Wednesday, June 30, 2010

எங்கேயோ படித்தவை

நான் எங்கு அழகிய வரிகளை படித்தாலும் குறித்து வைதுகொல்வேன். சமயம் வரும்போது உப யோகிப்பேன் இருபதுவருடங்களுக்குமுன் ஒரு மணிவிழா அழைப்பிதழில்  வேருக்கு விருதுகள் காணும் விழா என்று இருந்தது. அதை குறித்து வைத்துகொண்டு எங்கள் மணிவிழா அழைப்பிதழில் அச்சிட்டோம். எல்லோரும் அந்த உவமை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது என பாராட்டினார்கள்.

Saturday, June 26, 2010

எங்கேயோ படித்தவை

ஏற்கனவே  பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும் மனிதன் தரும் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்காதீர்
எங்குமே தேங்கி நிற்காதீர் இலக்கு எதுவும் தெரியாவிட்டாலும் எந்தவிதமான சோதனைகள் வந்திருக்கிறது என்று புரியாவிட்டாலும் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருங்கள் இலக்கு புரிபடும்.சாதனை உருவாகும்
ஒவ்வொரு மனிதனும் அறியமைகொண்டவந்தான். எந்த விஷயத்தில் என்பது மட்டும் தான் ஆளுக்குஆள் மாறுகிறது
பழகபழக பால் புளிக்கலாம். பண்புள்ள மனைவி புளிப்பதில்லை.
வறுமை என்பது தற்காலிக கோளாறு. செல்வம் என்பது நிரந்தர நோய்
நல்ல மருமகன் கிடைத்தவன் ஒரு மகனை அடைகிறான்.
ketta   மருமகள் கிடைத்தவன் ஒரு மகனை இழக்கிறான்.
படுக்கப் போகும்போது செருப்போடு கவலைகளை கழற்றி வைக்கவேண்டும்.
தந்தை மகற்காற்றும் உதவி நிறைய சேர்த்து வைத்துப் போவதன்று
குறைவனதைக்கொண்டு சரியாக வாழ கற்பிப்பதே

Tuesday, June 8, 2010

மகளாக

இந்ததொடரில் இருவரை பற்றி நான் குறிப்பிட்டு ஆகவேண்டும். ஒருவர் ஏன் கணவர். என மாமி யார் தொண்ணூற்று மூன்று வயது வாழ்ந்தார். அவ ர சாகும்வரை என கணவர் அம்மா பக்கத்தல் உட்கார்ந்து நாடு நடப்புகள் அரசியல் கிரிக்கட்டு   குடும்ப கதைகள் என்று பெச்க்கொண்டு இருப்பார்.  அவர் நண்பர்கள் கூட கேட்பார்கள். என்னப்பா விஷயம் ரெண்டுவேளையும் அம்மாவிடம் பேசுவே என்று . சிரித்து மழுப்பி விடுவார். வயதான தாய் காகவே எட்டு வருடங்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளின் அழைப்பை ஏற்று போகாமல் இருந்தார். மற்ற்ரோருவன் என அண்ணன் மகன். என அண்ணி சக்கரை நோயாளி. இரவெல்லாம் கால் வலி என்று தூக்கம் இன்றி தவிபபார். மனைவியை அம்மாவை எழுப்ப கூடாது என்று சொல்லிவிடுவான். ஏழு மணிக்கு வேலைக்கு கிளம்பு முன் அம்மாவை எழுப்பி உடல் நலம் விசாரித்துவிட்டு சில நமிடங்கள் கால் பிடித்து விடுவான். அப்போது அந்த தாய் முகத்தில் காணும் சந்தோஷத்தை பார்த்து உண்மையிலேயே நான் பொறாமை பட்டதுண்டு. என்ன தவம் செய்தார்கள் இதுபோல் ஒரு பிள்ளை பெற என்று.

