Sunday, May 9, 2010

எங்கேயோ படித்தவை

ஏழு நற்குணங்கள் 

1. ஏழ்மையிலும்   நேர்மை
2. கோபத்திலும் பொறுமை
3. தோல்வியிலும் விடாமுயற்சி 
4. வறுமையிலும் பரோபகாரம்
5. துன்பத்திலும் தைரியம் 
6. செல்வத்திலும் எளிமை
7 .பதவியிலும் பணிவு

வயதான மனிதனுக்கு உற்ற  துணை வயதான மனைவி, பழகிய நாய், கையிலுள்ள ரொக்கம்

இன்பமான வாழ்வுக்கு மூன்று விஷயங்கள்  தேவை 
1 .பழையவற்றை மறத்தல்
2 .நிகழ்வதை கவனமாக நடத்தல்
3 .வரப்போவதை நன்கு சிந்தித்தல்

இன்பங்கள் ஜோடியாக வருவதில்லை. துன்பமோ தனித்து  வருவதில்லை.

தேவை குறையும் அளவுக்கு தெய்வத்தன்மை கூடும்.

தொலைபேசி உயிர்களின் ஓசை உரசிக்கொள்ள உதவும் உயிரற்ற துணைவன்.

அதிர்ஷ்டமுள்ளவனுக்கு முதல் குழந்தை பெண்ணாயிருக்கும்.

இளமை ஒரு தவறு.

காளைப்பருவம் ஒரு போராட்டம்.

முதுமை ஒரு வருத்தம்.

மன அமைதியான மணவாழ்வு இவ்வுலகில் சொர்க்கம் . பூசல் நிறைந்த  மணவாழ்வு இவ்வுலகில் நரகம்.

1 comment:

  1. நிறைய எழதுங்கள் நன்றாக உள்ளது.
    சமீபத்தில் நான் விரும்பி படிக்கும் பக்கம்
    http://raviaditya.blogspot.com/
    லதா இளங்கோ

    ReplyDelete