Monday, August 9, 2010

சகோதரியாக

சகோதரியாக  பத்து வயதில் தாயை இழந்துவிட்டோம். பெரியப்பா வெளியூரில் வேலையில் இருந்தவர் தம்பி குழந்தைகள் வாழ்விற்காக தன குடும்பத்தை சொந்த ஊரான காஞ்சியிலே விட்டுவைத்தார்.ஒருவருடம் இரண்டு வருடங்கள் அல்ல.பதினய்ந்து வருடங்கள்.எங்கள் பெரியப்பா பெரியம்மா தியாகத்தால் தான் நாங்கள் நன்றாக வளர்ந்தோம் ஒன்றரை வயது தம்பிக்கு நான் சின்ன தாய்போல மாறிவிட்டேன். அவனுக்கும் அடுத்தவனுக்கும் சாப்பாடு ஊட்டுவது தாயை நினய்த்து அழும் பிள்ளைகளுக்கு விளையாட்டு காட்டுவது என எந்த நேரமும் தம்பிகளை சுய்ற்றிதான் வாழ்க்கை  எனக்கு அடுத்த aதங்கை பெரியதம்பிகள் சொன்ன பேச்சை கேட்பார்கள்  இரண்டுபேரையும் கவனிக்க வேண்டியது அவள் பொறுப்பு. அம்மா காலையில் இத்தனைபெருக்கும் காலை உணவு ஆபீஸ் செல்லும் appavukkusaappadu  அப்பாவுக்கு சாப்பாடு செய்யதநியாக பெரும்பாடு படுவார்கள்.  எங்கள் சின்ன அண்ணன் பெண் குழந்தைபோல அம்மாவுக்கு அடுப்படியில் சகல உ த தவிகளையும் செய்வார். பள்ளியில் என்னையும் என தங்கையையும் வீட்டுப்பாடம் செய்யவில்லை என கேட்க மாட்டார்கள்.நாங்கள் இருவரும் அவரவர் வகுப்பில் முதல் மானவியராயிற்றே ஆசிரியைகளுக்கு செல்ல பிள்ளைகள் 
மாலை அயிந்து மணிக்கு அலுவலகம் விட்டால் அயிந்து நாற்பத்தய்ந்துக்கு அப்பாவை வீடுவசலில் பார்க்கலாம். அவரை பார்த்து கடிகார முள்ளை  திருத்தி வைத்துக்கொள்ளலாம் வந்ததும் குட்டிதம்பிகள் இருவரும் கைகால் முகம் அலம்பகூட விடாமல் அழுவார்கள். அதனால் தினமும் நான் மாலை நாலரை மணிக்கு பள்ளியிலிருந்து வரும் தம்பிகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று விடுவேன். அங்கும் நானும் தங்கையும் நான்கு தம்பிகளையும் கண்ணும் கருத்துமாக விளையாட வைத்து பார்த்து கொள்வோம் அங்கு உள்ள பெரிய கடிகாரத்தில் ஆறு அடித்ததும் பத்திரமாக தம்பிகளை வீட்டுக்கு அழய்த்துவருவோம். பஸ்சும் காரும் போகின்ற வீதியிலும் வாத்து மேய்ப்பவன் போல நாங்கள் ரெண்டுபேரும் தம்பிகளை அழய்த்துவருவதை எல்லோரும் வியப்பாக  பார்ப்பார்கள்.\\சோறு ஓடுவது துநிமாற்றுவது எல்லாம் நாங்கள் இருவருமே ச்தினமும் செய்வதால் லீவு நாட்களில் அப்பா எண்ணெய் தேய்த்துவிட கூப்பிட்டால் பெரியதம்பிகள் இருவரும் சின்னக்க தான் தேய்க்கவேண்டும் என்றும் சின்னதம்பிகள் இரண்டும் பெரியக்காதான் தேய்க்க செண்டும் என்றும் அடம் பிடிப்பார்கள். அப்பவோ என்னடா இது அவர்களே குழந்தைகள் அவர்களுக்கு ஒருத்தர் தலைக்கு தேய்த்துவிடுகிறோம் அவர்களை தொல்லை கொடுக்கிறீர்களே என வருந்துவார். கடைக்கு போகும்தோறும் சின்னவன் என இடுப்பில் ஏறிக்கொண்டு வந்துவிடுவான், அங்கு வந்துவிட்டு திடீரென்று புது பென்சில் வேண்டும் பலப்பம்வேண்டும் சிலேட்டு வேண்டும் என்று அடம்பிடிப்பான் நான் செய்வதறியாது நிற்ப்பேன்.  