Friday, January 14, 2011

bogi

பரண்மேல் போட்ட சைக்கிளை கீழே இறக்குங்கள், அதை உபயோகப்படுத்துவதால் உடற்பயிற்சி செய்தது போலவும் ஆச்சி பணமும் மிச்சம்.
மாலையில் குழந்தைகளை பள்ளியிலோ வீட்டிலோ மற்ற பிள்ளைகளுடன் விளையாட சொல்லுங்கள்.
அதனால் அவர்களுக்கு மற்றவஸ்ர்களுடன் பழுகும் தன்மை விட்டு கொடுக்கும் தன்மை எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் குணம் எல்லாம் ஏற்படும்.
வயதானவர்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உபயோகமற்ற சீரியல்களை பார்பதை விட்டு குழந்தைகளை அருகில் உள்ள கோவிலுக்கோ பூங்காவுக்கோ அழைத்து செல்லுங்கள்
நல்ல காற்றை சுவசித்தர்போலவும் இருக்கும் வீட்டிலுள்ள இளம் தாய்க்கு உதவினார்போலவும் இருக்கும்.
இரவில் சப்பாத்தி சாப்பிடனும் இட்லி தோசை சாப்பிடனும் என்றெல்லாம் வயதாவர்களுக்கு கட்டாயமில்லை ரசம் சதாமும் மோர் சாதமும் அளவோடு சாப்பிட்டால் ஒன்றும் செய்யாது.
குழந்தை களுக்கு கூடியவரை பழங்கள் கொடுங்கள் பாட்டிலில் அடைத்த ஜூஸ் கொடுக்காதீர்கள்.
மதத்தில் ஒருமுறை வ்ண்டுமானால் வெளியில் அவரவர் வசதிக்கேற்ற இடத்தில் சாப்பிடுங்கள். ஆனால் வீட்டில் சுத்தமான எண்ணையில் தயாரித்த முறுக்கு தட்டை வடை போன்றவற்றை கொடுங்கள்
இரவில் கோரை பாயில்  படுங்கள் அல்லது இலவம்பஞ்சு மெத்தையில் படுங்கள்  இவை இரண்டும் தான் உடல் நலத்திற்கு நல்லது..டு

bogi

போகி பண்டிகை என்பது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பார்கள்
என் பார்வையில் புதியன கழிந்து பழையன புகவேண்டும் என்பதே.
காலையில் ஆறுமணிக்காவது படுக்கையை விட்டு எழுந்து விடவேண்டும்.
காலை உணவை நிராகரிக்ககூடாது.
தென்னிந்தியா உணவுகளான இட்லி, தோசை, பொங்கல்,உளுந்துவடை சட்னி
சாம்பார் இவையெல்லாம் சரிவிகித உணவுகள் என்று உணவு வல்லுனர்களின்
கணிப்பு. இவற்றிஎல்லாம் விட்டு விட்டு சீரியல்களும் ஓட்சும் கால் வயிறு சாப்பிட்டு ஓடுவதை தவிர்க்க வேண்டும்.
ஆங்கில பழமொழிய காலையில் சக்ரவர்த்திபோல் உண்ணவேண்டும் மதியம் ராஜா போல் உண்ண வேண்டும் இரவு பிச்சை காரனைப்போல் உண்ணவேண்டும் என்பதுதான், நம் உணவுமுறை அதற்கு நேர் மாறாகத்தான் உள்ளது.
வருடத்தில் முன்னூறு  நாட்கள்வெயிலில் காயும் தலைக்கு கொஞ்சம் எண்ணெய் தடவி
சீவினால் பார்க்கவும் அழகு ஆரோக்யமும் ஆகும்  பரண் மேல் போட்ட saiyikkalai

Wednesday, January 12, 2011

kan

கண்
கருணை பொழிவது கண்
கனல் கக்குவதும் கண்
காதல் பேசும் கண்
காமம் வீசுவதும் கண்
கண்ணின் அருமை தெரிவது
கால் மணி நேர மின் தடையின்போது
கரியாகி விடாமல் கண் தானம் தந்து
காப்பீர் இருவர் வாழ்வை

Tuesday, January 11, 2011

azhagu


மழலைக்கு சிரிப்பழகு
முளைத்து வரும்  பல்லழகு
ழு
பள்ளிபருவம் பதினான்கில் பெண்ணுக்கு
பாவாடை தாவணி அழகு
பதினா று வயதினில் ஆணுக்கு
அரும்பும் மீசை தனியழகு
முதிர்கன்னி முக த்தினிலே
காணும் அறிவு முதிர்ச்சியும் தனியழகு
நாற்பது வயது ஆணின் கம்பீர நடையழகு
முதுமைக்கு நரையழகு முதிர்ந்த வயதினிலே
கணவர் கண்ணுக்கு மனைவி அழகு
மனைவி கண்ணுக்கு கணவர் அழகு.

Monday, January 10, 2011

from vaaramalar.

