Sunday, April 21, 2013

சேவை கைம்மாறு  கருதாத  தாக  இருக்க வேண்டும். செய்த சேவையை வெளிப்படுத்துவதும் அதற்காக பாராட்டை எதிர்பார்ப்பதும் கூடாது  சாய் பாபா.
 ஆ னால் பெற்ற உதவிக்கு உடனே நன்றி சொல்வது மனிதனுடைய தலையாய கடமை அதையும் மறக்க கூடாது. பங்கஜம்
பற்றில்லாத வாழ்க்கையில் தான் திருப்தி இருக்கிறது. சாய் பாபா
எதிர்பார்ப்புகள் குறைய குறைய எஏ மாற்றங்களும் குறையும்.பங்கஜம்
மனித நேயம் நல்லொழுக்கம் கருணை ஆகிய குணங்கள் மனிதனுக்கு அவசியம். இவற்றை  க்கற்றுத்தராத கல்வியால் ஒரு பயனும் இல்லை. சாய் பாபா.
இதைதான் வள்ளுவர்  உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பல கற்றும் கள்ளன் அறிவிலாதான் என்று கூறி உள்ளார்.
ஔவையார் முதல் வரியில் ஏற்பது இகழ்ச்சி என கூறி விட்டு அடுத்த வரியில் ஐயமிட்டு உன் அன்று கூறி உள்ளாரே இது என்ன முரண்பட்டு என எண்ணிக்கொள்வேன்.
நானே மறுபடி மிக அதிக தேவை என்றாலோழிய ஏற்பது இகழ்ச்சி என கொள்ளவேண்டும்.
வசதி படைத்தவன் ஐயமிட்டு உன் பசியோருவனுக்கு உணவிட்டுதான் அவன் சாப்பிடவேண்டும் என்ற பொருள் கொள்ளவேண்டும் என எண்ணிக்கொள்வேன் சரிதானே பங்கஜம்
தயவுசெய்து , நன்றி, மன்னிக்கவும் என்ற மூன்று வார்த்தைகளை அவ்வபோது பயன் படுத்தினால் நம்மை சுற்றி நிறைய நண்பர்கள் இருப்பார்கள். 

No comments:

Post a Comment