கடைக்கரரோ அவன் பிடிவாதம்தான் உலகப்ரசிதியாயிற்றே எப்பெடியும் அதை வாங்காமல் விடமாட்டன் ஆகையால் நீ எடுத்துகொண்டு போம்மா நான் அப்பாவிடம் பணம் வாங்கி கொள்கிறேன் என்று கொடுத்தனுப்புவார்கள். அடுத்தநாள் நான் ஒன்றும் கேவ்ட்கமட்டேன் கேட்டா ல் பக்கத்தில் உள்ள சாக்கடையல் என்னைபோட்டுவிட்டு வந்துவிடு என்று வக்கனைய்க பேசி கெஞ்சுவான், நானும் பழயபடி பரிதாபப்பட்டு கூடிபோவேன்.
இவ்வளவு தொல்லைகளுக்கும் இடையில் நாங்கள் எல்லோருமே நன்றாக படித்தோம் 
அண்ணன்கள் இருவருக்கும் திருமணம் ஆயிற்று அண்ணிகள் இருவருக்கும் நாங்கள் இருவரும் சகோதரிகள் போலவும் தோழிகள் போலவும் ஆகிவிட்டோம்.  அவர்கள் இருவரும் தாயில்லாத எங்கலுக்கு தாய் போல் அமைந்து விட்டார்கள். 
எனாகு திருமணமாகி தாய்வீடு வந்தால் அண்ணிகள் பக்கதில்  படுத்துக்கொண்டு ஆறுமாத நடப்புகளையும் ஒரு ராத்திரியில் பேசி தீர்ப்போம் என்னுடைய பிரசவ நேரங்களில் தாய்க்கும் மேலாக எண்ணெய் பார்த்துகொண்ட என அன்னிகளுக்கு  இன்றும் தலை வணங்குகிறேன்.தம்பிகளுக்கு திருமணம் ஆயிற்று. வீட்டுக்கு மூத்த பெண் என்று எனனை முன்னிருத்திதான்  எதையும் தொடங்குவார்கள். எல்லாருக்கும் ஆசை நாத்தனார் எல்லா குழைந்தைகளுக்கும் ஆசை அத்தை. நான் போய் வீட்டினுள் நுழையும்போதே அதை வந்துவிட்டார்கள் என்று குழந்தைகள் சூழ்ந்து கொண்டு செய்த ஆரவாரம் இன்னும் என காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் எல்லோரும் குறை நிறை இல்லாதவர்கள்  கிடையாது. அவர்களிடத்திலும் குறைகள் இருக்கலாம் என்னிடமும் குறைகள் இருக்கலாம் ஆனாலும் குற்றம்பார்கின் சுற்றம் இல்லை என்பதற்கிணங்க நானும் அன்னிகளுக்கு மகள்போலவும் தம்பி களுக்கு தாய்போலவும் உறவுகொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறோம் மீதிவழ்நாளிலும் நான் ஒரு நல்ல சகோதரியாக வாழ கடவுள் அருள்புரியட்டும். என அப்பா இருந்த காலத்தில் யாரைப்பற்றி குறை சொன்னாலும் அப்பா நீங்கள் மறுமணம் செய்யாமல் எங்களை வளர்க்க எப்படி தியாகம் செய்தீர்கள் அதைவிட இப்போது பொருத்து போவது பெரிது, சிறியோர் செய்யும் சிறுபிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே.என்று நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறுவீர்களே  பிள்ளை காலால் உதைத்தாலும் பிள்ளைக்கு கால் வலிக்குமே என்று நினய்ப்பதுதன் பெற்றோர் மனம். பொருத்துகொள்ளுங்கள் அப்பா என்பேன், நீயும் ம\நாலு பிள்ளைகளை வைத்திருக்கிறாய் உனக்கும் இந்த நிலைமை வரும் அப்போது நான் இருக்க மாட்டேன் எனக்கு கூறும் இந்த உபதேசங்களை அப்போது நினைவுபடுத்திக்கொள் என்றார், அவருடைய வார்த்தைகள் மேய்யா கின்ற்றன், நானும் அவருக்கு சொன்ன உபதேசத்தை நினவுபடுதிக்கொண்டு வாழ்கிறேன். 

