Sunday, February 10, 2013

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.
ஒரு நாள் அவர் நண்பருடன் அவர் வீட்டு முகப்பில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு ஒரு வயதான மூதாட்டியும் ஒரு இளம் கர்ப்பிணி பெண்ணும் வந்தார்கள். அந்த பெண்ணுக்கு நிறை மாதம் என்றும் ஏ தாவது பொருள் உதவி செய்யுமாறும் கெஞ்சி கேட்டார்கள். ஐந்து நிமிடங்கள் சென்றதும் இருபது ரூபாய் தந்தார் அந்தகாலத்தில் இருபதுரூபை என்பது பெரிய தொகை. ரொம்ப மகிழ்வோடு இருவரும் வணக்கம் சொல்லி கிளம்ப இருக்கும்போது ஏனம்மா பணம் கொடுத்து விட்டேனே இடுப்பில் சுற்றியுள்ள தலையணையை அவிழ்த்துவிட்டு நிம்மதியாக போ என்றார். இரண்டு பெரும் நாடு நடுங்கி அவர் காலில் விழுந்து மன்னிப்புகேட்டு விட்டு இடுப்பில் இருந்த துநிமூரையை அவிழ்த்தார்கள். நண்பர் அ வர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தெரிந்தும் இவ்வளவு  நேரம் பேசிவிட்டு பணமும் கொடுக்கிறீர்களே என்று கேட்டார். அவர்கள் நடிப்பை கொஞ்ச நேரம் ரசித்தேன். அவர்களை பாராட்டி பரிசளிக்கவில்லை என்றால் நான் கலைஞனே அல்ல .என்றார்.

No comments:

Post a Comment