மகளாக

நான் மகளாக செய்ய தவறிவிட்ட ஒன்றையும் இங்கு கூற வ்ரும்புகிறேன் . என் அம்மா இறக்கும்போது என் அப்பாவுக்கு 34 வயதுதான    இருபது வருடகாலம் எங்களை தாயுமாகி நின்று வளர்ப்பதிலேயே வாழ்நாளை க  ழித்துவிட்டார்.  தன்னுடைய பத்து வருடகால மணவாழ்க்கை பற்றி ஒருவரிடமும் ஒரு வார்த்தை பேசியதல்லை, நான் தாய்வீடு செல்லும்போதெல்லாம் அப்பாவிடம் அம்மா பற்றி அவருடன் அபபா கழத்த நாட்கள் பற்றி பேச எண்ணுவேன். நான் அடிப்படையில் ஒரு கோழை. அதுபற்றி கேட்டால் அப்பா மனம் வருந்துமோ என்று தயங்கி கேட்கமாட்டேன். அதோடு அங்கு இருக்கும் சில நாட்களும் அப்பா மற்றவர்களைப்பற்றி குறைசொன்னால் சமாதானம் சொல்வதிலும் மற்றவர்கள் அப்பாவைப்பற்றி சொன்னால் அவர்களை சமாதப்படுதுவதிலும் என் வாழ்க்கையின் குறைநிரைகலய்ப்பற்றி பே சி யும் கால ம்கடதிவிட்டு       வந்துவிடுவேன். இப்போது நினைக்கிறேன் நம்மக்கு வயதக்விட்டது . நம் வாழ்க்கையில் அனுபவித்த சுக துக்கங்களை சொன்னால் காது கொடுத்து கேட்க யாருக்கும் நேரமி லையே. அப்பாவும்தனிமய்ல் அமர்ந்துதெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டுகாலத்தைஒட்டிய  பொது ஒரூ நாளாவது  தன பத்துவருடஇல்ல்வாழ்க்கைபற்றி தன துணைவி பற்றி பேச நிநை த்து  இருக்கலாம். காலம் கடந்து இப்போது வருந்துகிறேன்  இதை படிக்கும் நீங்கள் எல்லோரும் உங்கள் பெற்றோரின் கடந்தகாலம் பற்றி பே சி னால் பிடிக்காவிட்டாலும் சிறிதுநேரம் காது கொடுத்து என்றாவது ஒருநாள் மடாத்ல் ஒரு நாள் கேளுங்கள் போதும். சம்பளம் வாங்கிவந்தாதும் பெற்றோருக்கு பிடித்த பொருள் ஒன்றை வாங்கி அவர்கள் கையை பிடித்துகொண்டு அன்புடன் கொடுங்கள். குழந்தைகளுக்குமட்டும டச் தெரபி பலன் கொடுக்கிறது என்று பிரபல சோப்பு பவுடர் கம்பனிகள் வியாம்பரம் செய்கின்றன. அதெல்லாம் தெரியாத நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே தனிக்குடித்தனத்தில் ஆறு பிள்ளைகை வளர்க்கும்போது வீடு பூராவும் சின்ன குழந்தைகல் இருக்கும் வீட்டை படு ஜாக்கிரதையஆகா வைக்க முடியாது. அதனால் ஒவ்வொரு குழந்தையும் இரண்டு வயதுவரை இடுப்பில் சுமந்தே திரிவேன். குறத்தி போல் பிள்ளையை சுமந்து திரிக்றலே என்று உற்றமும் சுற்றமும் பேசினாலு ம காதில் வாங்கிகொள்ள  மாட்டேன். இன்று என் பிள்ளய்கள் அனையவரும் புத்தி சாலிகலாகவும் ஆ ரோகியதுடன் வாழ்வதன் ரகசியம் டச் தெரபி தானோ . அதேபோலே பெற்றோரின் கைகளை பிடித்து கொண்டு பேசுங்கள். என்றாவது ஒருநாள் கா பிடித்துவிடுங்கள். அப்போது அந்த வயதான தாய் தகப்பன் முகத்தி ல் காணக்கூடிய மகிழ்கசிய  அனுபவித்தால் தான் தெரியும்.

Tuesday, June 1, 2010

எங்கேயோ படித்தவை

முட்டாள் மன்னிக்கவும் மாட்டான் மறக்கவும் மாட்டான்

சராசரி புத்தி கொண்டவன் மறப்பான் மன்னிப்பான்

அதிபுத்திசாலி மன்னிப்பான் மறக்கமாட்டான்

ஒவ்வொரு மனிதனும் எதாவது  மிருகத்தனமான காரியத்தை செய்வதற்குமுன் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிற சாமாதானம் --நானும் ஒரு மனிதன்தானே

குரலை உயர்த்தி பேசுவது மட்டுமே நல்ல விவாதம் ஆகிவிடாது கூச்சலிட்டு எதிராளியை அமைதியாக்கி விட்டதன் மூலம் அவனை ஜெயித்துவிட்டதாக நினைப்பது முட்டாள் தனம்.
தாமாக ஒன்றை உருவாக்கிவிட்டு பிறகு அதை சகிக்காமல் ஆறுமாதத்துக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருப்பதுதான் fashion

Tuesday, May 25, 2010

எங்கேயோ படித்தவை

மதவெறி இல்லாமல் சிறந்த கல்வியை அளிப்பவனே நல்ல குரு.இல்லைஎன்றால் புத்திசாலியான சாத்தானை உருவாக்கும் பாவம் அவனைசாரும்.
எதை எந்த அளவுக்கு விமர்சிப்பது என்பது ஒரு கலை உங்கள் நண்பர்கள் தோள்மேல்  அமர்ந்திருக்கும் ஈயை விரட்ட கோடலியை வீசி விடாதீர்கள்.
ஒருவர் செய்து காட்டியதற்கு எதிராக செய்வதற்கு பெயர் சாமர்த்தியம் அல்ல .
அதன் பெயரும் காபியடிப்பதுதன்.உல்டாவாக காப்பியடிப்பது.
எதிர்த்து பேசாதவரை எந்த மனிதனும் உங்களுக்கு புதியதொரு கருத்தை சொல்வதில்லை.
ஒவ்வொரு புடுக்கருத்தும் உங்களிடம் சேருகிற சொத்து. அதனால் எந்த விஷயத்தையும் ஒப்புக்கொள்வதற்கு முன் நிறைய வாதாடுங்கள்.

Monday, May 24, 2010

எங்கேயோ படித்தவை

எது சந்தோசம் என்ற கேள்விக்கு பதில் புதிரானது
சந்தோஷத்தை அளவுகோல் வைத்தெல்லாம் அளந்து பார்க்காதீர்கள். இருக்கிற மகிழ்ச்சியும் போய்விடும்

ஹீரோ என்பவன் யார்? மற்ற எல்லோரையும்விட ஐந்து நிமிடம் தைரியத்துடன் தாக்குப்பிடிப்பவன்

தப்பு செய்துவிட்டீர்களா மனப்பூர்வமாக மன்னிப்பு கேளுங்கள். உர்ரென்ற முகத்துடன் நீங்கள் கேட்கும் மன்னிப்பு எதிரா ளிக்கு செய்யும் இரண்டாவது அவமானம்.

ஒரு மனிதனின் இதயத்துக்குள் நீங்கள் இடம்பெற நினைத்தால் அவன் அர்த்தமின்றி உங்களை காயப்படுத்தும் போதும் அமைதியுடன் இருந்தாக வேண்டும்.

நூறு சதவீதம் யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்கிற சமயத்தில் ஒரு மனிதன் என்ன செய்கிறானோ அதுதான் அவன் நிஜகுணம்