Sunday, December 5, 2010

engeyo paditthavai

ஆரோக்யமான போட்டி வேண்டும்.வாலிக்கும் சுக்ரீவனுக்கும் கடும் போர் நடந்து கொண்டிருந்தது. இதை ராம லக்ஷ்மணர் பார்த்து கொண்டு இருந்தனர். லக்ஷ்மணன் ராமரிடம் "அண்ணா இவர்கள் சண்டைக்கு முடிவே இல்லையா என்று கேட்டான். உடனே ராமபிரான் "எல்லோரும் பரதனைபபோல் ஆகிவிட முடியுமா"என்றார். இதைக்கேட்டு லக்ஷ்மணன் கோபம் கொள்ளவில்லை. காட்டுக்கு உடன் வந்து கண்ணை இமை காப்பதுபோல் காக்கிறோம் நம்மைவிட்டு எங்கோ உள்ள பரதனை அண்ணன் புகழ்கிறாரே என்று எண்ணாமல் உடனே "அண்ணா நீங்கள் சொல்வது சர்டிதன். நீங்கள் இல்லாதபோது அயோத்தியை கட்டிக்காக்கும் பரதன் தான் உயர்ந்தவன் என்று சொன்னான். சகோதரர்கள், நண்பர்கள் அலுவலக பணியாளர்கள் தொழிலாளிகள் பொறாமை இன்றி இருந்துவிட்டால் சண்டை சச்ச்சரவுக்கே இதம் இல்லை. நம்மை சார்ந்தவர் யார் முன்னேறினாலும் அவரை பாராட்டுவதுடன் அவரை முன் மாதிரியாக கொண்டு முன்னேறவும் முயற்சிக்க வேண்டும்.

No comments:

Post a Comment