வாழ்க்கை வசப்பட
பகைவர்கள் மிக நல்ல நண்பர்களாய் மாறலாம்
பழைய தொவிகளின் பாரங்கள் நீங்கலாம்
எத்தனை இழந்தாலும் இழந்த பொருளை மீட்கலாம்
என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம்
பதறாத மனம் தான் புதுமைகள் நினைக்கும்
புதுமைகள் செய்தால் செயல்கள் சிறக்கும்
செயல்கள் சிறந்தால் சாதனை பிறக்கும்
சாதனை பிறந்தால் வாழ்க்கை இனிக்கும்
சரிவுகள் தானே சரி செய்துவிடலாம்
சவால்கள்தானே சந்தித்து விடலாம்
சதிகள்தானே முறியடித்து விடலாம்
சிக்கல்கல்தானே சீர் செய்துவிடலாம்
புதிய நட்புகளை ஏற்படுத்தி கொள்ளுங்கள்
பழைய நண்பர்களை கொண்டாடுங்கள்
இரவல் வாங்குபவற்றை திரும்ப கொடுங்கள்
 நாளொன்றுக்கு மூன்று பேரையாவது பாராட்டுங்கள்.
நிரந்தரமான மகிழ்ச்சி
துணிவான முடிவுகளில் இருக்கிறது
பணிவான வார்த்தைகளில் இருக்கிறது
கனிவான அணுகுமுறையில் இருக்கிறது
பரிவான உதவிகளில் இருக்கிறது
தொல்வி வந்தால் பொறுமை அவசியம்
வெற்றி வந்தால் பணிவு அவசியம்
எதுவந்தாலும் நம்பிக்கை அவசியம்
இது என்னுடைய வேண்டுகோள்
புதுவருடத்தில் ஒரு சபதம் எடுத்துக்கொள்வோம்
தயவு செய்து , மிக்க நன்றி,மன்னித்து கொள்ளுங்கள்
இம்மூன்று வார்த்தைகளையும் அந்தந்தத ச்டந்தர்பர்த்தில் தவறாமல் பயன் படுத்துவோம்
பஸ் கண்டக்டர் ஆட்டோ டிரைவர் ஹோட்டல் சர்வர் இவர்களுக்கு ஒரு நன்றி சொல்லுங்கள்
பணம் கொடுக்கும்போது இருந்த முக மலர்சியைவிட அதிகமாக முகம் மலர்வார்கள்
அதைக்காணும் நமக்கும் அகம் மகிழும்
பெற்ற பிள்ளயிடமானாலும் ஒரு வேலை சொல்லும்போது
ப்ளீஸ் என்று போட்டு சொல்லி பாருங்கள் மறு வார்த்தையின்றி
உடனே செய்வார்கள்
நாம் செய்தது தவறு என நம் மனசாட்சி சொல்லும்போது வயது பதவி எதயும் பாராம் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புகேளுங்கள். பிறகு குற்ற உணர்வு மனதை விட்டு ஓடியே போய்விடும்

from vaaramalar.

வாழ்க்கை வசப்பட.
அழுத்தமாக கை குலுக்குங்கள்
கண்களை நேராக பார்த்து பேசுங்கள்
இயல்பாக இதமாக புன்னகையுங்கள்
அறிமுகமானவர்கள் எதிர்ப்படும்போது வணக்கம் சொல்வதில் முந்திக்கொள்ளுங்கள்.
உங்கள் பலன்களை பலப்படுத்துங்கள்
உங்கள் பலவீனங்களை பலவீனப்படுத்துங்கள்
நெஞ்சார நன்றி சொல்லுங்கள்
இயற்கையை ரசிக்க நேரம் ஒதுக்குங்கள்
எப்போதும் துணையிருக்கும் நண்பர்களுக்கு
எப்போதும் வழிகாட்டும் எழுத்துகளுக்கு
எப்போதும் சிரிக்கும் பூக்களுக்கு
எப்போதும் கைவிடாத நம்பிக்கைக்கு
நன்றி சொல்லுங்கள்

சோர்வாக இருக்கிறதா
அமைதியான இடத்திற்கு செல்லுங்கள்
உங்கள் பலங்களை எழுதுங்கள்
மாற்று வழிகளை சிந்தியுங்கள் தியானம் செய்யுங்கள்
ல்
சோதனை சூறாவளியில்
அச்சம்தான் நம் எதிரி அச்சத்தை உதறுங்கள்
உடனடியாய் என்ன செய்ய ? உள்ளுணர்வை கேளுங்கள்
அடுத்தடுத்து போராட ஆயத்தம் ஆகுங்கள்
போனதெல்லாம் போகட்டும் புதிதாக தொடங்குங்கள்

Wednesday, January 5, 2011

kalyana katcheri

கல்யாண வீட்டில் கச்சேரி செய்பவர்கள் வாங்கின காசுக்கு வஞ்சனையின்றி பாடுவார்கள். கேட்கதான் ஆள் இருக்காது, எப்போதும் நானும் என் பெண்கள் இருவரும் கச்சேரி மேடைக்கு எதிரில் உட்கார்ந்துகொள்வோம். பாடுபவர்களுக்கு அவ்வப்போது கைதட்டி உர்ச்சகபடுத்துவோம். எங்களைபர்த்து இன்னும் சில உறவினரும் வந்து எங்கள் அருகில் உட்கார்ந்து கொண்டு உற்சாக படுத்துவார்கள். ஒருமணிநேரமாவது  கேட்டு விட்டு பிறகுதான் சாபிடபோவோம்.
       ஸ்
 அதுபோல என் எழுத்துக்களை ஒன்ற்றிரண்டு பேர் படித்தாலும் படிக்காவிட்டாலும் நான் என் கருத்துக்களை எழுதுவதில் மகிழ்கிறேன்.