Wednesday, March 6, 2013

ஒருவன் ஒரு காரியத்தை செய்யும் முன் மனதில் ஓன்று தோன்றும் . பிறகு மூளை அதை மாற்றி செய்ய சொல்லும். மனம் சொல்லியதை புறக்கணித்து விட்டு மூளை சொன்னதை செய்வான். அனால் அதன் பின் விளைவு வெற்றிகரமாகவோ திருப்தியாகவோ அமையாது. அவனே தனக்குத்தானே முன்பே இப்படி நினைத்தேன் என்னவோ மாற்றி செய்து விட்டேன் என வருந்துவான், பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவன் மனசாட்சிக்கு பயந்து நேர்மையுடன் நடப்பான்.குயுக்திகள் தொன்றுவேதேல்லாம் படித்தவனுக்குதான்.
கடவுளை வணங்க வேண்டாம். தானதர்மங்கள் செய்ய வேண்டாம் மனசாட்சிப்படி நடங்கள். படுத்ததும் கவலையின்றி தூக்கம் வரும். அதை தான் வள்ளுவர் கூறினார் தன நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன நஞ்சே தன்னை சுடும் என்று.

No comments:

Post a Comment