Monday, August 9, 2010

சகோதரியாக

சகோதரியாக  பத்து வயதில் தாயை இழந்துவிட்டோம். பெரியப்பா வெளியூரில் வேலையில் இருந்தவர் தம்பி குழந்தைகள் வாழ்விற்காக தன குடும்பத்தை சொந்த ஊரான காஞ்சியிலே விட்டுவைத்தார்.ஒருவருடம் இரண்டு வருடங்கள் அல்ல.பதினய்ந்து வருடங்கள்.எங்கள் பெரியப்பா பெரியம்மா தியாகத்தால் தான் நாங்கள் நன்றாக வளர்ந்தோம் ஒன்றரை வயது தம்பிக்கு நான் சின்ன தாய்போல மாறிவிட்டேன். அவனுக்கும் அடுத்தவனுக்கும் சாப்பாடு ஊட்டுவது தாயை நினய்த்து அழும் பிள்ளைகளுக்கு விளையாட்டு காட்டுவது என எந்த நேரமும் தம்பிகளை சுய்ற்றிதான் வாழ்க்கை  எனக்கு அடுத்த aதங்கை பெரியதம்பிகள் சொன்ன பேச்சை கேட்பார்கள்  இரண்டுபேரையும் கவனிக்க வேண்டியது அவள் பொறுப்பு. அம்மா காலையில் இத்தனைபெருக்கும் காலை உணவு ஆபீஸ் செல்லும் appavukkusaappadu  அப்பாவுக்கு சாப்பாடு செய்யதநியாக பெரும்பாடு படுவார்கள்.  எங்கள் சின்ன அண்ணன் பெண் குழந்தைபோல அம்மாவுக்கு அடுப்படியில் சகல உ த தவிகளையும் செய்வார். பள்ளியில் என்னையும் என தங்கையையும் வீட்டுப்பாடம் செய்யவில்லை என கேட்க மாட்டார்கள்.நாங்கள் இருவரும் அவரவர் வகுப்பில் முதல் மானவியராயிற்றே ஆசிரியைகளுக்கு செல்ல பிள்ளைகள் 
மாலை அயிந்து மணிக்கு அலுவலகம் விட்டால் அயிந்து நாற்பத்தய்ந்துக்கு அப்பாவை வீடுவசலில் பார்க்கலாம். அவரை பார்த்து கடிகார முள்ளை  திருத்தி வைத்துக்கொள்ளலாம் வந்ததும் குட்டிதம்பிகள் இருவரும் கைகால் முகம் அலம்பகூட விடாமல் அழுவார்கள். அதனால் தினமும் நான் மாலை நாலரை மணிக்கு பள்ளியிலிருந்து வரும் தம்பிகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று விடுவேன். அங்கும் நானும் தங்கையும் நான்கு தம்பிகளையும் கண்ணும் கருத்துமாக விளையாட வைத்து பார்த்து கொள்வோம் அங்கு உள்ள பெரிய கடிகாரத்தில் ஆறு அடித்ததும் பத்திரமாக தம்பிகளை வீட்டுக்கு அழய்த்துவருவோம். பஸ்சும் காரும் போகின்ற வீதியிலும் வாத்து மேய்ப்பவன் போல நாங்கள் ரெண்டுபேரும் தம்பிகளை அழய்த்துவருவதை எல்லோரும் வியப்பாக  பார்ப்பார்கள்.\\சோறு ஓடுவது துநிமாற்றுவது எல்லாம் நாங்கள் இருவருமே ச்தினமும் செய்வதால் லீவு நாட்களில் அப்பா எண்ணெய் தேய்த்துவிட கூப்பிட்டால் பெரியதம்பிகள் இருவரும் சின்னக்க தான் தேய்க்கவேண்டும் என்றும் சின்னதம்பிகள் இரண்டும் பெரியக்காதான் தேய்க்க செண்டும் என்றும் அடம் பிடிப்பார்கள். அப்பவோ என்னடா இது அவர்களே குழந்தைகள் அவர்களுக்கு ஒருத்தர் தலைக்கு தேய்த்துவிடுகிறோம் அவர்களை தொல்லை கொடுக்கிறீர்களே என வருந்துவார். கடைக்கு போகும்தோறும் சின்னவன் என இடுப்பில் ஏறிக்கொண்டு வந்துவிடுவான், அங்கு வந்துவிட்டு திடீரென்று புது பென்சில் வேண்டும் பலப்பம்வேண்டும் சிலேட்டு வேண்டும் என்று அடம்பிடிப்பான் நான் செய்வதறியாது நிற்ப்பேன்.  