில் பரிமாறப்படும் எல்லாவற்றையும் சாபிடுவதர்க்காக அடுத்து வேறு எதையும் சா தம் கூட வாங்கி கொள்ள மாட்டேன். 95% இலையை  காலிசெய்து விட்டு தான் எழுவேன். வீனா குப்பைக்கு போவது சத்திரத்தில் வேலை ஒவ்வொருவரும் அப்படி செய்ததால் குப்பைக்கு போகும் பொருள் சத்திரத்தில் வேலை செயபவர்கலாவது பகிர்ந்து உன்னட்டுமே 

Friday, January 18, 2013

வெகு நாட்களுக்கு பிறகு நான் மறுபடி உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்கிறேன்.