Monday, August 2, 2010

எங்கேயோ படித்தவை

நண்பர்கள் இருப்பது நல்லது. ஆனால் அவர்கள் உதவியை நாடுவது நல்லதல்ல
ஒருவன் மற்றவர்களைவிட உயர்ந்தவனாக இருப்பதற்கு மற்றவர்கள் நலனுக்காக அவன் செய்யும் தியாகமே காரணம்
வேறு எதிரிகள் தேவையில்லை.உன் சுயநலமே உன் எதிரி.
வேறு நண்பர்கள் தேவையில்லை உன் மனசாட்சியே உனது நண்பன்.
வாழ்க்கை ஒரு சீட்டாட்டம்
௧. நாம் விருபுகிறபடி சீட்டுகள் விழுவதில்லை. எந்த சீட்டு விழவேண்டும் என்று நாம் தீர்மானிக்க முடியாது. அதே போல நாம் எப்படி இருக்கவேண்டும் எந்த குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று தீர்மானிக்க முடியாது.
௨. கிடைக்கிற சீட்டுகளை வைத்துதான் ஆட வேண்டும்.அதேபோல நாம் பிறந்த சூழ்நிலை  எப்படி இருந்தாலும் அதைவைத்து வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும்.
3 சீட்டு விளையாட்டை அதற்குரிய சில நியதிகளுடன் தான் விளையாட வேண்டும்.அதைப்போல் வாழ்க்கையிலும் சிலக நியதிகளை கடைப்பிடித்துதன் வாழவேண்டும்.
சீட்டில் அமைகிற ஜோடிகளை வைத்து வெற்றியடைய முயல்வது போல் நமக்கு அமைகிற துணையையும் நண்பர்களையும் வைத்தே நாம் வாழ்க்கையை வெற்றிகர மாக்க வேண்டும்.
௪கிடைத்த சீட்டு எதுவானாலும் வென்றாலும் தோற்றாலும் நாம் உற்சாகமாக வாழ கற்று கொள்ள வேண்டும்.
                                                                           டாக்டர் ராதாக்ருஷ்ணன்.
நம்மை ஒருவர் முந்தும்போதுதான் நாம் மெதுவாக செல்கிறோம் என்பதே நமக்கு புரிகிறது.
வெற்றியில் கர்வம் மீண்டும் தோல்வியின் ஆரம்பம்.
செல்வம் பெற்றதில் கர்வம் வளமை வற்றுதலின் ஆரம்பம்.
சமயம் வரட்டும் பல நற்செயல்களை ஒன்றாக செய்துவிடலாம் என்று காத்திருப்பவன் என்றுமே எச்சமயத்திலும் எதுவும் செய்யமாட்டான்.
மழை அழகுதான் வீடு ஒழுகாதவரை.
தென்றல் அழகுதான் புயலாக மாறாதவரை
மின்னல் அழகுதான் கண்ணை பறிக்காதவரை
மலர் அழகுதான் முள் குத்தாதவரை
மழலை அழகுதான் அதிகம் பெறாதவரை
எதுவுமே அழகுதான் எல்லை தாண்டாதவரை.
                                                                             சண்டீப்ராஜ் ஆலர்த்தம்பாடி.

Wednesday, June 30, 2010

எங்கேயோ படித்தவை

நான் எங்கு அழகிய வரிகளை படித்தாலும் குறித்து வைதுகொல்வேன். சமயம் வரும்போது உப யோகிப்பேன் இருபதுவருடங்களுக்குமுன் ஒரு மணிவிழா அழைப்பிதழில்  வேருக்கு விருதுகள் காணும் விழா என்று இருந்தது. அதை குறித்து வைத்துகொண்டு எங்கள் மணிவிழா அழைப்பிதழில் அச்சிட்டோம். எல்லோரும் அந்த உவமை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது என பாராட்டினார்கள்.