கடைக்கரரோ அவன் பிடிவாதம்தான் உலகப்ரசிதியாயிற்றே எப்பெடியும் அதை வாங்காமல் விடமாட்டன் ஆகையால் நீ எடுத்துகொண்டு போம்மா நான் அப்பாவிடம் பணம் வாங்கி கொள்கிறேன் என்று கொடுத்தனுப்புவார்கள். அடுத்தநாள் நான் ஒன்றும் கேவ்ட்கமட்டேன் கேட்டா ல் பக்கத்தில் உள்ள சாக்கடையல் என்னைபோட்டுவிட்டு வந்துவிடு என்று வக்கனைய்க பேசி கெஞ்சுவான், நானும் பழயபடி பரிதாபப்பட்டு கூடிபோவேன்.
இவ்வளவு தொல்லைகளுக்கும் இடையில் நாங்கள் எல்லோருமே நன்றாக படித்தோம் 
அண்ணன்கள் இருவருக்கும் திருமணம் ஆயிற்று அண்ணிகள் இருவருக்கும் நாங்கள் இருவரும் சகோதரிகள் போலவும் தோழிகள் போலவும் ஆகிவிட்டோம்.  அவர்கள் இருவரும் தாயில்லாத எங்கலுக்கு தாய் போல் அமைந்து விட்டார்கள். 
எனாகு திருமணமாகி தாய்வீடு வந்தால் அண்ணிகள் பக்கதில்  படுத்துக்கொண்டு ஆறுமாத நடப்புகளையும் ஒரு ராத்திரியில் பேசி தீர்ப்போம் என்னுடைய பிரசவ நேரங்களில் தாய்க்கும் மேலாக எண்ணெய் பார்த்துகொண்ட என அன்னிகளுக்கு  இன்றும் தலை வணங்குகிறேன்.தம்பிகளுக்கு திருமணம் ஆயிற்று. வீட்டுக்கு மூத்த பெண் என்று எனனை முன்னிருத்திதான்  எதையும் தொடங்குவார்கள். எல்லாருக்கும் ஆசை நாத்தனார் எல்லா குழைந்தைகளுக்கும் ஆசை அத்தை. நான் போய் வீட்டினுள் நுழையும்போதே அதை வந்துவிட்டார்கள் என்று குழந்தைகள் சூழ்ந்து கொண்டு செய்த ஆரவாரம் இன்னும் என காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் எல்லோரும் குறை நிறை இல்லாதவர்கள்  கிடையாது. அவர்களிடத்திலும் குறைகள் இருக்கலாம் என்னிடமும் குறைகள் இருக்கலாம் ஆனாலும் குற்றம்பார்கின் சுற்றம் இல்லை என்பதற்கிணங்க நானும் அன்னிகளுக்கு மகள்போலவும் தம்பி களுக்கு தாய்போலவும் உறவுகொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறோம் மீதிவழ்நாளிலும் நான் ஒரு நல்ல சகோதரியாக வாழ கடவுள் அருள்புரியட்டும். என அப்பா இருந்த காலத்தில் யாரைப்பற்றி குறை சொன்னாலும் அப்பா நீங்கள் மறுமணம் செய்யாமல் எங்களை வளர்க்க எப்படி தியாகம் செய்தீர்கள் அதைவிட இப்போது பொருத்து போவது பெரிது, சிறியோர் செய்யும் சிறுபிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே.என்று நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறுவீர்களே  பிள்ளை காலால் உதைத்தாலும் பிள்ளைக்கு கால் வலிக்குமே என்று நினய்ப்பதுதன் பெற்றோர் மனம். பொருத்துகொள்ளுங்கள் அப்பா என்பேன், நீயும் ம\நாலு பிள்ளைகளை வைத்திருக்கிறாய் உனக்கும் இந்த நிலைமை வரும் அப்போது நான் இருக்க மாட்டேன் எனக்கு கூறும் இந்த உபதேசங்களை அப்போது நினைவுபடுத்திக்கொள் என்றார், அவருடைய வார்த்தைகள் மேய்யா கின்ற்றன், நானும் அவருக்கு சொன்ன உபதேசத்தை நினவுபடுதிக்கொண்டு வாழ்கிறேன். 

No comments:

Post a Comment