Tuesday, October 12, 2010

New Jersy Trip

எடிசன் இல்லத்தில் எல்லா வசதிகளும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை பார்க்க
அதிசயமாக இருந்தது. டைனிங் ஹாலில் அவர்கள் விருந்துகளுக்கு உபயோகித்த விலையுயர்ந்த பீங்கான் தட்டுகளும்  குவளைகளும் புதிதுபோல் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.
தற்போது அரசாங்கம் பராமரித்து வருகிறது. முதலில் எடிசன் கல்லறை  வேறு எங்கோ இருந்ததாம். நாற்பத்து நான்கு வருடங்கள் ஆதர்ச தம்பதிகளாக வாழ்ந்தும் எடிசன் மறைவுக்கு பிறகு எடிசன் மனைவி  ஒருவரை வாழ்க்கை துணையாக ஏற்று சில காலம் வாழ்ந்தாராம். அதுதான் அமெரிக்க கலாசாரம். நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் அவருடைய கடைசி விருப்பத்தின்படி இருவர் கல்லறையும் அருகருகே அமையக்கவேண்டி எங்கயோ இருந்த எடிசன் உடலை மறுபடி இந்த தோட்டத்துக்கு கொண்டு வந்து அருகருகே கல்லறை அமைத்து உள்ளார்கள்.
   மறுநாள் உள்ளூர் பெருமாள் கோவிலுக்கு சென்றோம். உள்ளூர் என்றுதான் பெயர். 25 மைலுக்கு அப்பால் உள்ளது. அழகான கோவில், திருப்பதி பெருமாள் தாயார் போன்ற தோற்றம்  அங்கு பக்கத்தில் உள்ள ஹோட்டலில் தோசையும் காபியும் சாப்பிட்டோம். அருமையாக இருந்தது. சென்னையை நினைவூட்டியது.
மறுநாள் காலை மழை இல்லாவிட்டால் லிபர்ட்டி சிலை பார்க்க போகலாம் என திட்டம். லேசாக தூறிக்கொண்டு  இருந்தது. இளங்கோவிற்கு  தள்ளிப்போட இஷ்டம் இல்லை. ஏழரை மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டோம் ஒன்பது மணிக்கு போய் சேர்ந்தோம் அருகில் போனால் தான் சிலையின் பிரும்மாண்டம் புரிகிறது. 354 படிகள். படிவழியாக  ஏறி தலை உச்சிவரை போக விரும்புபவர்கள் ஒரு க்யு, சிலையின் பீடம் வரை போய் திரும்ப லிப்டுக்கு ஒரு க்யு, நான் நிதின்   வைத்துகொண்டு கீழேயே உட்கார்ந்து விட்டேன். பீடம் வரை அகல படிகள் மொத்தம் 192. சிலை உச்சிவரை லைட் ஹவுஸ் போல் சுழல் படிகள். எல்லோரும் பார்த்துவிட்டு பதினொன்றரை மணிக்கு திரும்பினார்கள். பிறகு நானும் அவரும் இளங்கோவும் லிப்ட் மூலம் பீடம் வரை போனோம். சிலையின் பீடத்தில் நின்று உச்சியை பார்த்தால் மேகத்தில் தலை இடித்திருப்பது போல் பிரம்மை. மேகம் ஓடும்போது சிலை ஆடுவதுபோல் பயங்கர உணர்வு. என்ன ஒரு அற்புதம். இதையெல்லாம் பார்க்க எங்களுக்கு பூர்வ ஜென்ம கொடுப்பினை என்று கட வுளுக்கு நன்றி சொல்கிறேன்.

No comments:

Post a Comment