Saturday, June 26, 2010

எங்கேயோ படித்தவை

ஏற்கனவே  பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும் மனிதன் தரும் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்காதீர்
எங்குமே தேங்கி நிற்காதீர் இலக்கு எதுவும் தெரியாவிட்டாலும் எந்தவிதமான சோதனைகள் வந்திருக்கிறது என்று புரியாவிட்டாலும் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருங்கள் இலக்கு புரிபடும்.சாதனை உருவாகும்
ஒவ்வொரு மனிதனும் அறியமைகொண்டவந்தான். எந்த விஷயத்தில் என்பது மட்டும் தான் ஆளுக்குஆள் மாறுகிறது
பழகபழக பால் புளிக்கலாம். பண்புள்ள மனைவி புளிப்பதில்லை.
வறுமை என்பது தற்காலிக கோளாறு. செல்வம் என்பது நிரந்தர நோய்
நல்ல மருமகன் கிடைத்தவன் ஒரு மகனை அடைகிறான்.
ketta   மருமகள் கிடைத்தவன் ஒரு மகனை இழக்கிறான்.
படுக்கப் போகும்போது செருப்போடு கவலைகளை கழற்றி வைக்கவேண்டும்.
தந்தை மகற்காற்றும் உதவி நிறைய சேர்த்து வைத்துப் போவதன்று
குறைவனதைக்கொண்டு சரியாக வாழ கற்பிப்பதே

Tuesday, June 8, 2010

மகளாக

இந்ததொடரில் இருவரை பற்றி நான் குறிப்பிட்டு ஆகவேண்டும். ஒருவர் ஏன் கணவர். என மாமி யார் தொண்ணூற்று மூன்று வயது வாழ்ந்தார். அவ ர சாகும்வரை என கணவர் அம்மா பக்கத்தல் உட்கார்ந்து நாடு நடப்புகள் அரசியல் கிரிக்கட்டு   குடும்ப கதைகள் என்று பெச்க்கொண்டு இருப்பார்.  அவர் நண்பர்கள் கூட கேட்பார்கள். என்னப்பா விஷயம் ரெண்டுவேளையும் அம்மாவிடம் பேசுவே என்று . சிரித்து மழுப்பி விடுவார். வயதான தாய் காகவே எட்டு வருடங்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளின் அழைப்பை ஏற்று போகாமல் இருந்தார். மற்ற்ரோருவன் என அண்ணன் மகன். என அண்ணி சக்கரை நோயாளி. இரவெல்லாம் கால் வலி என்று தூக்கம் இன்றி தவிபபார். மனைவியை அம்மாவை எழுப்ப கூடாது என்று சொல்லிவிடுவான். ஏழு மணிக்கு வேலைக்கு கிளம்பு முன் அம்மாவை எழுப்பி உடல் நலம் விசாரித்துவிட்டு சில நமிடங்கள் கால் பிடித்து விடுவான். அப்போது அந்த தாய் முகத்தில் காணும் சந்தோஷத்தை பார்த்து உண்மையிலேயே நான் பொறாமை பட்டதுண்டு. என்ன தவம் செய்தார்கள் இதுபோல் ஒரு பிள்ளை பெற என்று.

