Saturday, March 9, 2013

பி ரபல சோ ராமச்வாமிக்கு சோ என்ற பெயர் எப்படி வந்தது என்று அவர் குமுதத்தில் எழுதும் தொடரில் கூறுகிறார்.
ஒரு சமயம் ராஜராஜசொழனை ப்ரமஹத்திதோஷம் பிடிக்க வந்ததாம் பயந்து கோவிலுக்குள் ஓடினாராம். வாசலில் இருந்த விநாயகர் நீ பின்வாசல் வழியா க ஓடிவிடு பிரமஹத்தி வந்தால் நான் பிடித்துவைதுகொள்கிறேன் என்றாராம் அதேபோல் பிடித்து வைத்து கொண்டாராம். அதுமுதல் அதற்க்கு சோழ பிரம்மஹதி என்று பெயர் வழங்கிற்றாம். வீட்டிலேயே மிகவும் குறும்பு சேட்டை எல்லாம் செய்யும் ராமசாம்யை அவர் அம்மா செல்ல மாக சோழ பிர மஹத்தி என்று கூப்பிட ஆரம்பித்தாராம் பிறகு எல்லோரும் சோழா சோழா என்று சுறுக்கமாக கூப்பிட்டு பிறகு அதுவும் சுருங்கி சோ என்று ஆகிவிட்டதாம் எப்படியோ என் அம்மா வைத்த பெயரால்தான் பிரபலமாகி விட்டேன் என்று பெருமைப்படுகிறார்..

எங்கேயோ படித்தவை
27 வகையான தாதுக்கள் கிடைக்கும் ஒரே மாநிலம் மத்யபிரதேசம்
யானையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 24 முறைதான் துடிக்கும் மூளைக்கைச்சளுக்கு காரணமான விலங்கு பன்றி

எங்கேயோ படித்தவை
வாழ்க்கையில் முன்னே ற்றத்தை விருபுகிரவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு போதும் இடம் கொடுக்ககூடாது
நம்பிக்கை  இல்லாவிட்டால் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது
நம்பிக்கை இருந்துவிட்டால் மலையை கூட புரட்டிவிடலாம்
எத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்  என்று யாரும் கேட்பதில்லை
ஜெயித்தீர்கலேன்பதுதான் முக்கியம் அற்ப  ஆசைகளையும் சுகங்களையும் தியாகம் செய்ய தயங்காதீர்கள் தொலை நோக்கும் லட்சிய வெறியும்தான் ஒரு சாதனையாளனுக்கு முக்கியம்
எப்போதும் தயாராக இருங்கல்வைப்புகள் எப்போது நம் கதவை தட்டும் என்பது தெரியாது 

Thursday, March 7, 2013

என்னுடைய குழந்தைகள் எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
இன்று காலை suntv  ல்  ஒருவர் மகளிர தின பேச்சாளர் பேசினார். பெயர் கவனிக்க தவறிவிட்டேன்.
 ஆன் களும் பெண்களும் சமம் என்று இன்றைய சமுதாயத்தில் பேசினாலும் ஆண்களுக்கு சமமாக பெண்கள் எல்லாத்துறையிலும் முன்னேறி சாதனைகள் படைத்தாலும் உடலளவிலும் உள்ளத்தாலும் மிகவும் மாறுபட்டு இருக்கிறார்கள் என்பதை மிக அழகாக விளக்கினார்.
ஆதி கால மனிதன்  குழுவுடன் சேர்ந்தது வேட்டைக்கு போய் ய் உணவு சே கரித்து வருவான் பெண் இல்லத்தில் இருந்து குழந்தைகளையும் முதியோரையும் கவனித்து கொண்டு அருகில் கிடைக்கும் பழங்கள் கிழங்குங்களை சேகரித்து வர்களுக்கு உன்ன உண்ண  கொடுப்பாள். அதற்கேற்றவாறு ஆணின்  கண் பார்வை தொலைவில் உள்ள பொருட்களை கூர்ந்து கவனிக்கு மேயன்றி அருகில்  உள்ள பொருட்களை உன்னிப்பாக கவன்க்கும் திறன் கிடையாது  அதனால்  தான் இன்றும் ஆண்  மேசை மீது உள்ள உள்ள ஒரு பொருளை சட்டென்று எடுக்காமலும் ப்ரிஜ்ல் ஒரு பொருளை தேடிக்கொண்டும் மனைவியிடம் திட்டு  வாங்குகிறான்.பெண் ஆதியிலிருந்தே பென்  வேளையில்  ஈடுபட்டிருந்தாலும் குழந்தை மீது ஒரு கண் வைத்திருப்பாள்  அதே போல் கேட்கும் திறனும் ஆணுக்கு இரண்டு காதுகளும் ஒரே நேரம் துல்லியமாக கேட்காது. பெண் ஒரு வேளையில் ஈடு பட டுக்கொண்டே மறு வேலையை எளிதாக செய்கிறாள். பாட்டு  கேட்டுகொண்டே சமையல் செய்கிறாள் டிவி பார்த்துக்கொண்டே பூ தொடுக்கிறாள். அனால் ஆண்  டிவி ஓசையை  குறைத்தாலன்றி எதையும் செய்ய தடுமாறுவான்
இதையெல்லாம் நான் சொல்லவில்லை பேச்சாளர் சொன்னார்.
 அதனால் பெண்களை குறைத்து மதிபிடாதீர்கள்
ஒரு பெண்கணவனை இழந்து விட்டால் வருவாய் தனக்கு தெரிந்த கூலிவேலை புல் அறுப்பது நாற்று நடுவது போன்ற வேலையோ படித்த பெண் உத்தியோகம் பார்த்தோ பிள்ளைகளை சமாளித்து வளர்துவிடுவாள். ஆ னால் ஒரு மனைவி தவறிவிட்டால் அந்த ஆன் பிள்ளைகளை வளர்க்க பெரும் பாடு படுகிறான்.
உலகளவில் இதயபாதிப்புக்குள்ளவதும் ஆண்களே. என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆணுக்கு தோல்வியை இழப்பை தாங்கும் மன வலிவு இல்லை. ராமனைப்பிரிந்த தசரதன் தான் உயிர் விட்டார்  கணவனை இழந்த பெண்டிர் ஜீஜபை இந்த்ரகந்தி போன்றவர்கள் மனவளிவுடன் இருந்து தங்கள் மக்களை நன்கு வளர்த்தார்கள்.
ஆகையால் பெண்களே நாம் உடலளவில் வலிமைகுரைந்தவராக இருந்தாலும் உள்ளத்தில் வலிவோடு இருந்து வாழ்வில் ஏற்படும் மேடு பள்ளங்களை எளிதாக கடந்து வாழ்வில் முன்னேற வாழ்த்துகிறேன்  பெண்


