Friday, January 28, 2011

from viveka chinthaamani

மாற்றானிடம்   உள்ள செல்வம்  பொருளாசை கொண்ட பெண்கள்,உடன் பிறவா சகோதரன்
ஆகியவை ஒருவனுக்கு கை கொடுப்பதில்லை.
ஆசிரியர் தந்த பாடம் செய்த தர்மம் குரு உபதேசித்த மந்த்ரம் மற்றவர்களின் கஷ்டம் இவைகளை வெளியில் சொல்ல கூடாது
பெற்றெடுத்தவள் மட்டும் தாயல்ல சகோதரனின் மனைவி குருபத்னி வேலைக்கு
ஊதியம் வழங்கும் முதலாளியின் மனைவி பெண் கொடுத்த மாமியார்
ஆகியோரும் தாய்க்கு சமமானவர்களே.
பணமில்லாத வாழ்க்கை குறிப்பறிதல் இல்லாத மனைவி விருந்தாளி வராத வீடு
வளர்ச்சி இல்லாத வாணிபம் இவற்றால் பயன் விளைவதில்லை
கற்றுக்கொடுத்த ஆசிரியரை மாணவன் கல்வி கற்றதும் மறந்து விடுகிறான்
நோய்க்கு மருந்து தந்து வைத்தியம் செய்த மருத்துவரை குணமடைந்த
நோயாளியும் மறந்து விடுகிறான்.
நல்லவர்களின் மனதை கெடுப்பது பெற்றவர்களின் மனதை வருத்துவது
ஒருவனின் கல்வி வளர்ச்சியை தடுப்பது போன்றவை பெரும் பாவசெயலாகும். 

No comments:

Post a Comment