மகளாக

நான் மகளாக செய்ய தவறிவிட்ட ஒன்றையும் இங்கு கூற வ்ரும்புகிறேன் . என் அம்மா இறக்கும்போது என் அப்பாவுக்கு 34 வயதுதான    இருபது வருடகாலம் எங்களை தாயுமாகி நின்று வளர்ப்பதிலேயே வாழ்நாளை க  ழித்துவிட்டார்.  தன்னுடைய பத்து வருடகால மணவாழ்க்கை பற்றி ஒருவரிடமும் ஒரு வார்த்தை பேசியதல்லை, நான் தாய்வீடு செல்லும்போதெல்லாம் அப்பாவிடம் அம்மா பற்றி அவருடன் அபபா கழத்த நாட்கள் பற்றி பேச எண்ணுவேன். நான் அடிப்படையில் ஒரு கோழை. அதுபற்றி கேட்டால் அப்பா மனம் வருந்துமோ என்று தயங்கி கேட்கமாட்டேன். அதோடு அங்கு இருக்கும் சில நாட்களும் அப்பா மற்றவர்களைப்பற்றி குறைசொன்னால் சமாதானம் சொல்வதிலும் மற்றவர்கள் அப்பாவைப்பற்றி சொன்னால் அவர்களை சமாதப்படுதுவதிலும் என் வாழ்க்கையின் குறைநிரைகலய்ப்பற்றி பே சி யும் கால ம்கடதிவிட்டு       வந்துவிடுவேன். இப்போது நினைக்கிறேன் நம்மக்கு வயதக்விட்டது . நம் வாழ்க்கையில் அனுபவித்த சுக துக்கங்களை சொன்னால் காது கொடுத்து கேட்க யாருக்கும் நேரமி லையே. அப்பாவும்தனிமய்ல் அமர்ந்துதெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டுகாலத்தைஒட்டிய  பொது ஒரூ நாளாவது  தன பத்துவருடஇல்ல்வாழ்க்கைபற்றி தன துணைவி பற்றி பேச நிநை த்து  இருக்கலாம். காலம் கடந்து இப்போது வருந்துகிறேன்  இதை படிக்கும் நீங்கள் எல்லோரும் உங்கள் பெற்றோரின் கடந்தகாலம் பற்றி பே சி னால் பிடிக்காவிட்டாலும் சிறிதுநேரம் காது கொடுத்து என்றாவது ஒருநாள் மடாத்ல் ஒரு நாள் கேளுங்கள் போதும். சம்பளம் வாங்கிவந்தாதும் பெற்றோருக்கு பிடித்த பொருள் ஒன்றை வாங்கி அவர்கள் கையை பிடித்துகொண்டு அன்புடன் கொடுங்கள். குழந்தைகளுக்குமட்டும டச் தெரபி பலன் கொடுக்கிறது என்று பிரபல சோப்பு பவுடர் கம்பனிகள் வியாம்பரம் செய்கின்றன. அதெல்லாம் தெரியாத நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே தனிக்குடித்தனத்தில் ஆறு பிள்ளைகை வளர்க்கும்போது வீடு பூராவும் சின்ன குழந்தைகல் இருக்கும் வீட்டை படு ஜாக்கிரதையஆகா வைக்க முடியாது. அதனால் ஒவ்வொரு குழந்தையும் இரண்டு வயதுவரை இடுப்பில் சுமந்தே திரிவேன். குறத்தி போல் பிள்ளையை சுமந்து திரிக்றலே என்று உற்றமும் சுற்றமும் பேசினாலு ம காதில் வாங்கிகொள்ள  மாட்டேன். இன்று என் பிள்ளய்கள் அனையவரும் புத்தி சாலிகலாகவும் ஆ ரோகியதுடன் வாழ்வதன் ரகசியம் டச் தெரபி தானோ . அதேபோலே பெற்றோரின் கைகளை பிடித்து கொண்டு பேசுங்கள். என்றாவது ஒருநாள் கா பிடித்துவிடுங்கள். அப்போது அந்த வயதான தாய் தகப்பன் முகத்தி ல் காணக்கூடிய மகிழ்கசிய  அனுபவித்தால் தான் தெரியும்.

Tuesday, June 1, 2010

எங்கேயோ படித்தவை

முட்டாள் மன்னிக்கவும் மாட்டான் மறக்கவும் மாட்டான்

சராசரி புத்தி கொண்டவன் மறப்பான் மன்னிப்பான்

அதிபுத்திசாலி மன்னிப்பான் மறக்கமாட்டான்

ஒவ்வொரு மனிதனும் எதாவது  மிருகத்தனமான காரியத்தை செய்வதற்குமுன் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிற சாமாதானம் --நானும் ஒரு மனிதன்தானே

குரலை உயர்த்தி பேசுவது மட்டுமே நல்ல விவாதம் ஆகிவிடாது கூச்சலிட்டு எதிராளியை அமைதியாக்கி விட்டதன் மூலம் அவனை ஜெயித்துவிட்டதாக நினைப்பது முட்டாள் தனம்.
தாமாக ஒன்றை உருவாக்கிவிட்டு பிறகு அதை சகிக்காமல் ஆறுமாதத்துக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருப்பதுதான் fashion