Wednesday, March 6, 2013

ஒருவன் ஒரு காரியத்தை செய்யும் முன் மனதில் ஓன்று தோன்றும் . பிறகு மூளை அதை மாற்றி செய்ய சொல்லும். மனம் சொல்லியதை புறக்கணித்து விட்டு மூளை சொன்னதை செய்வான். அனால் அதன் பின் விளைவு வெற்றிகரமாகவோ திருப்தியாகவோ அமையாது. அவனே தனக்குத்தானே முன்பே இப்படி நினைத்தேன் என்னவோ மாற்றி செய்து விட்டேன் என வருந்துவான், பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவன் மனசாட்சிக்கு பயந்து நேர்மையுடன் நடப்பான்.குயுக்திகள் தொன்றுவேதேல்லாம் படித்தவனுக்குதான்.
கடவுளை வணங்க வேண்டாம். தானதர்மங்கள் செய்ய வேண்டாம் மனசாட்சிப்படி நடங்கள். படுத்ததும் கவலையின்றி தூக்கம் வரும். அதை தான் வள்ளுவர் கூறினார் தன நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன நஞ்சே தன்னை சுடும் என்று.

பிள்ளைகளுக்கு தேர்வு நெருங்கும் நேரம். சில குழந்தைகள் நன்றாக படித்திருந்தாலும் தேர்வைப்பற்றி பயத்துடனே பேசுவார்கள்.
அவர்கள் பயத்தை போக்க அவர்கள் விழித்திருக்கும் போது  எவ்வளவு சொன்னாலும் மன தில் பதியாது. ஆகையால் அவர்கள் தூங்கியவுடன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு கையை பிடித்துகொண்டோ தலையை லேசாக வருடிய வரோ உங்கள் எண்ணங்களை கூறுங்கள். காட்டாயம் அது மனதில் பதியும். கிருஷணர் சுபத்திரை வயிற்றில் அபிமன்யு இருந்தபோது தன சக்ரவியுகம் அமைக்கும் முறையை சொல்லிக்கொண்டே வந்தாராம். பாதி தூக்கத்தில் சுபத்திரை   எழுந்துவிட்டதால் வியுகத்திளிருந்து வெளிவர சொல் லிகொடுக்க சூழ்நிலை உருவாகாததால்தான் அபிமன்யு தோல்வியை தழுவினாராம்பிரகலாதன் தாய் சிறந்த விஷ்ணு  பக்தி அதனால் தான் பிறக்கும்போதே விஷ்ணு பக்தனாக பிறந்தான் தூங்கும்போதும் உள்மனம் விழித்திருக்குமாம்
பிள்ளைகள் என்று இல்லை எந்த வயதினருக்கும்நோயால் வாடுபவர்களுக்கும் பணியில் சொர்வுற்றிருப்பவர்களும் நாம் சொல்லும் தைரிய வார்த்தைகள் நன்கு மனதில் பதிந்துநல்ல பலனை கொடுக்கும்  தூங்கும் போது அவர்கள் கையை பற்றிக்கொண்டோ தலையை வருகொண்டோ தைரியம் சொன்னால் நல்ல பலன் கிடைக்கும் 

Tuesday, March 5, 2013

தினமலரிலிருந்து  கொல்லம் மாவட்டம் சாசதாம் கோட்டை என்ற சிற்றூரில் நியாவில கடை விற்பனையாளர் மநு  என்னும் வாலிபர் வாயில் குண்டூசியை வைத்தபடி நண்பருடன் சிரித்து பேசிய பொது குண்டூசியை விழுங்கிவிட்டார்  வழியால் துடித்தார்.  உள்ளூர் மருத்துவமனை சிகிச்சை பெற முடியாமல் கொல்லம் மர்டுத்துவ மனைக்கு சென்றார். அங்கு xray  எடுத்து பார்த்ததில் இரைப்பையில் குண்டூசி குத்தி நிற்பதால் அறுவை சிகிச்சை திருவனந்தபுரம் சென்றால் தான் முடியும் என்றார்கள். அன்று இரவே பெற்றோர் அழைத்து சென்றார்கள்.
மறுநாள் காலை 6 மணிக்கு அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்தபோது தந்தையிடம் குடிக்க தண்ணீர் கேட்டார்.  மருத்துவரை கேட்டு கொண்டு தேநீர் வங்கி கொடுத்தார். சற்று நேரத்தில் பலத்த சத்தத்துடன் இருமினார். வயிற்றிலிருந்த குண்டூசி வெளியே வந்து விழுந்தது. பெற்றோர் மற்றும் டாக்டர்கள் நண்பர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மனு கண்ணீர்மல்க இறைவனுக்கு நன்றி கூறினார். இதுவல்லவோ தெய்வச்செயல்